அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 14 February 2013

அர்த்தமற்ற காதலர் தினம்


நேற்றைய தினம் உலகம் முழுக்க காதலர் தினம் வெகுவிமர்சையாக குத்தாட்டங்களுடனும், கும்மாங்களுடனும் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தவார வெள்ளி அரங்கில் நாம் அனைவரும் சங்கமித்திருக்கின்றோம்.   அங்கொன்றும் இங்கொனறும் நடைபெற்ற காதல் கூத்துக்கள் இன்றைக்கு தெருக்கள் தோறும் புகுந்திருப்பதாலும், தீன்குலப் பெண்மனிகளாய் இருக்கும் நம் கண்மனிகளையும் காதல் என்னும் கொடிய வைரஸ் தாக்க ஆரம்பித்திருப்பதினால் கதலர் தினம் குறித்த தகவல்களை சமூகப் பொறுப்புணர்வோடு கருத்துப் பறிமாற்றம் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மார்க்கத்தைத் தாண்டி காதலர் தினம் இந்நாட்டினருக்கும், சமுதாயத்திற்கும் தேவையான ஒன்று தானா? என்று நாம் நடுநிலைப் பார்வையோடும், அறிவுப்பூர்வமாகவும் அனுகினால் நமக்கு கிடைக்கின்ற பதில் உதறித் தள்ள வேண்டிய உருப்படாத முதல்தரக்காரியங்களில் இதுவும் ஒன்றாகும். இதை நிரூபிக்க அதளபாதாளத்திற்குச் சென்று நாம் ஆராய்ச்சி நடத்தத் தேவையில்லை காதலர் தினம் உருவான வரலாற்றைப் பார்ப்பதே போதுமானதாகும்.  

காதலர் தினம் வந்த பாதை Valentine’s Day (வேலண்டைன்ஸ் டே)

வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.

மேற்கத்திய நாடு காதலர் தினத்தை கொண்டாடுகிறது என்றுச் சொன்னால் வேலன்டைன் என்பவரை நினைவுகூறுவதற்காகவே செய்கிறார்கள். வேண்டுமானால் தற்காலத்தில் நாரீகம் என்றப் பெயரில் காமக்களியாட்டங்களுக்கு வேலன்டைன்ஸ் டே தத்து கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதார்த்தமான உண்மை வேலன்டைனை நினைவு கூறுவதற்கே ஆகும். நம் நாட்டின் தேசத்தியாகிகளாகஅனுஷ்டிக்கப்படுபவர்களுடைய தினத்தை எந்த நாடும் கொண்டாடுவதோ, கொண்டாடப் போகுவதோ இல்லை என்கிற போது நாம் ஏன் வேலன்டைன் என்பவருடைய வேலன்டைன்ஸ் டேயை மட்டும் கொண்டாடுகிறோம்.

அடுத்து இன்றைய காதலர் தினம் என்பதே வணிக நோக்கில் இலாபத்தை லம்ப்பாக (மொத்தமாக )ஈட்டித்தரக்கூடிய ஓர் பண்டிகை தினங்களாகவே கணக்கிடப்படுகின்றன. மலர் கொத்துக்களும், வாழ்த்து அட்டைகளும், ரோஜா பூக்களும் இன்றைய தினங்களில் விற்கப்படுவது மட்டும் ஏராளம். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி! அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.
தகவல் தொடர்பும், தொழில் நுட்பமும் நிறைந்திருக்கும் காரணத்தினால் இன்டர்னட் மற்றும் செல்போன்களின் ஆதிக்கத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சரியாக நடுநிசியில் போன் செய்து மோசம் செய்வதும், அடுத்த நாள் பார்க், பீச் என்று சுற்றுவதையுமே காதலர் தினத்தன்று பொலப்பாக வைத்துள்ளனர். போதாதைக்கு ஊடகங்களின் அட்டகாசம்  வேறு இருக்கும். உங்களில் யார் முதலில் காதலை சொன்னீர்கள், உங்க காதலியை முதலில் எங்க பார்தீங்க என்று பேட்டி காணுவர். இதுவெல்லாம் தேவைதானா?. காதல் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பார்களா? வீட்டில் நிச்சையிக்கப்பட்ட திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பாரா? என்று பட்டிமன்றத்தை நடத்துதல். இது சமுதாயத்தின் மிக முக்கியப் பிரச்சனைப் பாருங்க. இன்றைய இளைய சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய  ஊடகங்களே ஏன் இப்படி தவறான வழியில் இழுத்துச் செல்லுகின்றனர். நாளு காசு பார்ப்பதற்காக நாட்டையே நாசம் செய்யலாமா . இத்தகைய காதலர் தினம் நாட்டினை வல்லரசாக்குமா அல்லது வலுவிழந்த அரசாக்குமாஅப்ப இதுக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் யோசிக்கலாம். இஸ்லாம் அதற்கு அழகிய தீர்வினை சொல்லித் தருகின்றது. 

ஒரு பெண்ணினை ஆண் காதலிக்கலாம் என்ற முடிவுக்கு வருவதே அவளின் அழகிய தோற்றத்தைக் கண்டு தன் மனதை பரிக்கொடுக்கின்றபோது தான். அத்தகைய பாதையை இஸ்லாம் ஒரு போதும் திறந்துவைத்ததில்லை. காதலுக்கு எதுவெல்லாம் ஏணிப் படிகளாய் இருக்குமோ அத்தகு படிகளையெல்லாம் உடைத்தெறிகிறது இஸ்லாம். ஒரு பெண்ணை பார்ப்பது விபச்சாரத்திற்கு சமம் என்று கூறி காதலுக்கு ஆணிவேறாய் இருப்பதையே வேறோடு பிடிங்கினார்கள் நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள்.

அன்னியப் பெண்ணை ஏறெடுத்துப்பார்க்காதே

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْؤُولاً

الإسراء: من الآية36

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ * وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

 الآية (النور:30-31

قال النبي صلي الله عليه وسلم

 العين تزني وزناها النظر ، وفي آخره : والفرج يصدق ذلك أو يكذبه
கண் விபச்சாரம் செய்கிறது இன்னும் அதனுடைய விபச்சாரமாகிறது பார்வையாக இருக்கும். மர்மஸ்தானம் அதனை உண்மைபடுத்தும் அல்லது பொய்படுத்தும் என நபிகள் நாயகம் ( ஸல் )அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنِى سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنِى حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِى الطُّرُقَاتِ ». قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا. قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ ». قَالُوا وَمَا حَقُّهُ قَالَ « غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ ».

(بخاري , مسلم)
ஒருமுறை ஸஹாபாக்கள் பாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பெருமானார் பாதையில் அமர்ந்து பேச வேண்டாம். பாதைக்குரிய உரிமையை நீங்கள் நிறைவேற்றுங்கள் என்றதும் பாதைக்கு செலுத்த வேண்டிய உரிமைகள் என்னவென்று கேட்டனர். அப்பொழுது பெருமானார் உரைத்த பதில்களில் ஒன்று பார்வையை தாழ்த்திக் கொள்வது என்பதாகும்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَخْبَرَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - قَالَ أَرْدَفَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - الْفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ ، وَكَانَ الْفَضْلُ رَجُلاً وَضِيئًا ، فَوَقَفَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - لِلنَّاسِ يُفْتِيهِمْ ، وَأَقْبَلَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِى رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - فَطَفِقَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا ، وَأَعْجَبَهُ حُسْنُهَا ، فَالْتَفَتَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - يَنْظُرُ إِلَيْهَا ، فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الْفَضْلِ ، فَعَدَلَ وَجْهَهُ عَنِ النَّظَرِ إِلَيْهَا

(بخاري)
பெருமானாரிடத்தில் சட்டம் கேட்க வந்த பெண்ணை பலுல் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் பார்த்தபோது பெருமானார் அவர்களுடைய தாடையை பிடித்து முகத்தைத் திருப்பினார்கள்.

பெரியார்களின் பேனுதல்

عن سفيان قال: كان الربيع بن خثيم يغض بصره فمر به نسوة فأطرق وغمض عينية حتى ظن النسوة أنه أعمى فجعلن يتعوذن بالله من العمى ويحمدن الله على البصر.
ஒரு சமயம் ரபீஉ இப்னு கைஸம் என்றப் பெரியாரை பெண்கள் கடந்து சென்றனர் உடனே தன்னுடைய கண்களையே மூடிக்கொண்டார்கள். அந்தப் பெண்கள் இவரை குருடர் என்றெண்ணி குருடாகுவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடினர்.

خرج حسان رحمه الله إلى صلاة العيد فقيل له لما رجع: يا أبا عبد الله ! ما رأينا عيداً أكثر نساءً منه، قال: ما وقع بصري على امرأة ولا نظرت على امرأة، فجعل يتعجب من كلامهم.
ஹஸ்ஸான் ரஹ் அவர்கள் பெருநாள் தொழுகைக்கு சென்று வந்தபோது அவர்கள் அருகில் இருந்தவர் இந்தப் பெருநாளைப் போன்று எந்தப் பெருநாளுக்கும் பெண்கள் கூட்டம் இல்லை என்று கூறியபோது  ஹஸ்ஸான் ரஹ் அவர்கள் கூறிய வார்த்தை நான் எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை இன்னும் என் பார்வை எந்தப் பெண் மீதும் விழவில்லை என்பதாகும்.

இப்படி அல்லாஹ் ரஸுலுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு பத்தினியாய் வாழ்ந்த பெரியோர்களின் வரலாறுகள் ஏராளம்! ஏராளம்! வாழ்ந்த காலத்தில் உத்தமிகளுக்கெல்லாம் உத்தமியாய் வாழ்ந்த பாத்திமா( ரலி )அவர்கள் பிறர் பார்வை தன் மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னை நல்லிரவில் அடக்கம் செய்யுமாறு இறக்கும் தருணத்தில் அவர்கள் செய்த வஸ்ஸியத் கற்புக்கரசி என்னும் சர்ட்ஃபிகேட்டையும் பெண்களுக்கு முன்மாதிரி என்ற பட்டத்தையும் தருகின்றது.

காதல் என்ற கொடிய நோய் இன்றைக்கு தீன்குலப் பெண்மனிகளாய் இருக்கக் கூடிய நம் கண்மனிகளையும் தாக்க ஆரம்பித்திருக்கின்றது. காதல் என்றப் பெயரில் ஈமானோடு வாழ்க்கையையும் சேர்த்து இழக்குகின்ற பெண்மனிகள் நம்மில் அதிகரித்து வருகின்றனர்.படிக்கின்ற வயதிலேயே படியைத் தாண்டுகிற பழக்கம் வாடிக்கையாகி வருகின்றது. காதலளிப்பவனை ஹுரோ போன்று சித்தரிக்கப்படுவதும், கேர்ல் ஃபிரண்ட் இல்லாதவன் காலஜில் இருக்கவே தகுதியுள்ளாதவனாகவும் பார்க்குகிற பழக்கம் இளவட்டங்களுக்கு மத்தியில் பெருகிவிட்டிது. இன்றக்கு காதலுக்குள்ள இலக்கணம் என்ன தெரியுமா? பார்த்ததும் காதல், பார்க்காமல் காதல், ஒரு பெண்ணை பார்த்ததும் ஏதோ (chemistry workout) ஆகுமாம். இதுவா காதல்? இல்லை! இதற்குப் பெயர் காமம். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் முடித்து, நகை நட்டுக்களை களட்டிட்டு அவளை கைகழுகும் நிகழ்வுகள் தினந்தோறும் பத்திரிக்கையில் நாம் காணலாம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற நிலைமை மாறி ஒருத்திக்கு பலபேர் ஒருவனுக்கு பலநபர் என்று மாறிவிட்டது. இந்த இலட்சனத்தில் இத்தகைய காதலர்களை அங்கிகரிக்கும் வகையில் ஒரு நாட்டில் காதலர் தினம் என்னும் அத்தகு கன்றாவி தினத்திற்கு பள்ளிக்கூட விடுமுறையாம், கூடவே மக்களையும் ஊக்குவிக்கிறதாம். இத்தகு காதல் கோளாறுகளுக்கு காரணமாக செல்போன், சின்னத்திரை, பெரியத்திரை, கட்டுபாடற்ற வாழ்க்கைமுறை, இன்டெர்நெட், தவறான சகவாசம், கோஎஜுகேஷன், பெற்றோரின் கவனமின்மை என்று பெரிய பட்டியலையே போடலாம். ஆனால் சரியான காரணம் இறையச்சமின்மையும், ஒழுக்கமற்ற வாழ்வும், நபிகளார் வரையறுத்த பாதையை தவறவிட்டதுவே காதல் என்னும் களிசடைகளையும், கன்றாவிகளையும் நம் இளைஞர், யுவதியின் மனதில் பாய்வதற்கு முக்கியக் காரணமாக திகழ்கின்றன. வல்ல அல்லாஹ் இத்தகைய அபாயக் காதலில் இருந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பானாக. ஆமீன்....

No comments: