அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 14 December 2017

வரலாறு பேசும் இறைஇல்லங்கள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ


(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.  (

அல்லாஹ்வை வணங்குவதற்கென இவ்வுலகில்  முதன்முதலாக அமைக்கப்பட்ட இறை இல்லம் பக்கா என்னும் மக்காவில் அமைந்துள்ள கபத்துல்லாஹ் தான் என்று அல்குரஆன் சான்று பகர்ந்ததையொட்டி பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்து அதுவே உண்மை எனவும் நிரூபணம் செய்துள்ளனர்.    


முதல் ஆலயம் : 

அல்லாஹ் கூறுகிறான், ”மனிதர் கள் (அல்லாஹ்வை வணங்குவதற்கு) அமைக்கப்பட்ட முதல் வீடு ‘பக்கா’ (மக் கா)வில் உள்ளது தான். அது பரகத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கிறது.”
(அல்குர்ஆன் 3:96)

‘கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம்(அலை) அவர்களாவார்கள். அதை புணர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம்(அலை) ஆவார்கள். ஆதம்(அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டினார்கள். பிறகு 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ”மஸ்ஜிதுல் அக்ஸா”வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. அபூதர்(ரலி) அறிவிக்கிறார்கள்:

3366- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ ، حَدَّثَنَا الأَعْمَشُ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ ، عَنْ أَبِيهِ ، قَالَ : سَمِعْتُ أَبَا ذَرٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

قُلْتُ يَا رَسُولَ اللهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ ، قَالَ : قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ الْمَسْجِدُ الأَقْصَى قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ فَإِنَّ الْفَضْلَ فِيهِ

”நான் நபி(ஸல்) அவர்களிடம் பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். ‘அல் மஸ்ஜி துல் அக்ஸா’ என்று கூறினார்கள். இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?) என்று கேட்டேன். நாற்பது வருடங்கள் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (3366)

அவற்றை தாண்டி இன்னும் பல்வேறு அத்தாட்சிகள் இஸ்லாமிய சின்னங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் வீற்றிருக்கிறது. 

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகள் அவற்றை அழித்தொழித்து இஸ்லாமிய மார்க்கத்தின் அடித்தளத்தை  பிடுங்கி எரிந்து தந்து பொய்யான கொள்கைகளை நிலைநாட்டி விடலாம் என்ற நோக்கில் பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். 

يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைபடுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை. (அல்குர்ஆன்: 9:32)

ஆனால் நிச்சயம் அவர்களால் அவற்றை ஒரு போதும் அளித்து விட அல்லாஹ் விட மாட்டான் என்பது அவர்களின் அறிவு ஒருபோதும் உணர்ந்துகொள்ளது. 

பள்ளிவாசல் என்றல் என்ன ? 


பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களதுவணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளிஎன்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.

முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.

அல்லாஹ்விற்கு விருப்பமான இடம் : 

 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلاَدِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا ‏"‏ ‏.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல் : முஸ்லிம் ( 1190 )


விளக்கம் :

உலகில் உள்ள இடங்களில் மன அமைதி தரும் இடம் இறையில்லங்களாகும். படைத்தவனை நினைப்பதற்கும் , அவனது வேதத்தை ஓதுவதற்கும், தொழுவதற்கும் உருவாக்கப்பட்ட இந்த இறையில்லங்கள் தான் இறைவனுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அந்த இடத்திற்கு அவனை வணங்குவதற்காக வரும் போது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடம் மதிப்பு உயர்வதுடன் பாவங்களும் அழிக்கப்படுகின்றன.

எனவே அதிகமதிகம் இறையில்லங்களுக்குச் சென்று வருபவர்களாகவும் அங்கு சென்று தொழுபவர்களாகவும், திக்ர் மற்றும் திருக்குர் ஆனை ஓதுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

உலகின் பழமையான இறைஇல்லங்கள்  :

வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்து உலகில் உள்ள பழமையான இறையில்லங்களை பாட்டியலிட்டுள்ளனர். அவற்றில்  கஃபதுல்லாவிற்கு அடுத்ததாக பைத்துல் முகத்தஸ் என்னும் இறையில்லம் தான் மிக பழமையானது. 


இந்திய வரலாற்றில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் கொடுங்கல்லூரில் சேரமான் பெருமாள் உதவியுடன் கட்டப்பட்ட சேரமான் பள்ளி தான் முதல் தொழுகை பள்ளிவாசல். தமிழ்நாட்டில் முதல் தொழுகை பள்ளிவாசல் காயல்பட்டினத்தில் கோசுமறை என்ற இடத்தில் கட்டப்பட்டு புதைந்து போனது. தேனி மாவட்டத்தில் பழமையான பள்ளிவாசல் கம்பம் வாவேர் பள்ளிவாசல். இன்றும் அப்பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் 1880 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கல்லறை ஒன்று உள்ளது.

அரபு மொழியில் ‘மஸ்ஜிது’ என்று அழைக்கப்படும் இறை இல்லங்களை தமிழ் மொழியில் ‘பள்ளிவாசல்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் ‘மஸ்ஜிது’ என்பதற்கு பள்ளிவாசல் என்ற நேரடிப் பொருள் இல்லை. மஸ்ஜிது என்றால் தலைவணங்கும் இடம் என்றே பொருள். தமிழ்நாட்டில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வழிபாட்டு தலங்களைப் ‘பள்ளிகள்’ என்று அழைத்தனர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்ப கால கட்டத்தில் கட்டப்பட்ட பள்ளிகள் ‘மாலிக் தீனார் பள்ளிகள்’ என்றே அழைக்கப்பட்டது. தேங்காய்பட்டினம், குளச்சல், திருவிதாங்கோடு, கோட்டாறு, குளச்சல் ஆகிய இடங்களில் இன்றும் இப்பள்ளிகள் உள்ளன.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஹைதர் அலியின் ஆட்சி காலத்தில் திண்டுக்கல், பெரியகுளம், உத்தமபாளையம் போன்ற இடங்களில் அரசின் உதவியுடன் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இவ்வாறு அரசின் மானியத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் முகமது நைனார், நைனார் முகமது, நைனார் ஷா என்று அழைக்கப்பட்டது. தேனி மாவட்டம் க.புதுப்பட்டியில் காட்டு நைனார் என்ற பள்ளிவாசலும், கும்பக்கரை அருவி செல்கின்ற வழியில் காட்டு நைனார் தர்ஹாவும் இன்றளவும் உள்ளது.

இதே போல முஸ்லிம்கள் வசூல் செய்து சொந்த முயற்சியில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் ‘முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்கின்ற வழியில் ‘முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்’ உள்ளது.

பைத்துல் முகத்தஸ் :


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.


அல்குர் ஆனின் 17வது அத்தியாயமான அல் இஸ்ரா நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம் பெற்ற விண்ணுலக யாத்திரை பற்றிப் பிரஸ்தாபிக்கும்போது இந்த மஸ்ஜிதின் பெயரைச் சுட்டிச் செல்வதைக் காணலாம். விண்யாத்திரை பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுவது போன்று அல்குர் ஆன் குறிப்பிடவில்லை. மிஃராகஜ் இடம்பெறுவதற்குச் சற்று முன்னர் புனித கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு வருகை தந்த இந்த நிகழ்வையே அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வசனம் பிரஸ்தாபிக்கும் பைதுல் மக்திஸ் எனும் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த  இந்த மஸ்ஜித் தெய்வீகப்படுத்தலுக்கு உட்பட்ட முக்கிய தலங்களுள் ஒன்றாகும்.  அல்குர் ஆன் இத்தலத்தை மட்டுமன்றி அது அமையப் பெற்றிருக்கும் பலஸ்தீனப் பூமியையும் இறையருள் பெற்றதாகும் எனச் சிலாகித்துக்  கூறுவது நோக்கத்தக்கது.


سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ 

 என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:1)



மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக ஆக்கினோம் என்பதனை இவ்வசனத்தில் மட்டுமன்றி அல்-மாஇதா, அல்-அன்பியா முதலாம் ஸூராக்களிலும் அல்லாஹ் குறிப்பிடுவதக் காணலாம்.
(அல்-மாஇதா)
(அல்-அன்பியா)

இந்த அல்குர் ஆன் வசனங்களில் புனித் பூமியென்றும் அருள்பாலிக்கப்பட்ட பூமியென்றும் அடைமொழிகளிட்டு முக்கியத்துவப்படுத்தப்படுவது பலஸ்தீனப் பூமியையே ஆகும் என்பதைத் தப்ஸீர் துறை அறிஞர்களின் விளக்கங்களில் இருந்தும் கண்டுகொள்ளலாம்.

எனவே ஒரு முஃமினின் உள்ளத்தில் புனித மக்காவும் அதிலமைந்துள்ள க்ஃபா, மஸ்ஜிதுன் நபவி என்பன எத்தகைய உயர்ந்த இடத்தையும் கண்ணியத்தையும் பெறுகின்றனவோ அதே ஈமானிய, அகீதா ரீதியான நேசிப்பையும் கண்ணியத்தையும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அது அமைந்திருக்கும் பலஸ்தீனப் பூமியும் பெற்றிருக்க வேண்டுமென்பதை இவ்வசனங்கள் உணர்த்துகின்றன எனலாம்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைதுல் மக்திஸை நோக்கியே தொழுது வந்தார்கள் என்று ஸஹீஹான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. மட்டுமன்றி பின்வரும் ஹதீஸ்களும் இதன் முகியத்துவத்தை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

"நீங்கள் மூன்று மஸ்ஜித்களைத் தவிர வேறு எதற்கும் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். அவை மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா" (புகாரீ)

"எனது சமூகத்தில் ஒரு குழுவினர் திமிஷ்க் மற்றும் பைதுல் மக்திஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மறுமை நாள் தோன்றும் வரையில் போராடிக்கொண்டிருப்பார்கள்; சத்திய மார்க்கத்தைச் சார்ந்து நின்று (மற்றெல்லா கொள்கை, கோட்பாடுகளையும் ) மிகைத்த நிலையில் காணப்படுகின்ற அந்தக் குழுவினருக்கு துரோகம் இழைக்கின்றவர்களினால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படப் போவதில்லை." (முஸ்னத் அஹ்மத்/ மஜ்மஉஸ் ஸவாயித்)

"இறுதிக் காலத்தில் ஹழ்ரமௌத் பகுதியிலிருந்து வந்த மக்களை ஒன்றுகூட்டக்கூடியதொரு நெருப்பு தோன்றும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?" என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு, நபியவர்கள் "நீங்கள் ஷாம் தேசத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி)

ஆரம்ப காலம் முதல்  பைது முகத்தஸ் மஸ்ஜித் அமைந்துள்ள ஜெரூஸலம் நகர் "ஸலேம்" என்றே அழைக்க்ப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்து வந்த "கனாஅனைட்"  எனும் பிரிவினர் பலஸ்தீனர்களின் மூதாதையராவர். இவர்களில் தொன்றிய நேர்மை மிக்க அரசனொருவன், அதுவரை ஸலேம் என்ற பெயரில் இருந்த கிராமத்தை ஒரு நகராக்கி அங்கு ஒரு தேவாலயத்தையும் நிறுவி அந் நகருக்கு ஜெரூஸலம் எனவும் பெய்ரிட்டான். கி.மு. 1800களில் வாழ்ந்த இந்த அரசன் "மெல்ஸிஸேடக்" (MELCISEDAK) எனும் பெயர் கொண்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமகாலத்தவராவான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகர் கி.மு. 1600 முதல் 1300 வரை எகிப்து நாட்டின் ஆதிக்க்த்தின் கீழ் இருந்தது. இக்காலப் பிரிவில் இந்நகர் "ஹீப்ரு" எனும் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளானது. இப்பிரிவினர்தான் யூதர்களின் மூதாதையர்களாகவும் கருதப்படுகின்றவர்களாவர்.

காலவோட்டத்தில் கனானைட்டுக்களதும் எகிப்தியர்களதும் பண்பாட்டுச் சீர்கேடுகளால் அவர்கல் வீழ்ச்சி கண்ட போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஹீப்ரூக்கள் பல்ஸ்தீனில் (கன்ஆன்) தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டனர். இக்காலகட்டத்தில் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஹீப்ரூக்கள் மத்தியில் மூஸா எனும் எனும் பெயர் கொண்ட ஒரு ப்ரும் தலைவர் தோற்றம் பெற்றார். இறைத் தூதராக வருகை தந்த  நபி மூஸா (அலை) ஹீப்ரூக்களை எகிப்திலிருந்து வெளியேற்றி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து அவர்களது சகோதரர் ஹரூன் (அலை) ஹீப்ரூக்களை கன் ஆனுக்கு அழைத்துச் சென்றார்.  அங்கு முன்பே வாழ்ந்து வந்த ஹீப்ரூ இனத்தாருடன் இவர்களும் இணைந்து அப்பிரதேசத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வரலாயியினர்.

இதற்குப் பின்னரும் யூதர்கள் இப்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனராயினும் அவர்கள் தமக்குள்ளே பல பிரிவுகளாகப் பிரிந்து ஒழுக்கச் சீர்கேட்டோடு வாழ்ந்த போதெல்லாம் அவர்களைச் சீர்திருத்தவென அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் அவர்களிடையே தோன்றினர். இவ்வாறு தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் மிகப் பெரும் அரசர்களாகத் தோற்றம் பெற்ற நபி தாவூத் (அலை) ஆவர்களும் அவர்களது புத்திரர் நபி ஸுலைமாஅன் அவர்களும் குறிப்பிடத்டக்கவர்களாவர். நபி தாவூதின் ஆட்சியில்தான் ஹீப்ரூக்களுக்கு கன் ஆனில் முதன்முதலாக உறுதி மிக்கதோர் ஆட்சியை நிறுவ முடிந்தது.  மட்டுமன்றி இக்காலப் பிரிவில்தான் (கி.மு. 1000) ஜெரூஸலம் நகரும் முதல் தடவையாக ஹீப்ரூக்கள் வசமாகியதால் நபி தாவூத் (அலை) இந்த நகரை யூத சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராகப் பிரகடனம் செய்தார்.

நபி தாவூத் (அலை) யைத் தொடர்ந்து அவரது மகன் ஸுலைமான் (அலை) இப்பிரதேசத்தின் ஆட்சியாளரானார். ஏற்கெனவே மெல்ஸி ஸேடக்  அரசனால் நிறுவப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் நபி ஸுலைமான் (அலை) யூதர்களுக்கெனத் தனியான ஓர்  ஆலயத்தை நிறுவினார்.

நபி ஸுலைமான் மரணித்த பின்னரும் யூதர்களின் ஆட்சியானது பல்வேறு சிக்கல்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் சுமார் நாங்கு நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது.இக்காலகட்டத்தில் அஸீரியர், அரேபியர், எகிப்தியர் முதலானோர் இப்பிரதேசத்தின் மீது படையெடுத்தும் முற்றுகையிட்டும்  வந்தனர். கி.மு. 587ல் யூத் சாம்ராஜ்ஜியம் பபிலோனியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன்போது யூதர்களுக்கும் பபிலோனியருக்குமிடையில் ஏற்பட்ட கலகத்தில் ஜெரூஸலம் நகர் அழிந்தொழிந்தது. இதன்போது இங்கு நபி ஸுலைமான் (அலை) நிறுவிய ஆலயமும் எரிந்து சாம்பலாகியது.

இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கி.மு. 538ல்  பாரசீக மன்னர் ஸைரஸ் ( CURUS ) பபிலோனியரைத் தோல்வியுறச் செய்து பலஸ்தீனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.  யூதர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஸைரஸ், பபிலோனியரால் துரத்தப்பட்டிருந்த யூதர்களை பலஸ்தீனில் மீள்குடியேற வழி செய்ததோடு  எரிந்து சாம்பலாகிய ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யவும் வழிவகை செய்தான்.கி.மு. 515ல் நபி ஸுலைமானின் ஆலயம் ஸைரஸினால் கட்டிமுடிக்கப்பட்டது. இதன்பின்னர் இவர்கள் மீண்டும் திருந்தி வளம் மிக்க மக்களாக வாழ்ந்து வரலாயினர்.

கி.மு. 332ல் ஜெரூஸலம் பாரசீகரிடமிருந்து கிரேக்க்ர் வசமாகியது. கிரேக்கர் இங்கிருந்த ஆலயத்தில் சிலைகளை வைத்து வணங்க வழி செய்தனர். கி.மு.164ல் கிரேக்கரிடமிருந்து யூதர்கள் தமது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அது முதல் அங்கு 150 ஆண்டுகள் யூதர்களின் ஆட்சி நிலவியது. தொடர்ந்து ரோமர்கள்  இந்நகரைக் கைப்பற்றினர். கிறிஸ்தவர்களான இவர்கள் குலபாஉர் ராசிதூன்களின் இரண்டாவது கலீபாவான கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நிலைத்திருந்தது.

ரோமரின் ஆதிக்கத்தை விரும்பாத யூதர்கள்ரோமரை எதிர்த்துக் கலகங்களை விளைவித்தனர். ரோமரின் ஆதிக்கத்தை வீழ்த்தி அவர்களின் ஆட்சியையும் கைப்பற்றத் துணிந்தனர். இவர்கள் தம்மிடையே தோன்றிய இறைத் தூதர் ஈஸா (அலை) யையும் ஏற்க மறுத்தனர். இதனால் யூதர்கள் பிறிதொரு முறையும் இறைவனின் தண்டனைக்கு ஆளாகினர்.

கி.பி. 33ல் நபி ஈஸா(அலை) அவர்கள் இங்கிருந்து விண்ணகத்துக்கு உயர்த்தப்பட்டார்கள். கி.பி. 69/70ல் ரோமானியப் பேரரசன் டைட்டஸ் (  ) ஜெரூஸலத்தை முற்றுகையிட்டு வெற்றீ பெற்றதோடு அ ந் நகரையும் அங்கிருந்த புனித ஆலயத்தையும் அழித்தொழிக்கும் நாசகார வேலைகளிலும் ஈடுபட்டான். கி.பி. 136ல் ஆட்சி செய்த ரோமானியப் பேரரசர் 'ஹட்ரியன்' இதற்கு "கலோனியா ஈலியா கெபிடோனியா"   எனப் பெயரிட்டான். இப்பெய்ரே காலப் போக்கில் சுருங்கி "ஈலியா" என அழைக்கப்பட்டது. இதனையே கிறிஸ்தவர்களும் ஏனையோரும் ஜெரூஸலம் என அழைத்து வந்தனர். கி.பி. 336களில் இங்கு கிறிஸ்தவக் கோயில்கள் கட்டப்பட்டன. கி.பி. 614ல் பாரசீக மன்னன் 2ம் குஸ்ரூவால்  இந்நகர் வெற்றி கொள்ளப்பட்டுப் பாரசீகர் வசமாகியது. 


இஸ்லாமியர்களின் ஆட்சியில் பைத்துல் முகத்தஸ் : 


கி.பி. 621ல் அல்குர் ஆனின் 17வது அத்தியாயமான அல்-இஸ்ரா குறிப்பிடும், நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற அதிசய நிகழ்வான விண்ணுலக யாத்திரையும் இங்கிருந்துதான் துவங்கியது.ஜெரூஸலம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தின் போதுதான்  தொழுகை கடமையாக்கப்பட்டது.அது முதல் சுமார் பதினேழு மாதங்கள் வரை  இந்த பைத்துல் முகத்தஸே முஸ்லிம்களின் கிப்லாவாக இருந்து வந்தது.

கி.பி.628ல் ரோமானியப் பேரரசர் ஹிரக்கீலியஸ் வெற்றி முழக்கத்தோடு ஜெரூஸலம் நகரினுள் நுழைந்தார். இந்த நிகழ்வை அல்குர்  ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"ரோம் தோல்வியடைந்துவிட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தமது தோல்விக்குப் பின்னர் வெகு  சீக்கிரத்தில் வெற்றியடைவர். சில வருடங்களுக்குள்ளேயே! வெற்றியையும் தோல்வியையும் அளிக்கும் அதிகாரம் இதற்கு முன்னரும் பின்னரும் அல்லாஹ்விற்கே உரியது. அவர்கள் வெற்றியடையும் அந்நாளில் விசுவாசிகள் மகிழ்ச்சியடைவர். (அர்-ரூம்:2-4)

ரோமானியரையடுத்து ஜெரூஸலம் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் வந்தது. 636ல் தள்பதி காலித் பின் வலீத் தலைமையில் நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் ரோமர் தோல்வி கண்டதன் மூலம் பலஸ்தீனின் பிரதான வாயிலை அவர்கள் முஸ்லிம்களுக்குத் திறந்து கொடுத்தனர். கலீபா உமரின் படைத்தளபதியாகச் சென்ற நபித் தோழர் அபூ உபைதாவிடம், கலீபா உமரிடம்தான் ஜெரூஸலத்தை ஒப்படைப்பதாக அதன் பாதிரியார் சோப்ரோனியூஸ் ஒரு  நிபந்தனை  விதித்தார். நிபந்தனையை ஏற்றுக் கொண்ட கலீபா ஜெரூஸலத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

கலீபா உமர் ஜெரூஸலம் நகரைத் தனது கிலாபத்தோடு இணைத்துக் கொண்டபோது அங்கு எவ்விதமான கலகங்களும் இடம்பெறவில்லை. அதுவரை அங்கு வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களோடு கலீபா ஓர் உடன்படிக்கையும் செய்துகொண்டார். இக்காலப்பிரிவில் ஜெரூஸலத்தில் யூதர்களுக்கெனவும் கிறிஸ்தவர்களுக்கெனவுமென தனித்தனியான ஆலயங்கள் இருந்தன. அப்போது அங்கிருந்த பைத்துல் முகத்தஸ் என்ற இறையில்லத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை. ஆட்சியை வைத்திருந்த கிறிஸ்தவர்களும் அவர்களின் குடிமக்களாக இருந்த யூதர்களும் கைவிட்ட நிலையில் ஒதுக்கி வைத்திருந்த இடத்தைத்தான் கலீபா உமர் தூய்மைப்படுத்தி அங்கு தொழுகையும் நடாத்தினார். இந்த நிகழ்வை இரு சமூக மக்களும் அப்போது ஆட்சேபிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.

ஜெரூஸலம் முஸ்லிம்கள் வசமான பின்னர் அங்கு முஸ்லிம்கள் குடிமக்களாக வாழத் தலைப்பட்டதால் காலகதியில் அது ஒரு முஸ்லிம் நகராகவே பரிணமித்தது. தலை சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரும்கூட இந்த நகரில் குடியேறி வாழ்ந்ததால் அது  ஓர் இஸ்லாமிய அறிவு நிலையமாகவும் மாற்றம் பெற்றது. உமையாக்கள் தமதாட்சிக்காலத்தில் இப்பிரதேசம் உள்ளடங்கியிருந்த திமிஷ்கை (டமஸ்கஸ்) தமது தலை நகராக்கியதைத் தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் பிராந்தியத்தின் புகழ் அரசியல் வானிலும் கொடிகட்டிப் பறந்தது. இவர்களது ஆட்சிக்காலப் பகுதியிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் ஜெரூஸலத்திலுள்ள புனித ஆலயத்தில் குப்பதுஸ் ஸக்ராவும் அல் அக்ஸா மஸ்ஜிதும் கட்டிமுடிக்கப்பட்டன.

அப்பாஸியரது ஆட்சியில் அவர்களது ஆட்சியில் முதல் கலீபா அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ், பலஸ்ஸ்தீனத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கினார். கி.பி. 771ல் ஏற்பட்ட பூகம்பமொன்றின் போது பாதிப்புக்குள்ளான அல் அக்ஸாவை கலீபா மன்சூர் புனர்நிர்மாணம் செய்தார். கி.பி.969ல் பாதிமிய்ய சிற்றரசின் ஆட்சியாளர் முஇஸ் இதனைக் கைப்பற்றினார். 1070ல் அல்ப் அர்ஸலான் ஜெரூஸலத்தின் மீது படை நடாத்திச் சென்று அப்போது பாதிமிய்யர் வசமிருந்த அந்நகரை தன்வயப்படுத்திக் கொண்டார். ஆயினும், 1098ல் மீண்டும் இது பாதிமியாக்களின் கிலாபத்தின் கீழ் வந்தது.

இக்காலப்  பிரிவில்  மிகப் பெருமளவில் வளர்ச்சி பெற்று வந்த செல்ஜூக்கியப் பேரரசின் எழுச்சி ஐரோப்பியரைக் கதிகலங்க வைத்தது. உண்மையில் இந்த எழுச்சிதான் சிலுவைப் போருக்கும் வித்திட்டது எனலாம். 1099ல் சிலுவைப் படையினர் இதனை வெற்றி கொண்டனர். இதன் போது சுமார் 70,000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜிதில் மட்டும் குதிரைகளின் முழங்கால் அளவு இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இந்தக் கோரச் சம்பவத்தை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் பின்வருமாறு வர்ணித்திருப்பது நோக்கத்தக்கது. "ஜெரூஸலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மிக மிகக் கொடூரமானவை. உமரின் அல் அக்ஸா பள்ளிவாசலை நோக்கிச் சென்ற குதிரைகளின் முழங்கால் அளவுக்கு இரத்த வெள்ளம் பிரவாகித்துப் பாய்ந்தது. பச்சிளம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு எதிரே இருந்த சுவர்களில் அறையப்பட்டன/ போர் நடக்கும் இடத்திற்கு மத்தியில் வீசி எறியப்பட்டன. யூதர்களுக்கு அவர்களது கோவில்களிலேயே சமாதி கட்டப்பட்டன. கி.பி.1187ல் சுல்தான் சலாஹுத்தீன் இதனை வெற்றி கொண்டார். 1219ல் 2ம் பிறெடரிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தமொன்றின் பிரகாரம் இது கிறிஸ்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. கி.பி.1239ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் கைப்பற்றினர். கி.பி.1243ல் இது மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானபோதும் 1244ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் வெற்றி கொண்டனர். கி.பி.1277ல் பெயரளவில் பைதுல் முகத்தஸும் அதனோடு இணைந்திருந்த பகுதிகளும் சிசிலி அரசோடு இணைக்கப்பட்டன.

இவ்வாறு பைதுல் முகத்தஸும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் சிலுவைப் படையினரினாக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தன. மம்லூக்கியரின் ஆட்சியின்போதுதான் முஸ்லிம் பிரதேசங்கக்ளிலிருந்து சிலுவைப் படையினரின் ஆக்கிரமிப்பை முற்றிலுமாகத் துடைத்தெறிய முடிந்தது. இதனைத் தொடர்ந்து பலஸ்தீனப் பகுதி முழுதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த நிலை முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்று 1917 / 22ல் ஆங்கிலேயர் பலஸ்தீனை ஆக்கிரமிக்கும் வரை மட்டுமே தொடர்ந்தது.

1917ல் பலஸ்தீனில் இருந்த  பிரித்தானிய அரசு "பெல்பர்" எனும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இப்பிரகடனத்தின் மூலம் பலஸ்தீனத்து முஸ்லிம்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 1922ல் யூதர்களுக்கான ஒரு தனி நாடு பலஸ்தீன மண்ணில் அமைய வேண்டுமென ஒரு கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படை பலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலுமிருந்தும் வந்து இங்கு குடியேறலாயினர். முஸ்லிம்களைப் பலஸ்தீனிலிருந்து விரட்டுவதும் அவர்களது நிலங்களை அபகரிப்பதுமே இதன் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது.

ஐ.நா. சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய தீர்மானமொன்றுக்கு ஏற்ப 1947ல் பலஸ்தீன் அதன் பூர்வீகக் குடிகளான பலஸ்தீனர்களுக்கும் வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய வந்தேறு குடிகளுக்கும் இடையில் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரித்தது. அத்துடன், ஜெரூஸலம் நகர் சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் எனவும் அத்தீர்மானம் கூறியது.

1948ல் பலஸ்தீனில் இஸ்ரேல் என்ற ஒரு புது நாடு உருவாக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை அன்று 56 நாடுகளின் நலன்களைக் காப்பதற்கென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபையும் அங்கீகரித்தது. இஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களிலேயே அதை அமெரிக்காவும் பிரிட்டனும் அங்கீகரித்தன இதனைத் தொடர்ந்து ஏராளமான பொருளாதார அமைப்புக்களில் இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை; அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவற்றின்  சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்த பத்து  ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு  அங்கீகாரம்  வழங்கின. இன்று இஸ்ரேல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.

1949ல் ஐ.நா. சபையின் அங்கீகாரத்துக்கும் மேலதிகமாக இஸ்ரேல் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. 1967ல் அயலிலுள்ள அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆறு நாட்கள் மட்டுமே நீடித்த இந்த யுத்தத்தில் சினாய்ப் பாலைவனத்தையும் ஜெரூஸலம் பழைய நகரையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. எகிப்து, மக்கா, மதீனா, சஊதி அரேபியா, ஸிரியா, யெமன் அடங்கலான பரந்த யூத சாம்ராஜ்யமொன்றைத் தாபிப்பதே இந்த யூதர்களின் இலட்சியமாகும்.  இந்த இலக்கை அடையும் அவர்களது கொலை வெறியாட்டமும்  ஆக்கிரமிப்பும் தொடர்ந்துகொண்டே  இருக்கும் என்பது அவர்களது மனப்பேழைகளில்  மாத்திரம் பதிவாகிப்போன ஒரு சட்ட யாப்பாகும்.

பலஸ்தீனிலுள்ள ஜ்ர்ரூஸலம் பகுதியில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸ் என்ற புன்னியம்மிக்க இந்த மஸ்ஜித் 1967ம் ஆண்டு நடைபெற்ற அரபு - இஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது. முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல்-அக்ஸா ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகளாகிவிட்டன. பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய யூதர்கள் அதன் புனிதத்துவத்தைக் கெடுக்கும் வகையிலும்; அதன் இருப்பைத் தகர்த்தெறிந்து இல்லாதொழிக்கும் வகையிலும் இந்நாள்வரை பல்வேறு நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாசகார சூழ்ச்சி : 

எல்லா வகையிலும் முஸ்லிம்களின் சமூகத்தை சீர்குலைக்கும் வண்ணம், சமுதாயத்தின் அமைதியை கெடுக்கும் வண்ணம் யுக்திகளை வகுத்துவருகின்ற இந்த சதிகார யூத கும்பல் தற்போது  மற்றொரு பரபரப்பை கிளப்பி விட்டிருக்கின்றது.


இது சம்மந்தமான டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு முஸ்லீம்கள் மிக பாரம்பரியமிக்க கண்ணியமான ஒரு இறைஇல்லமாக புனித ஸ்தலமாக கருதும் பைத்துல் முகதாஸை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரூசலத்தை அறிவித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றப்போவதாக வெளியிட்டுள்ள அறிக்கை உலக மக்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்க ஏற்பாடு செய்துவருகிறது.


பாலஸ்தீனிய நாட்டின் ஒரு பகுதியை அவர்களை சித்ராவதை செய்து பல பிஞ்சுக்குழந்தைகளையும், கர்பிணிகளையும், முதியோர்களை, வாழவேண்டிய இளைஞர்களையும் கொன்று குவித்து, காயப்படுத்தி பாரபட்சமின்றி பல அட்டூழியங்களை நிகழ்த்தி அதன் ஒரு பகுதியை பிடித்து தனது நாடாக அறிவித்துக்கொண்டது யூத சதிகார கும்பல். இன்னும் பல சதிகளை  செய்ய இந்த வெறியர்கள், பல திட்டங்களை தீட்டிவருகிறது.

அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சிகளை இல்லாமலாக்கி, தொன்மைமிக்க பரகத்தான அந்த இடத்தை அல்லாஹ் இஸ்லாமியர்களின் கைகளின் கீழ் மீட்டுத்தருவானாக! இந்த வெறியர்களின் கூட்டத்தை அல்லாஹ் இல்லாமலாக்குவானாக ! 


ஜும்ஆ பள்ளிவாசல் (Jama Masjid Gulbarga) : 


 இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டத்தில் குல்பர்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா


அடிப்படைத் தகவல்கள்அமைவிடம்குல்பர்கா, கர்நாடகா,இந்தியா.புவியியல் ஆள்கூறுகள்17.360305°N 78.473416°Eசமயம்இசுலாம்நிலைபள்ளிவாசல்கட்டிடக்கலை தகவல்கள்கட்டிடக்கலை வகைமுகலாயக் கட்டிடக்கலைகட்டிடக்கலைப் பாணிபாமினி சுல்தானகம்நிறைவுற்ற ஆண்டுகி.பி.1367அளவுகள்கொள்ளளவு2000நீளம்216 அடிஅகலம்177 அடிபொருட்கள்சுண்ணாம்பு செங்கல்

அமைப்புதொகு

இப்பள்ளிவாசலும் ஹைதராபாத் நகரில் உள்ள எசுப்பானியா பள்ளிவாசலும் இந்தியாவில் எசுப்பானியா நாட்டின் கோர்டோபா பள்ளிவாசல் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டவை.[1].[2][3][4]

வரலாறுதொகு

பாமினி சுல்தானகத்தை தோற்றுவித்த அலாவுதின் பாமன் சா ஆட்சியில் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டை கட்டப்பட்டது. பின்னர் முதலாம் முகம்மது ஷா (1358-75) மன்னரால் இப்பள்ளிவாசல் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே கட்டப்பட்டது.அவரது ஆட்சியில் குல்பர்காபாமினி சுல்தானகத்தின் தலைநகராக இருந்தது.[5]

கட்டிடக்கலைதொகு

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா மினார்இல்லாமல் கட்டப்பட்டது.இப்பள்ளிவாசல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே பெரிய குவிமாடம் கொண்டு கட்டப்பட்டது.இது எசுப்பானியா நாட்டின் மூரிஸ் வடிவமைப்பில் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.[6] எசுப்பானியாநாட்டின் கோர்டோபா பள்ளிவாசல் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[7] மேற்கே பெரிய குவிமாடம்,நான்கு மூலைகளில் சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது.முற்றத்தில் 63 சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது. தெற்காசியாவில் அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பில் சிறந்த பள்ளிவாசலாக கருதப்படுகிறது.


சேரமான் ஜும்மா பள்ளிவாசல் : 


சேரமான் ஜும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில்எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. [1] இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.

பெயர் காரணமும் வரலாறும்தொகு : 


மாலிக் பின் தீணார் (ரலி)என்பவரால் கட்டப்பட்ட பழைய மசூதியின் தோற்றம். 1905இல் எடுக்கப்பட்டது

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வைபற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.[சான்று தேவை]

பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார்.[சான்று தேவை] அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.[சான்று தேவை]

இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

கட்டுமான அமைப்புதொகு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி[சான்று தேவை] என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது. [2]

சிறப்புகள்தொகு

இந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது.[சான்று தேவை] இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. இதற்கு எல்லா மதத்தினரும் எண்ணெய் கொண்டு வந்து விடுகின்றனர். மேலும் இங்குள்ள ரோஸ்‌வுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.



இவற்றிற்கு மேலாக இன்னும் பல வரலாற்று சான்றுகள் இருக்கின்றது. அவை அனைத்தையும் அழித்து யூதர்கள் தங்களின் வெறித்தனமான கொள்கைகளை மக்களுக்கு போதிக்க நினைக்கின்றனர். நம் இஸ்லாமிய மக்களின் மேல் அவர்களின் அரக்க கொள்கைகளை கொடுமைப்படுத்தி புகுத்த நினைக்கின்றனர். அல்லாஹ் அவர்களின் சாதிகளை செயலிழக்கச்செய்து, அதனை விட்டும் நம் இஸ்லாமிய சமுதாயத்தை பாதுகாப்பானாக. உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் அமைதியை தந்தருள்வானாக ! ஆமீன் !

No comments: