அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 13 February 2020

இளவர்களுக்கு இறைவனின் போதனை(பிப்ரவரி 14)



இன்றைய நாள் காதலர் தினம்  இதன் பின்னணி வரலாறு பெரும்பாலும் நம் அனைவருக்கும் தெரியும்!
ரோமாபுரியை ஆட்சி செய்து வந்த அரசன் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் அவனது படையில் ஆண்கள் சேரும் விகிதம் குறைவடைந்து கொண்டே போனது. இதை அறிந்த அரசன் அதற்கான காரணம் ஆண்கள் காதல் வயப்பட்டும் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ நினைத்தும் படையில் சேர்ந்து போரில் உயிர் போய்விட்டால் குடும்பத்தை பார்க்க எவரும் இல்லை
என்ற காரணத்தாலும் படையில் சேராமல் இருப்பது
தெரியவந்தது. உடனே ஒரு அதிர்ச்சியான ஒரு கட்டளையை பின்பற்றசொசொன்னான். அதாவது
ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தான். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

தன் நாட்டு அரசனின் கட்டளைக்கு மாற்றமாக தரகர் வேலை பார்த்து திருட்டுத்தனமாக திருமணத்தை செய்து வைத்து கேவலமான முறையில் தண்டனை பெற்ற ஒருவனின் பெயரால் இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது‌.
வரலாறும் கேவலம் இந்த தினத்தில் நிகழும் காரியங்களும் ஆக கேவலம்!

ஆண் பெண் முறைகேடான உறவை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாம் மனிதர்களுக்கு ஒரு விஷயத்தை ஏவுகிறது என்றால் அதன்மூலம் மனிதகுலம் அனைவருக்கும் நன்மையை உலக முடிவு நாள் வரை காணமுடியும்

இஸ்லாம் ஒரு விஷயத்தை தடுக்கிறது என்றால் உலக முடிவு நாள் வரை மனித குலத்திற்கு பயங்கரமான பின்விளைவுகள் இருக்கும் என்பதை சமீப காலத்தில் நாம் பார்த்து வருகிறோம்.
நமது சமூகத்தில் சில பிற்போக்குவாதிகள் இப்படிச் சொல்வார்கள் காதல் புனிதமானது என்று.
ஒரு விஷயம் இன்றைய தினம் பிப்ரவரி 14ல் உலகம் முழுவதிலும் திருட்டுத்தனமாக காதல் செய்து கொண்டிருக்கும் ஜோடிகள் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொள்வதும், முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதிலும், இத்தோடு நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சில கேவலமான செயல்களில் ஈடுபட்டு, அன்றைய ஒரு நாள் சந்தோஷத்திற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்துமனநோயாளியாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்களையும் ,யுவதிகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

காதல் எனும் போர்வையில் கழிசடை யான செயல்களை செய்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளைஞர்கள் யுவதிகள் நிறைய!
இதில் வருத்தம் என்வென்றால் அல்லாஹ் ,ரஸூலை ஏற்ற முஸ்லீம்களும் இருகிறார்கள்!

قال رسول الله صلى الله عليه وسلم: "إن الله كتب
 على ابن ءادم حظه من الزنا أدرك ذلك لا محالة فالعين تزني وزناها النظر واليد تزني وزناها اللمس والرجل تزني وزناها الخطى واللسان يزني وزناها المنطق والفم يزني وزناه القبل والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذبه".

النظر بشهوة أي بتلذذ للأجنبية حرام، وتكليمها ليتلذذ بهذا الكلام حرام، ولمسها بدون حائل أيضًا حرام. .                                                               
أغلب البشر لا يسلمون من هذا، وأكثر هذا كله   النظر، زنا العين.                                                 .
بعض الناس يكلمون خطيبتهم قبل العقد بشهوة، بتكليمها يتلذذون هذا أيضا حرام.                       
ஆனால் இந்த செயல்களெல்லாம் காதல் என்ற பெயரால் நடந்தால் தவறில்லை என்று ஒழுக்கங்கெட்ட சமூக விரோதிகளால் சினிமாக்கள் மூலமும், கதைகள் மூலமும் சித்தரிக்கப்படுகிறது.

வழிகேட்டு ஒழுக்கங்கெட்டுப் போனவர்கள் இந்த சித்தரிப்புகளை நடைமுறைப் படுத்தலாம் ஆனால் நல்வழியில் ஒழுக்கத்துடன் நடக்க விரும்பும் இறைநம்பிக்கையாளன் இதை எதிர்ப்பவனாகத் தான் இருப்பான்.

இறை வேதங்கள் மற்றும் இறைத்தூதர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளாவிட்டால் கூட பொதுவான நியாயமும் மனசாட்சியும் ஒரு பெண்ணை தவறாக தொடுவதும் அவளிடம் வரம்புமீறிய பேச்சுக்களைப் பேசுவதும் மற்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்வதும் கூடாதென்றுதான் சொல்கின்றன.

காதலன், காதலி என்று சொல்லப்படுபவர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசங்கொண்டு திருமண பந்தத்தின் மூலம் இணைய விரும்புகிறவர்கள் அதற்க்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தானே தவிர கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல.

காதலிப்பவர்கள் திருமணம் செய்யாமலும் போகலாம், அப்படித்தான் பலருக்கும் நடக்கிறது. இவ்வாறு இருக்கையில் மேற்கண்ட தவறுகளை செய்துவிட்டு பிரிந்தால் இறைவனுக்கு மாறு செய்த குற்றத்தோடு வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்த குற்றமும் வந்து சேரும். தவறுகள் திருமணத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் கூட! ஏனென்றால் திருமணம் செய்து கொள்பவர் அவ்வாறான தவறுகள் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு தான் திருமணம் செய்கிறார்.
காதலிப்பவர்கள் கூடாத காரியங்கள் செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல!
رواية: لا يخلون أحدكم بامرأة فإن الشيطان ثالثهما.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]
பேண வேண்டியது. ஏனென்றால் அவர்களைஇது எல்லோருக்கும் பொதுவான எச்சரிக்கை என்றாலும் காதலிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் ஷைத்தான் இலகுவாக வழிகெடுத்து விட வாய்ப்புள்ளது.

ஒரு ஆண் அன்னியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் தடை உத்தரவு. இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அல்லாஹ் கூறுகிறான்:
                             قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِن.             أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ.    خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ .                                             
“இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
மேலும் இறைனபிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும்.” [அல்குர்ஆன் 24:30,31]

இந்த வசனங்களில் ஆண், பெண் இருதரப்பினருக்கும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

இது எல்லோருக்கும் பொதுவான கட்டளைதான், ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இதை மீறக் கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல, இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம்
.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.” நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

தான் விரும்பும் பெண்ணை தொடர்ந்து பார்ப்பதும் கூட தவறு என்று கூறும்போது காதலில் இதுகூட செய்யக்கூடாதா என்ற கேள்வி கேட்கப்படலாம்.

இறைநம்பிக்கையுடன் அவனது வழிகாட்டுதல் படி செயல்படவேண்டுமென்று நினைப்பவர் இதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இறைவழிகாட்டுதலுக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் ஒருத்தியை காதலி என்று சொல்லிக்கொள்வதால், அவள் அன்னியப் பெண் என்கிற நிலை மாறிவிடாது, ஒரு அன்னியப் பெண்ணிடம் பேண வேண்டிய வரைமுறையை அவளிடத்திலும் பேண வேண்டும்.

இதனை இறைவழிகாட்டுதல் மட்டுமின்றி மனசாட்சியும் வலியுறுத்தத்தான் செய்கிறது. தவறான பார்வை மட்டுமின்றி தான் விரும்பும் பெண்ணுடன் கூடாத அசிங்கப் பேச்சுக்களைப் பேசுவதும், தவறான எண்ணத்துடன் தொடுவதும் சிறு விபச்சாரம் என்ற அடிப்படையில் இறைவனிடம் தீமையாக பதியப்படும். அதற்குத் தகுந்தாற்போல் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.
இதுவெல்லாம் இஸ்லாம் கூறும் தனி மனித ஒழுக்கங்கள் ஆகும்.
சற்று யோசித்துப் பாருங்கள் இஸ்லாம் சொல்வது போல் இருந்தாள் இந்த உலகத்தில் ஆனால் பெண்ணிற்கும் பெண்ணினால் ஆணிற்கும் எந்த ஆபத்தும் இருக்காது.

 இதை மீறுவதால் தான் நிறைய பெண்கள் சில ஆண்களின் நம்பி கருப்பை இழக்கிறார்கள் நிறைய ஆண்கள் பெண்களின் நம்பி தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.!

பெண்களைப்பற்றி  அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ.     نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي.    الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ.       عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ  مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ.       لَعَلَّكُمْ تُفْلِحُونَ.             
                  
இறைநம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்திக்கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதில் (வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளை அவர்கள் நெஞ்சுப்பகுதிகளில் போட்டுக்கொள்ளவும் மேலும் தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களான அடிமைகள் அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தம் அலங்காரத்தில் தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் நம்பிக்கயாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹுவின் பக்கம் மீளுங்கள்” அல்குர்ஆன் 24:31

 இந்த வசனத்தில் ஒரு பெண் தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள் யார் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான்.

இந்தப் பட்டியலில் காதலன் என்று ஒருவன் இல்லை, தன் கணவனாக வரவேண்டுமென்று ஒருவனைப் பற்றி ஒரு பெண் விரும்பிவிடுவதால் அவனுக்கு கூடுதல் சலுகை கிடையாது என்பதை உணரவேண்டும்.

இந்த வசனத்தில் அந்நிய ஆணின் கவனத்தை திருப்புகிற விதத்தில் காலை வேகமாகத் தரையில் தட்டிக் கூட நடக்கக் கூடாது என்று தடை செய்கிறான் இறைவன்!

ஒரு அந்நிய ஆணை கெட்ட எண்ணத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது என்பதில் ஒரு பெண் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறான். அப்படியிருக்கையில் ஒருவனின் தவறான ஆசைகளை தூண்டுகிற விதத்தில் நடந்துகொள்வதும் தவறு செய்ய அனுமதிப்பதும் எப்படித் தகும்?

இந்த விஷயங்களை எல்லாம் மக்களும் கடைப்பிடித்தால் வன்புணர்ச்சிகள் குறையும் , பெண்களின் கற்புகள் பாதுகாக்கப்படும் ,இளைஞர்களின் வாழ்வு முன்னேறும்,சுற்றுலா இடங்களுக்கு குடும்பத்தோடு போகலாம்,
இஸ்லாமிய போதனைகளை ஏற்று நடக்கும் பாக்கியத்தை நாம் அனைவருக்கும் தருவானாக!

No comments: