அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 19 March 2020

தடுமாற்றத்தை தவிர்வோம்





கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்குதலை தொடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 114 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மூவர் பலியாகியுள்ளனர். 13 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். என்றாலும் அண்டை மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும் கொரோனா தனது பிடியை இறுக்கியுள்ளது.
நமது நாட்டில் மிகப்பெரும் இரு சர்ச்சைகள் நிறைந்த சூழ்நிலையாக காணப்படுகிறது. ஒன்று குடியுரிமை திருத்த சட்டம் மற்றொன்று கொரோனா வைரஸ்.இந்த இரண்டிலும் நிறைய சூழ்ச்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் என்று சொல்லி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று சதி செய்துள்ளார்கள் என்றும். இன்னும் இந்தக் கொரோனா வைரஸ் அதுவாக உருவானது இல்லை இது உருவாக்கப்பட்டது என்றும் சிலர் சொல்லுகிறார்கள் அதாவது
உயிரியல் போர்முறை, உயிரிப்போர்அல்லது கிருமி போர்முறை (Biological warfare) என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப்பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோஅல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாதவாறு செய்யும்படி தாக்குவது ஆகும். உயிரியல் ஆயுதங்கள் என்பது ஓம்புயிருக்குள் சென்றவுடன் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சியடையும் ஒரு உயிரினம்அல்லது தானே பெருக்கிக் கொள்ளும் திறம் படைத்த உருப்படி (வைரஸுகள் உயிருள்ளவையாக கருதப்படுவதில்லை) ஆகும்[1]. பூச்சியியல் போர்முறையும் உயிரிப்போரில் ஒருவகையாக கருதப்படுகிறது.நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் இதுவும் ஒன்று.கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர்ஏனையவையாகும்.

உயிரி ஆயுதங்கள் ஒரு தனி நபரையோ, ஒரு கூட்டத்தாரையோ அல்லது ஒரு முழு இனத்தையோ அழிக்கும் படி பிரத்யேகமாக உருவாக்கபடலாம். இவை ஒரு நாட்டினாலோ அல்லது நாடு சாராத தனிக் கூட்டத்தாரலோ உருவாக்கப்படவும், வாங்கவும், சேர்ப்பில் வைத்து பின்னர் உபயோகப்படுத்தப்படவும் முடியும். நாடு சாராத தனிக் கூட்டத்தாரால் உபயோகப்படுத்தப்படின், அது உயிரித்தீவிரவாதம்என்றழைக்கப்படும்.
இவ்வாறு சில சர்ச்சையான விஷயங்களைப் பார்த்தால் குடியுரிமை சட்டத்திலும் சரி கொரோனா வைரஸ் இதிலும் சரி உலகளாவிய சூழ்ச்சிகள் இதில் செய்யப்படுகிறது என்பது மட்டும் தெரிகிறது‌.
இந்நிலையில் மக்கள் குடியுரிமையை க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் மறுபுறம் குறவன் வைரஸ் சம்பந்தமாக இப்படிப்பட்ட தகவல்கள் வர ஒரு சிலர் இடத்தில் தடுமாற்றமும் தயக்க நிலையும் காணப்படுகிறது.


தடுமாற்றம் என்பது மனிதர்களாகப்
பிறந்த அத்தனை பேருடைய
வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது தான். ஏனென்றால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தடுமாறக்கூடியவனாகவும், பதறக்கூடியவனாகவும், பலவீனமான ஒரு படைப்பாகவுமே படைத்திருக்கின்றான்.

ஆனால் பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடுபொடியாக்கக்கூடிய ஒரு தந்திரத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏            

                            . மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
(அல்குர்ஆன் : 4:28)


لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍ‏                                


மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 90:4)
மனிதர்கள் பலவீனமானவர்கள் தான் அவர்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்கள் அவனை பலவீனப்படுத்தும் அல்லாஹ்வுடைய ஒரு நியதி ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவன் கஷ்டத்தில் மூழ்கியவன் அங்கதான் இருப்பேன் அல்லாஹ்வுடைய ஒரு நியதி!

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى
 اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
முஸ்லிம்களாகிய நம்முடைய ஒரு நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையில் அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஏதும் நம்மை அடையாது என்பது தான்.
ஆனால் இங்கே நம்மை அடையக்கூடிய அந்த விஷயம் நல்லதா கெட்டதா என்பது நாம் இருப்பதை பொறுத்துதான் அமையும்.
சென்ற வாரங்களில் எல்லாம் ஒரு உண்மையான முஃமினுடைய நிலையைப் பற்றி நாம் சில தகவல்களை பார்த்தோம் அதனடிப்படையில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்ந்தோம் என்றால் அல்லாஹ்விடம் இருந்து வரக்கூடிய விஷயங்கள் நன்மையாக நமக்கு இருக்கும்.
இல்லை என்றால் நமக்கு ஆபத்தாகவே அமையும்.இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் நம்மை நாமே ஈமானிய பரிசோதனை செய்து கொள்வோம்.

தடுமாற்றங்களை பற்றி பேசுவதற்கு காரணம் தடுமாறுவது சில சமயத்தில் படத்தையும் மாற்றிவிடும்

قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَبِي طَالِبٍ: ((يَا عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ)).                         
فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ، حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْكَ)). فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ:     {مَا كَانَ لِلنَّبِيِّ} الآيَةَ.                                                   
முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்' என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று' (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
ஸஹீஹ் புகாரி : 1360.
நம்முடைய நிலைமையை பொறுத்து தான் நம்மை அடையக்கூடிய விஷயமும் இருக்கும் அல்லாஹுத்தஆலா நிறைய முஃமின்களே பாதுகாத்தும் இருக்கிறான் சில முஸ்லிம்களை அளித்தும் இருக்கிறான்.

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ أَنَّهُ سَمِعَ
 الزُّهْرِيَّ عَنْ عُرْوَةَ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ رَضِيَ اللَّهُ عَنْهُنَّ أَنَّهَا قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّوْمِ مُحْمَرًّا وَجْهُهُ يَقُولُ: ((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَاجُوجَ وَمَاجُوجَ مِثْلُ هَذِهِ)). وَعَقَدَ سُفْيَانُ تِسْعِينَ أَوْ مِائَةً. قِيلَ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ: ((نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ)). 

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சட்டதூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.
-அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் ('இந்த அளவிற்கு' என்று கூறியபோது, தம் கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.
அப்போது 'நல்லவர்கள் நம்மிடையே இருக்கும் போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம். தீமை பெருத்துவிட்டால்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7059.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا، أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى.        
أَعْمَالِهِمْ)).   

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7108.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌  ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏ 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான்  உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)

சமூகத்தில் குழப்பம் வெடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அழகல்ல. அதுபற்றிய அறிவும் தெளிவும் பெற்றவர்களுக்கு அதைத் தடுக்கும் பொறுப்பு உள்ளது. குறைந்தபட்சம் அது பரவும் வாசல்களையாவது அடைக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்விடம் நற்பெயரும் உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.

நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:11:116)
இப்படிப்பட்ட ஒரு ஆபத்துக்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நம் சமூகத்தினரையும்
விழிப்புணர்வு செய்து தவிர்ந்திருக்க செய்யவேண்டும் உண்மையான ஒரு முஃமினாக வாழ்ந்து அல்லாஹ்வுடைய உதவியைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா தந்தருள் புரிவானாக!
                       ஆமீன்

Thursday 12 March 2020

சூழ்ச்சிகளை சுரண்டி எடுப்போம்....



NPR ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம்  ஆகிறது இதில் NPR சம்பந்தமான கேள்வி கேட்க அரசு அதிகாரி வட்டாட்சியர் அதிகாரி பள்ளி கல்லூரி அதிகாரி அங்கன்வாடி ஆசிரியர் இப்படி சொல்லிக்கொண்டு உங்கள் வீடு தேடி வருவார்கள் அவர்கள் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் தரவேண்டாம் NPRகேள்விக்கு பதில் தந்தவரும் சிக்கலில் சிக்குவார் சிறு துரும்பு போன்ற பதில் தந்தாலும் சிக்கலில் சிக்குவார் கவனம் உங்கள் வீடு தேடி வரும் நபருடன் எந்த வித கோபமோ சண்டையோ விவாதமோ செய்யாமல் வந்தவருக்கு டீயோ காப்பியோ பிஸ்கட் தேவையா என கேட்டு உபசரித்து திருப்பி அனுப்பிவிடுங்கள் எதற்கும் வாய் திறக்க வேண்டாம்

ஒருவேளை உங்களிடம் இனிமையாக பேசி உங்களது வாய் வார்த்தையை உலர வைப்பார்கள் அப்படியே சொன்னாலும் உங்களது பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் சரி உங்களது பெற்றோர் பிறப்பு சான்றிதழ்கள் கிடைக்குமா இல்லை என்றால் இங்குதான் தாங்கள் சந்தேகத்திற்குரிய நபராக நிருத்தப்படுவீர்கள்

ஒரு வேளை உங்களுக்கு அதிகாரிகளால் மிரட்டல் வரலாம் அரசியல்வாதிகளாலும் அவர்கள் சார்பாகவும் மிரட்டலோ அல்லது ஆசையை தூண்டும் பேச்சுக்கள் கூறுவார்கள் ஜாக்கிரதை இது ஒருவருக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ உண்டான பிரச்சன போராட்டம் இல்லை அது அனைவருக்கும் உண்டான போராட்டம் ஒன்றாக சேர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி கானலாம் தனி தனியாக நின்று போராடினார்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிதறிப் போன பிறகு அவர்கள் அவர்களது வேளையை முடித்து கொள்வார்கள் எனவே NPR. ஐ முற்றிலும் தவிர்ப்போம் பதில் சொல்ல மறுப்போம்

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பானு ப்ரதாப் சிங் கேள்விக்கு யாரும் பதில் தரவேண்டாம் NPR கேள்விக்கு பதில் தந்தவரும் சிக்கலில் சிக்குவார் சிறு துரும்பு போன்ற பதில் தந்தாலும் சிக்கலில் சிக்குவார் கவனம் உங்கள் வீடு தேடி வரும் நபருடன் எந்த வித கோபமோ சண்டையோ விவாதமோ செய்யாமல் வந்தவருக்கு டீயோ காப்பியோ பிஸ்கட் தேவையா என கேட்டு உபசரித்து திருப்பி அனுப்பிவிடுங்கள் எதற்கும் வாய் திறக்க வேண்டாம்
ஒரு வேளை உங்களுக்கு அதிகாரிகளால் மிரட்டல் வரலாம் அரசியல்வாதிகளாலும் அவர்கள் சார்பாகவும் மிரட்டலோ அல்லது ஆசையை தூண்டும் பேச்சுக்கள் கூறுவார்கள் ஜாக்கிரதை இது ஒருவருக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ உண்டான பிரச்சன போராட்டம் இல்லை அது அனைவருக்கும் உண்டான போராட்டம் ஒன்றாக சேர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி கானலாம் தனி தனியாக நின்று போராடினார்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிதறிப் போன பிறகு அவர்கள் அவர்களது வேளையை முடித்து கொள்வார்கள் எனவேNPR. ஐ முற்றிலும் தவிர்ப்போம் பதில் சொல்ல மறுப்போம்

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் *பானு ப்ரதாப் சிங்

CAA NRC NPR
போராட்டத்தில் 82 நாட்களில் 78 பேர் ஷஹீதாயிருக்கிறாற்கள்
 அஸ்ஸாமில் 6பேர்
உத்தரபிரதேசத்தில் 19பேர்
கர்நாடகாவில் 2பேர்
டெல்லியில் 48 பேர்
மேகாலயா  3 பேர்

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம் மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) முதற்கட்டமாக தமிழ்நாட்டின் நீ

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) சென்சஸ் கணக்கெடுப்பைப் போல மற்றொரு கணக்கெடுப்புதான் எனக் கருதலாம். ஆனால் இதில் விவரம் அளிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளிப்பதோடு, தங்கள் பெற்றோர் பிறந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும் எனவும் கூறுகிறது.

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) என்பதற்கும் சென்சஸ் கணக்கெடுப்பிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது குடியுரிமைச் சட்டத்தின் (1995) கீழ் வருகிறது; சென்சஸ் கணக்கெடுப்பு என்பது சென்சஸ் சட்டத்தின் (1948) கீழ் எடுக்கப்படுவது. அதனால், அடிப்படையிலேயே மாற்றம் கொண்டிருக்கிறது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR)

இந்த அடிப்படையில், குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகியவை ஒரே நேர்க்கோட்டில், 'குடியுரிமை' என்ற அம்சத்தின் கீழ் வருகின்றன. ஊரகப்பதிவேட்டில் அரசு அதிகாரிகளிடம் குடியுரிமை கோரும் நிலைக்கு சாதாரண குடிமக்கள் தள்ளப்படுவர். இந்தியாவில் பட்டியல் சாதி மக்களும், பழங்குடி மக்களும் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக எவ்வளவு அலைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்கும். குடியுரிமை வழங்கப்படாத முஸ்லிம்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள நேரிடும்; நிரூபிக்கவில்லையெனில், தடுப்பு முகாம்களில் அடைபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

இந்தியா போன்ற நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுபவர்களுக்குப் பணியென்று எதையும் அளிக்க முடியாது; மேலும், பின்னடைவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில், அவர்களுக்காக அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. ஆக, இது நேரடியாக எதில் சென்று முடியும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.

2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு பதவியேற்றவுடன், ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான டி.ஜே.எஸ்-ஸின் தலைவர் ராஜேஷ்வர் சிங், "2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31க்குள், இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் துடைத்தெறிவோம்" என்று பேசினார். அதை உண்மையாக்கும் முயற்சியாகவே இந்தச் சட்டத்திருத்தமும், கணக்கெடுப்பும் பார்க்கப்படுகிறது. ஹிட்லர் செய்ததைப் பாராட்டி, இந்தியாவிலும் அதை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணினார் கோல்வால்கர். அவரின் அமைப்பின் வழி வந்த சீடர்கள் அதை நடைமுறையாக்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

ஒரே வித்தியாசம்தான். ஹிட்லர் இனத்தூய்மை என்ற அடிப்படையில் அதை மேற்கொண்டார். மோடியும் அமித் ஷாவும், அண்டை நாட்டுச் சிறுபான்மை மத அகதிகளின் வாழ்க்கை என்ற 'மனிதாபிமான' அடிப்படையில் இதை மேற்கொள்கின்றனர்.

நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய மற்றொறு விஷயம்

NRC – தேசிய மக்கள் பதிவேடு என்பது வெறுமனே இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாகவே இருந்தது. 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு, குடியுரிமை பற்றிய விதிகளும் இணைக்கப்பட்டன.

இதன்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கணக்கிடுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அசாமில் NRC  கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இந்தக்கணக்கெடுப்பின் முடிவானது கடந்த 31 ஆகஸ்டு, 2019 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் படி 19 லட்சம் பேர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கணக்கெடுப்பு முடிவு கூறுகிறது. இந்த 19 லட்சம் நபர்களில் 7 லட்சம் பேர் முஸ்லீம்கள் ஆவர்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் (12 லட்சம் பேர்) தங்களது அடையாளங்களைக் கணக்கெடுப்பின் போது சமர்ப்பித்து தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்  எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் முஸ்லீம்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை என்பதால் தற்போது இவர்களின் குடியுரிமை பற்றிய குழப்பங்கள் நீடிக்கிறது.

NPR – தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தரவுகளை வைத்துக் கொண்டே, NRC தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட உள்ளன.

முதல் படி

ஊராட்சி, மாவட்டம், மாநில வாரியாகக் குடிமக்களின் தரவுகள் சேகரிக்க படவுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் நீலகிரி, சிவகங்கை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் முறையாகத் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பில் எந்த விதமான தகவல்கள் பெறப்படும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆதார் எண், பெற்றோர்களின் பிறப்பிடம், இந்தியாவில் குடியிருந்த வருடங்களின் எண்ணிக்கை போன்றவை அடிப்படை விவரங்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் படி

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் NRC  விதிகளுடன் ஒத்து வருகிறதா எனச் சரிப்பார்க்கப் படும். பெறப்பட்ட NPR தரவுகள், NRC குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளுக்கு முரணாக இருக்கும்போது அவர்கள் இந்த நாட்டில் குடியுரிமை அற்றவர்களாகக் கருதப்படுவர். குடியுரிமை மறுக்கப் படுவர்களை, இந்திய அரசு அகதிகளாகவே கருதும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஊராட்சி, மாவட்டங்கள், மாநிலங்கள் எனப் பெறப்படும் மக்கள் தொகை பதிவேடு, நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடாக உருவாக்கப்பட  உள்ளன.

Cencus- NPR இரண்டுக்குமான வேறுபாடு

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பொதுவாக ஓர் இடத்தில் 6 மாதங்களுக்கு மேல் குடியிருப்பவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்துக் கொண்டு விடும். மக்கள் தொகையின் எண்ணிக்கையை கணக்கிடவே இந்தியாவில் Cencus நடத்தப்படுகின்றன.
இதுவெல்லாம் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிகள்
சூழ்ச்சி சம்பந்தமாக
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான்

وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏                      

அவர்கள் சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.
(அல்குர்ஆன் : 3:54)
இந்த ஆயத்திற்குவிளக்க உரையில் அல்லாஹ்வுடைய சூழ்ச்சி சம்பந்தமாக ஈஸா (அலை)  காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் இமான் பெருமக்கள்

وَمَكْرُ اللَّهِ تَعَالَى خَاصَّةً بِهِمْ فِي هَذِهِ الْآيَةِ وَهُوَ إِلْقَاؤُهُ الشَّبَهَ عَلَى صَاحِبِهِمُ الَّذِي أَرَادَ قَتْلَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ، حَتَّى قُتِلَ، قَالَ الْكَلْبِيُّ: عَنْ أَبِي صَالِحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عِيسَى اسْتَقْبَلَ رَهْطًا مِنَ الْيَهُودِ فَلَمَّا رَأَوْهُ قَالُوا: قَدْ جَاءَ السَّاحِرُ ابْنُ السَّاحِرَةِ وَالْفَاعِلُ ابْنُ الْفَاعِلَةِ، وَقَذَفُوهُ وَأَمَّهُ فَلَمَّا سَمِعَ ذَلِكَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ منهم دَعَا عَلَيْهِمْ، وَلَعَنَهُمْ فَمَسَخَهُمُ اللَّهُ خَنَازِيرَ، فَلَمَّا رَأَى ذَلِكَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ وَأَمِيرُهُمْ، فَزِعَ لِذَلِكَ وَخَافَ دَعْوَتَهُ، فَاجْتَمَعَتْ كَلِمَةُ الْيَهُودِ عَلَى قَتْلِ عِيسَى عَلَيْهِ السَّلَامُ، فثاروا إليه؛ ليقتلوه فبعث الله جِبْرِيلَ فَأَدْخَلَهُ فِي خَوْخَةٍ فِي سقفها روزنة فرفعه إِلَى السَّمَاءِ مِنْ تِلْكَ الرَّوْزَنَةِ، فَأَمَرَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ رَجُلًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُ: طَطْيَانُوسُ أَنْ يَدْخُلَ الْخَوْخَةَ وَيَقْتُلَهُ، فَلَمَّا دخل غرفته لَمْ يَرَ عِيسَى فَأَبْطَأَ عَلَيْهِمْ فَظَنُّوا أَنَّهُ يُقَاتِلُهُ فِيهَا فَأَلْقَى اللَّهُ عَلَيْهِ شِبْهَ عِيسَى عَلَيْهِ السلام، فلما خرج عليهم، ظَنُّوا أَنَّهُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ فَقَتَلُوهُ وَصَلَبُوهُ، 

அல்லாஹுத்தஆலா நாடினால் எதையும் எப்படியும் சூழ்ச்சி செய்வான் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று

இப்படிப்பட்ட ஒரு நேரத்திலும் சமுதாய மக்களுக்காக ஒரு கூட்டம் உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் ஒரு செய்தியைச் சொல்கிறான்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ‏ 

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றும்.
(அல்குர்ஆன் : 61:10)

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ‌ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ‏ 

(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
(அல்குர்ஆன் : 61:11)

يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ‏ 

(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 61:12)

சமீபமாக
அய்யா வழி பால முருகன் அவர்கள் சிறைக்கு செல்லும்போது போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் சபீர் மற்றும் நிர்வாகிகள் இடத்தில் சொல்லி விட்டு சென்ற வார்த்தை..

என்னை மிரட்டி சித்ரவதை செய்து ஒரு வீடியோ பேசி காவல்துறை வாங்கி உள்ளது அதை முஸ்லிம்கள் நம்ப வேண்டாம் நான் சத்தியத்தை பேசினேன் என்னை கொச்சை படுத்தி விடாதீர்கள்

பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவ‌த்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், 'இஸ்லாம்' என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுப‌வர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான‌ சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!

2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்.... அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால்,
"அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்" என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூல‌ம், அவர்கள் "இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது" என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.

இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தகக் கடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே நூல், இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்ற செய்தி வெளிவந்தமை கவனிக்கப்பட வேண்டிய‌தாகும்.

மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் க

இந்திமிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பிரபல கல்லூரியின் ஆராய்ச்சி பேராசிரியராகவும், இனப்படுகொலை கண்காணிப்பு தொடர்பாக ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களையும் உண்மை விபரங்களையும் ஆதோரத்தோடு வெளிக்கொண்டு வந்தவருமான டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அந்த இரண்டு மாநிலங்களில் இனஅழிப்பு நடக்க இன்னும் ஒரு படிமட்டுமே உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கறார்

“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!

மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் குற்றச்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பிரபல கல்லூரியின் ஆராய்ச்சி பேராசிரியராகவும், இனப்படுகொலை கண்காணிப்பு தொடர்பாக ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களையும் உண்மை விபரங்களையும் ஆதோரத்தோடு வெளிக்கொண்டு வந்தவருமான டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அந்த இரண்டு மாநிலங்களில் இனஅழிப்பு நடக்க இன்னும் ஒரு படிமட்டுமே உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.

டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன்
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் இன அழிப்புக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை படி நிலைகளாக எடுத்துரைத்தார்.

அதில், முதல்படியாக வகைப்படுத்தல். அதாவது, இஸ்லாமியர்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என வகைப்படுத்தல்.

இரண்டாவது படி, அடையாளப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் - வெளிநாட்டவர் என அடையாளப்படுத்துவது.

முன்றாவது படி, பாகுபாடு காணுதல். குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நாடற்றவர்களாக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித சிவில் உரிமையும் கிடைக்காமல் செய்வது போன்றவற்றின் மூலம் பாகுபாடு காட்டப்படுகிறது.

நான்காவது படிநிலை, மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பது. குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி - மனித சமூகத்திற்கு எதிரானவர்கள் என வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை, அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பதாகும்.
ஐந்தாவது படிநிலை, இன அழிப்பு செய்வதற்காக நிறுவனம் அமைத்தல். உதாரணம் காஷ்மீரில் இந்திய ராணுவம், அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு அதிகாரிகளை கொண்டுவந்தது.

ஆறாவது படிநிலை என்பது ஒன்றுகுவித்தல், பிரசாரங்கள் செய்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமைப்படுத்த, அவர்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுகுவிப்பதாகும்.

ஏழாவது படி, இன அழிப்புக்காக தயாராகுதல்.

எட்டாவது துன்புறுத்தல். காஷ்மீர் மற்றும் அசாமில் தற்போது நடந்துக் கொண்டிருப்பது.

ஒன்பதாவது, மக்களை அழித்தொழித்தல்.

இறுதியாக பத்தாவது, செய்த படுபாதக செயலை மறுத்தல்.

இவ்வாறு அவர் இந்தியாவில் மோடி அரசு நிகழ்த்தும் சிறுபான்மையின அழிப்பு முயற்சியை ஒப்புமை செய்து விவரிக்கிறார். இன்னும் ஒரு படி நிலை மட்டுமே மீதம் இருக்கிறது. காஷ்மீர் மற்றும் அசாம் மக்கள் அதை மீது அந்த படி நிலை நிகழ்த்தப்பட்டால் அதுவே “இன அழிப்பு” என்று எச்சரிக்கிறார் கிரிகோரி ஸ்டாண்டன்.

وسئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء فقال: الذي لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه

போராடக் கூடிய நமக்கு இன்னொரு முக்கியமான விஷயம் அல்லாஹ் கூறுகிறான்

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏                                                   

عَنْ صُهَيْبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: عَجَبًا لِاَمْ
رِ الْمُؤْمِنِ اِنَّ اَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذلِكَ لِاَحَدٍ اِلاَّ لِلْمُؤْمِنِ، اِنْ اَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَاِنْ اَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ. رواه مسلم باب المؤمن امره كله خير


عمر -رضي الله تعالى عنھ- قال: سمعت رسول الله -صلى الله علیھ وسلم- یقول   :(لو أنكم تتوكلون على الله حق توكلھ لرزقكم كما یرزق الطیر،
.تغدو خماصاً وتروح بطاناً) رواه الترمذي، وقال: 
حدیث حسن      
  
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

                                   
இந்தப் பாசிச அரசின் ஒரே நோக்கம் இந்திய திரு நாட்டில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டியடிக்க வேண்டும் அல்லது இந்துத்துவ சட்டத்தின்கீழ் எந்த உரிமையும் இல்லாமல் அகதிகளாக வாழ வேண்டும் இதனால் நிறைய சதிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!

( اللهم امكر لي ولا تمكر علي.

Thursday 5 March 2020

எதிர்பார்க்கப்படும் வெற்றிகள்




நமது நாட்டில் CAA,NRC, மற்றும் NPR இந்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் வெற்றியை தேடியவராக! இது ஒருபக்கம்
இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு சூழ்நிலையில் அதே பரபரப்புடன் பொதுத்தேர்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் மாணவர்கள்!
இரண்டு விதமான போராட்டங்கள்
 ஒரு கூட்டம் வாழ்வதற்காகவும் மற்றோரு கூட்டம் வாழ்க்கைக்காகவும்
போராடிக்கொண்டு இருக்கிறது!

இரு போராட்டங்களின் நோக்கமும் வெற்றியை நோக்கி தான்?
வெற்றி பெற்றவர்களின் தன்மைகளைப்  பற்றி அல்லாஹ் சொல்லும் போது

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ * الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ * وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ * وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ * وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ * إِلا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ * فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ * وَالَّذِينَ هُمْ لأمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ * وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ * أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ * الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ} [ المؤمنون

ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள். இன்னும் அவர்கள்  ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் வெட்கத்தலத்தை பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதியையும் பேணுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பாதுகாத்து கொள்வார்கள். இத்தகையோர்தான் வெற்றியாளர்கள். சுவர்க்கத்தை வாரிசாக்கி கொள்பவர்கள்’

அல்லாஹ் வெற்றியின் இலக்கணத்தை தொழுகையைக் கொண்டே ஆரம்பிக்கின்றான். தொழுகையை கொண்டே முடித்து வைக்கின்றான். ஆக தொழுகையில் தான் வெற்றி என்பதை உறுதி செய்கின்றான். வெற்றியின் பரிசாக சொர்க்கத்தை இறைவன் சுட்டிக்காட்டுகின்றான்.

அல்லாஹ்விற்கு பிடித்த அமல்களில் மிகவும் சிறந்த நற்செய்கை எதுவென்று நபிகளிடம் கேட்ட போது, ‘உங்களுடைய தொழுகையை உரிய நேரத்தில் குறிப்பிட்ட முறையில் முறையாய் நிறைவேற்றுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

எந்தவித படை பலமுமின்றி, நிராயுதபாணிகளாக, இறையச்சத்தையும், தொழுகையையும் மட்டுமே கொண்டு வெற்றி கொண்ட நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு.

பத்ர் யுத்தத்தில் நபிகளாருடன் இருந்தவர்கள் வெறும் முன்னூற்று முப்பத்து மூன்று ஏழை சஹாபாக்கள். அவர்கள் போர் வீரர்களும் அல்ல. போர்த்தளவாடங்கள் கொண்டவர்களும் அல்ல. அவர்களை எதிர்த்து நிற்பதோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்த்திறன் கொண்ட போர் வீரர்கள், குதிரை, ஒட்டக, யானைப்படை.

கண்மணி நாயகம் கண் துஞ்சவில்லை. தொழுகையில் நிற் கிறார்கள். தரையில் சிரம் பணிந்து அல்லாஹ்விடம் மன்றாடு கிறார்கள்.

பொழுது புலர்கிறது. எதிரிப்படைகள் துவம்சம் செய்யப்பட்டது. எங்கிருந்து வந்தது இந்த சக்தி. எந்த யுக்தியைப் பயன்படுத்தினார்கள். யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் வெற்றி கிட்டியது உண்மை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ‘தொழுகையில் வெற்றி இருக்கிறது’ என்பது மட்டும் தான். ‘உள்ளத்தின் உறுதியில், இறையச்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை மட்டும் தான்.

போர்க்களத்தில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விடலாம் என்ற நிலை இருந்தபோது, தொழுகை நேரம் நெருங்கி விட்டது. இறைகட்டளை அவர்களின் ஞாபகத்திற்கு வருகிறது.

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌  وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌  وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌  وَ خُذُوْا حِذْرَكُمْ‌  اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏.                          

(நபியே! போர் முனையில்) நீங்களும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழவைக்க நீங்கள் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கையில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) "ஸஜ்தா" செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கையில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள் களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டு மென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினாலோ அல்லது நீங்கள் நோயாளியாக இருந்தோ உங்கள் ஆயுதங்களைக் (கையில் பிடிக்க முடியா விட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:102)


வெற்றியைத் தோல்வியை நிர்ணயிக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தொழுகையைத் தாமதிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அப்படி என்றால், வீணான காரியங் களிலும், கூட்டம், விழாக்கள், சினிமா, கேளிக்கைகள் என்ற காரணங்களால் தொழுகையை தாமதிப்பது அல்லது உரிய நேரத்தில் தொழாமல் விட்டுவிடுவது முறையாகுமா?

இஸ்லாமிய படையினரிடையே இருந்த இரண்டு முக்கிய பண்புகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒன்று கடமையை முழு மனதாய் உறுதியாய் நிறைவேற்றுகிறார்கள். அச்சப்படுவதில்லை, இறப்பை கண்டு அஞ்சுவதுமில்லை. நம்பிக்கையோடு போராடுகிறார்கள். வெற்றியை அல்லாஹ்விடமே வேண்டு கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் தன்னகத்தே கொண்டவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏ 
(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான்.
(அல்குர்ஆன் : 48:3)
.
எனவே இறை நம்பிக்கையோடு செயல்பட்டு, தொழுகையை   தவறாமல் கடைப்பிடித்து ஈருலக வாழ்க்கையின் வெற்றிகளை நாம் பெற்றுக்கொள்வோம்.

அதேபோல புத்தகங்களோடு வெற்றியை நோக்கி போராடுகின்ற மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் இஸ்லாத்தின் ரீதியில் சில விஷயங்கள்
நம் மேல் சொன்ன வெற்றியாளர்களின் தன்மைகளில் ஒன்று
         وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ.                             
 இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள்.

 وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ }وهو الكلام الذي لا خير فيه
 ولا فائدة، { مُعْرِضُونَ } رغبة عنه، وتنزيها لأنفسهم، وترفعا عنه، وإذا مروا باللغو مروا كراما، وإذا كانوا معرضين عن اللغو.                                          
                              ‌.    
حدثني عليّ، قال: ثنا عبد الله، قال: ثني معاوية، عن عليّ، عن ابن عباس، قوله: ( وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ) يقول: الباطل.                                
                                  
حدثنا ابن عبد الأعلى، قال: ثنا ابن ثور، عن معمر،
 عن الحسن: ( عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ) قال: عن.              المعاصي.               .                                     
வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள் யாரும் வீணான விஷயங்களில் ஈடுபடுவதில்லை
வீணான விஷயங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.       

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்கள் உடைய வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால் அவர்களில் யாரும் வீணானவற்றில் ஈடுபட்டதாக இல்லை.

வெற்றி பெறுவதற்கு முயற்சியை தவிர வேறு  குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் வீணான விஷயங்களை விட்டும் ஒதுங்கி முயற்சி என்னும் பாலத்தில் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்

கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும்மாணவர்களுக்கு அழுத்தம் தந்து அச்சுறுத்தாமல் பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த பீர்க்கன்காரணையில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வை முன்னிட்டு தொலைக்காட்சி இணைப்பை துண்டித்ததால் பெற்றோருடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் அந்தமாணவர் தவறான முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வு தொடங்கும்முன்பே நடைபெற்ற இந்த சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுத்தேர்வு காலமான தற்போது பிள்ளைகளுக்கு ஆதரவாக பெற்றோர் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நிபுணர்கள்அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்துஉளவியல் நிபுணர் எஸ்.அபிலாஷா கூறியதாவது:

ஏற்கெனவே மாணவர்கள் தேர்வுகுறித்த அச்சத்தில் இருப்பார்கள். இந்தச் சூழலில் பெற்றோர், குழந்தைகள் மீது மேலும் அழுத்தத்தை திணிக்காமல் அவர்களுக்கு சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையுடன்பழகி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல்அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்குகொண்டு செல்லக் கூடாது.

தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும்அனுமதிக்கலாம். அது அவர்களுக்குபுத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம்முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கண்டிப்பு காட்டுவதை விட்டு அன்பாக பேசி ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில், குழந்தைகளின் மனதில் தவறான எண்ணங்கள் உருவாகி அதை நோக்கி அவர்கள் நகரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் செல்வகுமார் கூறும்போது, ‘‘தேர்வில் தோல்வி பயம், மனஅழுத்தம் உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தவறானமுடிவுகளை நோக்கி தள்ளப்படுகின்றனர். மதிப்பெண்கள் ஒருபோதும் பிள்ளைகளின் திறமைக்கு அளவுகோல் கிடையாது. அதனால் பெற்றோர்கள் முதலில் தங்களின் தேர்வு பயத்தை போக்க வேண்டும். தேர்வுக்கு தயாராக தேவையான வசதியை செய்து தந்து, பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மேலும், பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும்’’என்றார்.
ஆகவே வாழ்வதற்காக மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகத்தான வெற்றியை எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் புரிவானாக ஆமீன்!