அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 12 March 2020

சூழ்ச்சிகளை சுரண்டி எடுப்போம்....



NPR ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம்  ஆகிறது இதில் NPR சம்பந்தமான கேள்வி கேட்க அரசு அதிகாரி வட்டாட்சியர் அதிகாரி பள்ளி கல்லூரி அதிகாரி அங்கன்வாடி ஆசிரியர் இப்படி சொல்லிக்கொண்டு உங்கள் வீடு தேடி வருவார்கள் அவர்கள் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் தரவேண்டாம் NPRகேள்விக்கு பதில் தந்தவரும் சிக்கலில் சிக்குவார் சிறு துரும்பு போன்ற பதில் தந்தாலும் சிக்கலில் சிக்குவார் கவனம் உங்கள் வீடு தேடி வரும் நபருடன் எந்த வித கோபமோ சண்டையோ விவாதமோ செய்யாமல் வந்தவருக்கு டீயோ காப்பியோ பிஸ்கட் தேவையா என கேட்டு உபசரித்து திருப்பி அனுப்பிவிடுங்கள் எதற்கும் வாய் திறக்க வேண்டாம்

ஒருவேளை உங்களிடம் இனிமையாக பேசி உங்களது வாய் வார்த்தையை உலர வைப்பார்கள் அப்படியே சொன்னாலும் உங்களது பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் சரி உங்களது பெற்றோர் பிறப்பு சான்றிதழ்கள் கிடைக்குமா இல்லை என்றால் இங்குதான் தாங்கள் சந்தேகத்திற்குரிய நபராக நிருத்தப்படுவீர்கள்

ஒரு வேளை உங்களுக்கு அதிகாரிகளால் மிரட்டல் வரலாம் அரசியல்வாதிகளாலும் அவர்கள் சார்பாகவும் மிரட்டலோ அல்லது ஆசையை தூண்டும் பேச்சுக்கள் கூறுவார்கள் ஜாக்கிரதை இது ஒருவருக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ உண்டான பிரச்சன போராட்டம் இல்லை அது அனைவருக்கும் உண்டான போராட்டம் ஒன்றாக சேர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி கானலாம் தனி தனியாக நின்று போராடினார்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிதறிப் போன பிறகு அவர்கள் அவர்களது வேளையை முடித்து கொள்வார்கள் எனவே NPR. ஐ முற்றிலும் தவிர்ப்போம் பதில் சொல்ல மறுப்போம்

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பானு ப்ரதாப் சிங் கேள்விக்கு யாரும் பதில் தரவேண்டாம் NPR கேள்விக்கு பதில் தந்தவரும் சிக்கலில் சிக்குவார் சிறு துரும்பு போன்ற பதில் தந்தாலும் சிக்கலில் சிக்குவார் கவனம் உங்கள் வீடு தேடி வரும் நபருடன் எந்த வித கோபமோ சண்டையோ விவாதமோ செய்யாமல் வந்தவருக்கு டீயோ காப்பியோ பிஸ்கட் தேவையா என கேட்டு உபசரித்து திருப்பி அனுப்பிவிடுங்கள் எதற்கும் வாய் திறக்க வேண்டாம்
ஒரு வேளை உங்களுக்கு அதிகாரிகளால் மிரட்டல் வரலாம் அரசியல்வாதிகளாலும் அவர்கள் சார்பாகவும் மிரட்டலோ அல்லது ஆசையை தூண்டும் பேச்சுக்கள் கூறுவார்கள் ஜாக்கிரதை இது ஒருவருக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ உண்டான பிரச்சன போராட்டம் இல்லை அது அனைவருக்கும் உண்டான போராட்டம் ஒன்றாக சேர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி கானலாம் தனி தனியாக நின்று போராடினார்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிதறிப் போன பிறகு அவர்கள் அவர்களது வேளையை முடித்து கொள்வார்கள் எனவேNPR. ஐ முற்றிலும் தவிர்ப்போம் பதில் சொல்ல மறுப்போம்

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் *பானு ப்ரதாப் சிங்

CAA NRC NPR
போராட்டத்தில் 82 நாட்களில் 78 பேர் ஷஹீதாயிருக்கிறாற்கள்
 அஸ்ஸாமில் 6பேர்
உத்தரபிரதேசத்தில் 19பேர்
கர்நாடகாவில் 2பேர்
டெல்லியில் 48 பேர்
மேகாலயா  3 பேர்

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம் மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) முதற்கட்டமாக தமிழ்நாட்டின் நீ

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) சென்சஸ் கணக்கெடுப்பைப் போல மற்றொரு கணக்கெடுப்புதான் எனக் கருதலாம். ஆனால் இதில் விவரம் அளிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளிப்பதோடு, தங்கள் பெற்றோர் பிறந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும் எனவும் கூறுகிறது.

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) என்பதற்கும் சென்சஸ் கணக்கெடுப்பிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது குடியுரிமைச் சட்டத்தின் (1995) கீழ் வருகிறது; சென்சஸ் கணக்கெடுப்பு என்பது சென்சஸ் சட்டத்தின் (1948) கீழ் எடுக்கப்படுவது. அதனால், அடிப்படையிலேயே மாற்றம் கொண்டிருக்கிறது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR)

இந்த அடிப்படையில், குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகியவை ஒரே நேர்க்கோட்டில், 'குடியுரிமை' என்ற அம்சத்தின் கீழ் வருகின்றன. ஊரகப்பதிவேட்டில் அரசு அதிகாரிகளிடம் குடியுரிமை கோரும் நிலைக்கு சாதாரண குடிமக்கள் தள்ளப்படுவர். இந்தியாவில் பட்டியல் சாதி மக்களும், பழங்குடி மக்களும் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக எவ்வளவு அலைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்கும். குடியுரிமை வழங்கப்படாத முஸ்லிம்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள நேரிடும்; நிரூபிக்கவில்லையெனில், தடுப்பு முகாம்களில் அடைபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

இந்தியா போன்ற நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுபவர்களுக்குப் பணியென்று எதையும் அளிக்க முடியாது; மேலும், பின்னடைவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில், அவர்களுக்காக அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. ஆக, இது நேரடியாக எதில் சென்று முடியும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.

2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு பதவியேற்றவுடன், ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான டி.ஜே.எஸ்-ஸின் தலைவர் ராஜேஷ்வர் சிங், "2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31க்குள், இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் துடைத்தெறிவோம்" என்று பேசினார். அதை உண்மையாக்கும் முயற்சியாகவே இந்தச் சட்டத்திருத்தமும், கணக்கெடுப்பும் பார்க்கப்படுகிறது. ஹிட்லர் செய்ததைப் பாராட்டி, இந்தியாவிலும் அதை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணினார் கோல்வால்கர். அவரின் அமைப்பின் வழி வந்த சீடர்கள் அதை நடைமுறையாக்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

ஒரே வித்தியாசம்தான். ஹிட்லர் இனத்தூய்மை என்ற அடிப்படையில் அதை மேற்கொண்டார். மோடியும் அமித் ஷாவும், அண்டை நாட்டுச் சிறுபான்மை மத அகதிகளின் வாழ்க்கை என்ற 'மனிதாபிமான' அடிப்படையில் இதை மேற்கொள்கின்றனர்.

நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய மற்றொறு விஷயம்

NRC – தேசிய மக்கள் பதிவேடு என்பது வெறுமனே இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாகவே இருந்தது. 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு, குடியுரிமை பற்றிய விதிகளும் இணைக்கப்பட்டன.

இதன்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கணக்கிடுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அசாமில் NRC  கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இந்தக்கணக்கெடுப்பின் முடிவானது கடந்த 31 ஆகஸ்டு, 2019 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் படி 19 லட்சம் பேர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கணக்கெடுப்பு முடிவு கூறுகிறது. இந்த 19 லட்சம் நபர்களில் 7 லட்சம் பேர் முஸ்லீம்கள் ஆவர்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் (12 லட்சம் பேர்) தங்களது அடையாளங்களைக் கணக்கெடுப்பின் போது சமர்ப்பித்து தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்  எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் முஸ்லீம்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை என்பதால் தற்போது இவர்களின் குடியுரிமை பற்றிய குழப்பங்கள் நீடிக்கிறது.

NPR – தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தரவுகளை வைத்துக் கொண்டே, NRC தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட உள்ளன.

முதல் படி

ஊராட்சி, மாவட்டம், மாநில வாரியாகக் குடிமக்களின் தரவுகள் சேகரிக்க படவுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் நீலகிரி, சிவகங்கை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் முறையாகத் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பில் எந்த விதமான தகவல்கள் பெறப்படும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆதார் எண், பெற்றோர்களின் பிறப்பிடம், இந்தியாவில் குடியிருந்த வருடங்களின் எண்ணிக்கை போன்றவை அடிப்படை விவரங்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் படி

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் NRC  விதிகளுடன் ஒத்து வருகிறதா எனச் சரிப்பார்க்கப் படும். பெறப்பட்ட NPR தரவுகள், NRC குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளுக்கு முரணாக இருக்கும்போது அவர்கள் இந்த நாட்டில் குடியுரிமை அற்றவர்களாகக் கருதப்படுவர். குடியுரிமை மறுக்கப் படுவர்களை, இந்திய அரசு அகதிகளாகவே கருதும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஊராட்சி, மாவட்டங்கள், மாநிலங்கள் எனப் பெறப்படும் மக்கள் தொகை பதிவேடு, நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடாக உருவாக்கப்பட  உள்ளன.

Cencus- NPR இரண்டுக்குமான வேறுபாடு

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பொதுவாக ஓர் இடத்தில் 6 மாதங்களுக்கு மேல் குடியிருப்பவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்துக் கொண்டு விடும். மக்கள் தொகையின் எண்ணிக்கையை கணக்கிடவே இந்தியாவில் Cencus நடத்தப்படுகின்றன.
இதுவெல்லாம் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிகள்
சூழ்ச்சி சம்பந்தமாக
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான்

وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏                      

அவர்கள் சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.
(அல்குர்ஆன் : 3:54)
இந்த ஆயத்திற்குவிளக்க உரையில் அல்லாஹ்வுடைய சூழ்ச்சி சம்பந்தமாக ஈஸா (அலை)  காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் இமான் பெருமக்கள்

وَمَكْرُ اللَّهِ تَعَالَى خَاصَّةً بِهِمْ فِي هَذِهِ الْآيَةِ وَهُوَ إِلْقَاؤُهُ الشَّبَهَ عَلَى صَاحِبِهِمُ الَّذِي أَرَادَ قَتْلَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ، حَتَّى قُتِلَ، قَالَ الْكَلْبِيُّ: عَنْ أَبِي صَالِحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عِيسَى اسْتَقْبَلَ رَهْطًا مِنَ الْيَهُودِ فَلَمَّا رَأَوْهُ قَالُوا: قَدْ جَاءَ السَّاحِرُ ابْنُ السَّاحِرَةِ وَالْفَاعِلُ ابْنُ الْفَاعِلَةِ، وَقَذَفُوهُ وَأَمَّهُ فَلَمَّا سَمِعَ ذَلِكَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ منهم دَعَا عَلَيْهِمْ، وَلَعَنَهُمْ فَمَسَخَهُمُ اللَّهُ خَنَازِيرَ، فَلَمَّا رَأَى ذَلِكَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ وَأَمِيرُهُمْ، فَزِعَ لِذَلِكَ وَخَافَ دَعْوَتَهُ، فَاجْتَمَعَتْ كَلِمَةُ الْيَهُودِ عَلَى قَتْلِ عِيسَى عَلَيْهِ السَّلَامُ، فثاروا إليه؛ ليقتلوه فبعث الله جِبْرِيلَ فَأَدْخَلَهُ فِي خَوْخَةٍ فِي سقفها روزنة فرفعه إِلَى السَّمَاءِ مِنْ تِلْكَ الرَّوْزَنَةِ، فَأَمَرَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ رَجُلًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُ: طَطْيَانُوسُ أَنْ يَدْخُلَ الْخَوْخَةَ وَيَقْتُلَهُ، فَلَمَّا دخل غرفته لَمْ يَرَ عِيسَى فَأَبْطَأَ عَلَيْهِمْ فَظَنُّوا أَنَّهُ يُقَاتِلُهُ فِيهَا فَأَلْقَى اللَّهُ عَلَيْهِ شِبْهَ عِيسَى عَلَيْهِ السلام، فلما خرج عليهم، ظَنُّوا أَنَّهُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ فَقَتَلُوهُ وَصَلَبُوهُ، 

அல்லாஹுத்தஆலா நாடினால் எதையும் எப்படியும் சூழ்ச்சி செய்வான் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று

இப்படிப்பட்ட ஒரு நேரத்திலும் சமுதாய மக்களுக்காக ஒரு கூட்டம் உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் ஒரு செய்தியைச் சொல்கிறான்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ‏ 

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றும்.
(அல்குர்ஆன் : 61:10)

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ‌ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ‏ 

(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
(அல்குர்ஆன் : 61:11)

يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ‏ 

(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 61:12)

சமீபமாக
அய்யா வழி பால முருகன் அவர்கள் சிறைக்கு செல்லும்போது போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் சபீர் மற்றும் நிர்வாகிகள் இடத்தில் சொல்லி விட்டு சென்ற வார்த்தை..

என்னை மிரட்டி சித்ரவதை செய்து ஒரு வீடியோ பேசி காவல்துறை வாங்கி உள்ளது அதை முஸ்லிம்கள் நம்ப வேண்டாம் நான் சத்தியத்தை பேசினேன் என்னை கொச்சை படுத்தி விடாதீர்கள்

பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவ‌த்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், 'இஸ்லாம்' என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுப‌வர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான‌ சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!

2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்.... அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால்,
"அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்" என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூல‌ம், அவர்கள் "இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது" என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.

இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தகக் கடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே நூல், இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்ற செய்தி வெளிவந்தமை கவனிக்கப்பட வேண்டிய‌தாகும்.

மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் க

இந்திமிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பிரபல கல்லூரியின் ஆராய்ச்சி பேராசிரியராகவும், இனப்படுகொலை கண்காணிப்பு தொடர்பாக ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களையும் உண்மை விபரங்களையும் ஆதோரத்தோடு வெளிக்கொண்டு வந்தவருமான டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அந்த இரண்டு மாநிலங்களில் இனஅழிப்பு நடக்க இன்னும் ஒரு படிமட்டுமே உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கறார்

“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!

மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் குற்றச்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பிரபல கல்லூரியின் ஆராய்ச்சி பேராசிரியராகவும், இனப்படுகொலை கண்காணிப்பு தொடர்பாக ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களையும் உண்மை விபரங்களையும் ஆதோரத்தோடு வெளிக்கொண்டு வந்தவருமான டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அந்த இரண்டு மாநிலங்களில் இனஅழிப்பு நடக்க இன்னும் ஒரு படிமட்டுமே உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.

டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன்
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் இன அழிப்புக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை படி நிலைகளாக எடுத்துரைத்தார்.

அதில், முதல்படியாக வகைப்படுத்தல். அதாவது, இஸ்லாமியர்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என வகைப்படுத்தல்.

இரண்டாவது படி, அடையாளப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் - வெளிநாட்டவர் என அடையாளப்படுத்துவது.

முன்றாவது படி, பாகுபாடு காணுதல். குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நாடற்றவர்களாக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித சிவில் உரிமையும் கிடைக்காமல் செய்வது போன்றவற்றின் மூலம் பாகுபாடு காட்டப்படுகிறது.

நான்காவது படிநிலை, மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பது. குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி - மனித சமூகத்திற்கு எதிரானவர்கள் என வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை, அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பதாகும்.
ஐந்தாவது படிநிலை, இன அழிப்பு செய்வதற்காக நிறுவனம் அமைத்தல். உதாரணம் காஷ்மீரில் இந்திய ராணுவம், அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு அதிகாரிகளை கொண்டுவந்தது.

ஆறாவது படிநிலை என்பது ஒன்றுகுவித்தல், பிரசாரங்கள் செய்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமைப்படுத்த, அவர்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுகுவிப்பதாகும்.

ஏழாவது படி, இன அழிப்புக்காக தயாராகுதல்.

எட்டாவது துன்புறுத்தல். காஷ்மீர் மற்றும் அசாமில் தற்போது நடந்துக் கொண்டிருப்பது.

ஒன்பதாவது, மக்களை அழித்தொழித்தல்.

இறுதியாக பத்தாவது, செய்த படுபாதக செயலை மறுத்தல்.

இவ்வாறு அவர் இந்தியாவில் மோடி அரசு நிகழ்த்தும் சிறுபான்மையின அழிப்பு முயற்சியை ஒப்புமை செய்து விவரிக்கிறார். இன்னும் ஒரு படி நிலை மட்டுமே மீதம் இருக்கிறது. காஷ்மீர் மற்றும் அசாம் மக்கள் அதை மீது அந்த படி நிலை நிகழ்த்தப்பட்டால் அதுவே “இன அழிப்பு” என்று எச்சரிக்கிறார் கிரிகோரி ஸ்டாண்டன்.

وسئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء فقال: الذي لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه

போராடக் கூடிய நமக்கு இன்னொரு முக்கியமான விஷயம் அல்லாஹ் கூறுகிறான்

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏                                                   

عَنْ صُهَيْبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: عَجَبًا لِاَمْ
رِ الْمُؤْمِنِ اِنَّ اَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذلِكَ لِاَحَدٍ اِلاَّ لِلْمُؤْمِنِ، اِنْ اَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَاِنْ اَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ. رواه مسلم باب المؤمن امره كله خير


عمر -رضي الله تعالى عنھ- قال: سمعت رسول الله -صلى الله علیھ وسلم- یقول   :(لو أنكم تتوكلون على الله حق توكلھ لرزقكم كما یرزق الطیر،
.تغدو خماصاً وتروح بطاناً) رواه الترمذي، وقال: 
حدیث حسن      
  
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

                                   
இந்தப் பாசிச அரசின் ஒரே நோக்கம் இந்திய திரு நாட்டில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டியடிக்க வேண்டும் அல்லது இந்துத்துவ சட்டத்தின்கீழ் எந்த உரிமையும் இல்லாமல் அகதிகளாக வாழ வேண்டும் இதனால் நிறைய சதிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!

( اللهم امكر لي ولا تمكر علي.

No comments: