அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 7 February 2013

என்றும் உங்கள் நினைவில்!



ரபிய்யுல் அவ்வல் மாதம் முடிவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் நாம் இந்த வெள்ளி அரங்கிலே  சந்திக்கின்றோம். கடந்த காலங்களில் பெருமானாரின் வாழ்வியல் மக்களின் செயல்பாடுகளில் பிரதிபளிக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் மீலாது விழாக்கள் கொண்டாடப்பட்டதை நாம் அறிவோம். போனின் சார்ஜ் குறைகின்ற போது அதனை சரி செய்ய மீண்டும் சார்ஜ் ஏற்றுவது போன்று நம் ஈமானிய பலம் குன்றுகிறபோது அதனை வலிமைபெறச் செய்யவே மீலாது விழாக்களும் கொண்டாடப்பட்டன, கொண்டாடப்படுகின்றன. அத்தகைய ஈமான் என்றும் குறைவின்றி நிறைவாக காட்சி தரவேண்டுமென்றால் என்றும் பெருமானாரின் நினைவு நம் நெஞ்சங்களில் நீங்காமல் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பெருமானாரை இகழ வேண்டுமென்று ஒருவன் சித்திரம் வரைகின்றபோதும், பெருமானாரைப் பற்றி பேசப்படுகின்றபோது மட்டும் நம் இரத்தநாளங்கள் துடிப்பதும், போர்கொடிகள் ஏந்துவதும், பெருமானாரின் நினைவில் கண்ணீர் சிந்துவதும் பெருமானார் மீதுள்ள உண்மையான நேசத்திற்கோ, நீங்காத நினைவிற்கோ அடையாளமல்ல. மாறாக என்றுமே நம் நெஞ்சங்களில் பெருமானாரை நினைத்துக் கொண்டிருப்பதும், நம் செயல்முறைகளை அவர்களது வழிமுறைகளாக மாற்றிக் கொள்வதே ஆகும். சஹாபா பெருமக்கள் பெருமானாரின் வாழ்க்கையை பிசறாமல் பின்பற்றுவதற்கு காரணமாக இருந்த்தே பெருமானாரின் நினைவுகள் அவர்களின் உள்ளங்களில் துடித்துக் கொண்டே இருந்ததே ஆகும். பெருமானார் இவ்வுலகை விட்டும் மறைந்த பிறகு ஒரிருநாள் நீழிக்கண்ணீர் வடித்துவிட்டு பிறகு தங்களது வியாபாரத்தை பெருக்குவதையும் குடும்பத்தை கவனிப்பதையுமே பிழைப்பாக கொண்டவர்கள் அல்ல உத்தம சஹாபிகள். பெருமானாரை எந்த நாள் மறுமையில் சந்திப்போம் என்பதையே குறிக்கோளாக் கொண்டிருந்த இலட்சியபுருஷர்கள்தான் சத்திய சஹாபாக்கள்.
பெருமானாரின் சந்திப்பிற்காக இறப்பை எதிர்பார்த்திருந்த மூதாட்டி
عن زيد بن أسلم قال : خرج عمر بن الخطاب ليلة يحرس فرأى مصباحا في بيت فدنا فإذا عجوز تطرق شعرا لها لتغزله أي تنفشه بقدح وهي تقول :
 على محمد صلاة الابرار * صلى عليك المصطفون الاخيار قد كنت قواما بكى الاسحار * ياليت شعري والمنايا أطوار هل تجمعني وحبيبي الدار تعني النبي صلى الله عليه وسلم ، فجلس عمر يبكي ، فما زال يبكي حتى قرع الباب عليها ، فقالت : من هذا ؟ قال : عمر بن الخطاب ، قالت : ما لي ولعمر ؟
 وما يأتي بعمر هذه الساعة ؟ قال : افتحي رحمك الله ! فلا بأس عليك ، ففتحت له فدخل فقال : ردي علي الكلمات التي قلت آنفا ، فردتها عليه ، فملا بلغت آخرها قال : أسألك أن تدخليني معكما ، قالت : وعمر فاغفر له يا غفار فرضى ورجع
(ابن المبارك )( كنز العمال)
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் ரோந்து வந்துக்கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி பெருமானாரின் நினைவில் அண்ணலாரை புகழ்ந்தும், எபொழுது பெருமானாரை மறுமையில் சந்திக்கப்போகிறோம் என்று ஏக்கத்தோடு கூறியதை கேட்ட உமர் ரலி அவர்கள் அழுதவாறு அங்கு அமர்ந்துவிட்டனர். பிறகு அப்பெண்மனியின் வீட்டின் கதவைத் தட்டி தான் யார் என்பதைக் கூறி கதவை திறக்கச் செய்தனர். கதவை திறந்தவுடன் உமர் அவர்கள் கூறிய வார்த்தை என்னையும் உன்னுடன் அக்கவிதையுல் சேர்த்துக்கொள். பெருமானாரை மறுமையில் எப்பொழுது போய் சந்திப்போம் என்ற தன்னுடைய ஏக்கத்தை உமர் அவர்கள் வெளிப்படுத்திக்காட்டியது சஹாபாக்கள் பெருமானாரை தங்களது நினைவில் நீங்காமல் நிலைக்கச் செய்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஆழமான காதலினால் பார்த்து பார்த்து அழுவது
قال: أخبرنا مسلم بن إبراهيم قال: حدثنا المثنى بن سعيد الذراع قال: سمعت أنس بن مالك يقول ما من ليلة إلا وأنا أرى فيها حبيبي ثم يبكي.
(الطبقات الكبري لابن سعد)
ஹழ்ரத் அன்ஸு ரலி அவர்கள் பெருமானாரின் மறைவிற்கு பிறகும் அவர்கள் மீது கொண்ட ஆழமான காதலினால் ஒவ்வொரு இரவிலும் பெருமானாரை பார்த்துவிட்டு அழுபவராக ஆகியிருந்தார்கள்.


பெருமானாரை பார்த்த கண்ணைக் கொண்டு வேறெதையும் பார்க்க விரும்பாத சஹாபி
قال عبد الله بن زيد اللهم اذهب بصري حتي لاادري بعد حبيبي محمدا احدا
(زرقاني , شرح مواهب اللدنية)

பெருமானாரின் இறப்புச் செய்தியை ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜைது ரலி அவர்கள் கேள்வியுற்றபோது யாஅல்லாஹ் என்னுடைய பார்வையை நீக்கிவிடு என்று பிராத்தனை செய்தனர் பிறகு அல்லாஹ் அவர்களின் துஆவை அல்லாஹ் கபூல் ஆக்கினான்.

عن علي بن زيد عن القاسم بن محمد أن رجلاً مِن أصحاب مُحمد ذَهب بَصرهُ فَعادُوه فَقال: كُنتُ أَريدُهُما لأنظُر إلى النبيِ صلى الله عليه وسلم فَأمَّا إِذ قُبضَ النبيُ صلى الله عليه وسلم فَوالله مَا يَسرُنِي أنَّ مَا بِهمَا بظبيٍ مِن ظِباء تِبَالة  (الادب المفرد)


இவ்வாறு சஹாபாக்கள் பெருமானாரின் இறப்பின் வலியை தாங்க முடியாமல் வேதனையின் வளிம்பிற்கே சென்றனர். பெருமானார் இவ்வுலகை விட்டும் மறைந்திருந்தாலும் அவர்கள் தன்னுடைய அருமைத் தோழர்களின் நினைவுகளால் இவ்வுலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஏன் இன்னமும் ஒவ்வொரு முஃமினின் நினைவுகளிலும் பெருமானார் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவ்வளவு அன்பும், பாசமும், பிரிவின் வேதனையை தாங்கிக் கொள்ள இயலாத அந்த உத்தமர்களை பார்த்து இன்றைக்கு வஹ்ஹாபியர்கள் கூறக்கூடிய அபத்தமான உளரல் சஹாபாக்கள் பெருமானாரின் வபாத்தை எதிர்பார்த்திருந்தார்கள் என்றாகும். அதற்கு அந்த வஹ்ஹாபியன் பயன்படுத்தக்கூடிய வார்த்தை அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்  என்பதாகும். எவ்வளவு தான் சந்தனத்தின் மீது சேற்றை வாரி இறைத்தாலும் சந்தனம் வாசமாகத்தான் இருக்கும் சேற்றை இறைத்தவனிடமே நாற்றம் வரும். சந்தனத்தை போன்றவர்கள் சஹாபாக்கள் அவர்கள் மீது எவ்வளவு பெரிய அபான்டமான குற்றசாட்டுகளை தூக்கி எறிந்தாலும் சேதாரம் அருமைத் தோழர்களுக்கு அல்ல தூக்கி எறிந்தவனுக்கே. சஹாபாக்கள் தங்களது பெருமானாரின் ஒவ்வொரு அசைவுகளையும் இரசித்து ருசித்து வாழ்ந்தவர்கள், தங்களது வாழ்க்கையை அல்லாஹ் ரஸுலுக்காக அற்பனித்தவர்கள், தாஹா நபியையே தங்களது நினைவுகளாக கொண்டவர்கள். எனவே தான் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் என்ற சர்ட்விகேட்டை பெற்றனர். அத்தகைய பாக்கியத்தை நாம் பெறவேண்டுமென்றால் பெருமானாரின் நினைவுகள் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வரவேண்டும். அவ்வாறு வந்துவிட்டால் அந்த நினைவுகளே நம்மை நன்மையைக் கொண்டும் ஏவுகின் கருவியாகவும், தீமையை விட்டும் தடுக்கின்ற கேடையமாகவும் மாறும் என்பதை நம் நினைவில் கொண்டு என்றுமே அண்ணலின் நினைவில் இருந்திட அல்லாஹ் அருள்புரிவானாக.

1 comment:

Anonymous said...

"என்றும் உங்கள் நினைவில்" என்று தலைப்பு கொடுத்துருக்கலாமே?