அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 6 February 2020

நோய்கிருமியும் இஸ்லாமிய தீர்வும்



இன்றைக்கு  நோய்க்கிருமிகளும் சமுகக்கிருமிகளும் அதிகரித்துவிட்டது  இரண்டிற்கும் நோக்கம் ஒன்று தான் மனிதர்களை அழிப்பது ‌.
சமுகக்கருமிகள் காலப்போக்கில் காளாவதி ஆகிவிடுவார்கள் .
நாம் நோய்க்கிருமிகளை பற்றி பார்போம்!
இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் என்பது தான் பேச்சு.

சினாவில் வூஹான் மாநகரில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸீன் தாக்குதலில் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது, பயணிகளின் வழியாக உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது,

 இந்நோய் தாக்குதல் இப்போது பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது.

சீனாவின் வூஹான் மாநகர சந்தை எலிகள் நாய்கள் பாம்புகள் பூனைகள் செத்தவை சாகாதவை என பல்வேறு அருவெறுக்கத்தக்க உயிப்பிராணிகளின் சந்தையாகும். அந்த சந்தையை வீடியோவில் பார்த்தாலே குமட்டல் எடுத்துவிடும்.

அந்த சந்தையிலிருந்து தான் இந்த நோய் தொற்று ஏற்பட்த்தொடங்கியுள்ளது.

இப்போது அந்த சந்தையை சீனா மூடியுள்ளது. அந்த நகரத்திற்கும் சீல் வைத்துள்ளது, அதற்குள்ளாக வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவி உள்ளது,

நேற்று கேரளாவில் ஒரு சிறுவனுக்கும்,சென்னை குரோம்பேட்டையில் ஒரு பெண்ணுக்கும் அந்நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அல்லாஹ் இத்தகைய கொடூர நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதிக்கப் பட்டிருக்கிற சீன நாட்டையும் அதன் மக்களையும் – மற்ற மக்களையும் நம்மையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!’
இஸ்லாத்திற்கும்,ஷரீயத் சட்டத்திற்கும் ,முஸ்லீம்களுகம் எதிர்மறையாக செயல்பட்டு வந்த மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஓர்‌ தண்டனை இது .
சரி இந்த நோய்க்கிருமியைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்


இந்த நேரத்தில் அசைவ உணவுகளில் இஸ்லாம் அனுமதித்த அசைவு உணவு அதன் முறைகள் மட்டுமே ஆரோக்கியமானவை என்பதை நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது.

இஸ்லாம் அனுமதித்துள்ள உணவுகள் மனிதனது ஆரோக்கியம் மற்றும் சரியான சக்தி ஆகியவற்றை மையப் படுத்தியதாகும். இஸ்லாம் அனுமதிக்காத உணவு வழக்கங்கள் எப்போதும் இல்லாவிட்டாலும் கூட அதிகப்படியாக தீமைகளை விளைவிக்க கூடியதாகும்.

«يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات»،

العالم الأزهري، د. أحمد طه ريان - أستاذ الشريعة الإسلامية، عضو هيئة كبار العلماء - يوضح لنا بعض الأطعمة التي حرمتها شريعة الإسلام وفلسفتها في هذا التحريم، فيقول: فلسفة الإسلام في التحليل والتحريم مرتبطة بمصلحة الإنسان، فما فيه مصلحة ومنفعة للإنسان أباحته وحثت عليه، وكل ما يلحق ضرراً بالإنسان حذرت منه، ولذلك نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل كل ذي مخلب، أي الأظفار التي يصطاد بها فريسته كالصقر والنسر وما يشبههما، بخلاف ما ليس له ظفر يصطاد به كالحمام والدجاج وما يشبههما، لأن لحوم الطيور التي تحمل ظفراً ليست طيبة ولا مستساغة في الطعام، ولو حاول إنسان أكلها للفظها بمجرد تذوقها.


كذلك حرمت الشريعة الإسلامية من الحيوانات أكل كل ذي ناب يسطو به على غيره كالسباع والذئاب وما يشبهها، وأحلت ما ليس كذلك كالإبل والبقر والغنم وما يشبهها، قال ابن عباس في الحديث الصحيح: «نهى رسول الله صلى الله عليه وسلم  عن أكل ذي ناب من السباع، وكل ذي مخلب من الطير»


உலகிலேயே சீன சமுதாயம் தான்கட்டுப்பாடற்ற அருவருப்பான உணவுவகைகளை எந்த வித அருவருப்பு மின்றிஉண்ணும் சமுதாயமாக இருந்துவருகிறதும். அதன் காரணமாகவே பலகொடிய வைரஸ்கள் அவர்களைதாக்குகின்றன.

சீன் மக்கள் தங்களது உணவுக் கலாச்சாரம் குறித்து சிந்திக்க வேண்டிய சூழ்நிலையை இந்த கெரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது

 உலக் மக்களும் எச்சரிக்கை அடைய வேண்டும்.

இந்த வைரஸ் பராவமல் இருப்பதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் கூட 14 நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாம் கூறிய நடவடிக்கைகளாகும்.

روى البخاري (5739) ، ومسلم (2219) عن عبد الرحمن بن عوف رضي الله عنه أنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (إِذَا سَمِعْتُمْ بِهِ [يعني : الطاعون] بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْه) .

நோய் தாக்குதலுக்கு உள்ளனவர்களுக்குதனியான வார்டுகளை முதலில்
அமைத்தவர்கள் முஸ்லிம்களேஆவார்கள். அப்படி அமைத்த முதல் நகரம்
பக்தாது ஆகும்.
ஏகத்துவத்துக்கு முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.

தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும். வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகே  உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்))

நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) நோய் நம்மைத் தொற்றிவிடாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழலின் தீங்கிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் பல போதனைகளை போதித்திருக்கிறது இஸ்லாம். (சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக) நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ)

அழுக்கு படிந்த ஆடையை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தனது ஆடையைத் துவைப்பதற்கு எதுவும் இல்லையா? என்று கடிந்து கொண்டார்கள். (மிஷ்காத்) ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தொழுகையைக் கடமையாக்கியது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுக்கு முன்பும் உளு எனும் கை, முகம், கால்களைக் கழுவும் முறையையும் கட்டாயமாக்கியிருக்கிறது, இஸ்லாம். பல் துலக்கும் கலாச்சாரத்தை கடமையாக்காத குறையாக வலியுறுத்தியுள்ளது.

மக்களுக்கு சிரமமில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கியிருப்பேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்தார்கள். பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல; இறைப் பொருத்தத்தையும் தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறைவழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி - 1933)

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் - 3763)

நகஇடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டுவைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி - 2758)

தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)

செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களில் சில

அல்லாஹ் நோய்க்கிருமிகளின் தாக்குதல் களிலிருந்தும் சமூக கிருமிகளின் தாக்குதல்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

No comments: