இன்றைக்கு இந்திய மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களின் குடி உரிமைக்காக தெருக்களில் வந்து பெண்கள் உட்பட! போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினரே அவராகவே ஒரு குற்றத்தை சித்தரித்து இந்த இஸ்லாமிய மக்களின் மீது திணிக்கிறார்கள்.
எல்லாம் தெரிந்த அரசும் காவல்துறைக்கு சாதகமாக பேசுகிறது.
மக்களுக்காக மட்டுமே பணியாற்ற கூடிய காவல்துறையின் நிலையும், அரசின் நிலையும் இப்படி என்றால் அப்ப மக்களின் நிலைமை....?
உரிமையையும் பறித்து பாதுகாப்பும் இல்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?
கவிக்கோ அப்துற் ரஹ்மான் கவி நடையில் சொல்வார் இல்லையா?
சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன்
மக்கள் அனைவரும் அநீதி இழைக்கப்பட்டவராக இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இரண்டு மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
- [عن عبدالله بن عباس:] أنَّ النبيَّ ﷺ قالَ. يَومَالفَتْحِ: لا هِجْرَةَ بَعْدَ الفَتْحِ ولَكِنْ جِهادٌ ونِيَّةٌ، وإذا اسْتُنْفِرْتُمْ فانْفِرُوا.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், '(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது; ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி (உங்கள் தலைவரின் தரப்பிலிருந்து) கோரப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2825.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரத் என்பது இல்லை ஆனால் போராட்டங்கள் கியாமத் நாள் வரைக்கும் தொடங்கும்.
இஸ்லாமிய வரலாற்றில் நிறைய போராட்டங்கள் நடந்திருக்கிறது. அல்லாஹ்வின் மீது முழுநம்பிக்கை வைத்து போராடிய முஃமின்கள்
தோற்றதாக சரித்திரம் இல்லை
ஏன் தோல்வி இல்லை என்று தெரியுமா?
அல்லாஹுத்தஆலா சொல்லுவான்
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ.
நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.
(அல்குர்ஆன் : 30:47)
இந்த ஆயத்தின் மூலம் ஒரு முஃமினுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமை.
அப்பொழுது உண்மையான முஃமின்களாக வாழ்பவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி இருக்கும் ஏன் இது அல்லாஹ்வின் வாக்குறுதி!
கொஞ்சம் வரலாறுகள் எடுத்துப் பாருங்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்ரூத்தை வெற்றிகொண்டது, முஸா அலைஹிஸ்ஸலாம் பிர்அவ்னை வெற்றி கொண்டதும்,நமது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப்போர் ,உஹதுப் போர் ,கந்தக்போர், போன்ற பல்வேறு போர்க்களத்தில் வெற்றி பெற்றதற்கும்
ஆக பெரும் காரணம் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை தான் இக்கட்டான சூழ்நிலை தனக்கு துணையாக யாரும் இல்லை என்ற கட்டம் ஆனாலும் மனம் தளரவில்லை அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கை குறையவில்லை அதனால் அல்லாஹ் வெற்றியை கொடுத்தார்
நமது இந்திய தேசம்
அன்னிய,ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டு சுதந்திர தேசமாக மாறியதன் பின்னணியில் மதம்,இனம்,மொழி இவற்றையெல்லாம் கடந்து ஒட்டுமொத்த மக்களும் ஓரணியில் திரண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். இருப்பினும் இந்திய சுதந்திரப் போராட்டப் பங்களிப்பில் தங்களது சதவிகிதத்தை விடவும் அற்பணிப்புகள் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களில் நிரம்பியிருக்கின்றன.
வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் வெற்றி பெறுவதற்கு எந்த ஒரு காரணமும் முஃமீன்களிடம் இல்லை இறை நம்பிக்கையை தவிர!
இறை நம்பிக்கையோடு வாழும் முஃமின்களுக்கு அல்லாஹ் உதவி செய்வது அவன் மீது கடமை!
ஏனென்றால் இந்த நேரத்தில் நமக்கு ஆட்களின் பலத்தை விட ஈமானிய பலம் மிக மிக முக்கியம்.
وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (122) [آل عمران :
122]
நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:122)
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (160) [آل عمران : 160]
அல்லாஹ் உங்களுக்கு உதவி
செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:160)
இதே முஃமினுடைய தன்மைகளைப் பற்றி இறைவன் சொல்லும்போது
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11) [المؤمنون : 1 – 11]
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1-11)
முஃமீனுக்கு உண்டான எல்லாம் தன்மைகளும் நம்மிடத்தில் கொண்டுவந்த பிறகு அநியாயக்காரர்கள் இடத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ
تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ لَا تَعْلَمُوْنَهُمُ اَللّٰهُ يَعْلَمُهُمْ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 8:60)
وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள்; நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:61)
وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (உங்களை
பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன்தான் உங்களை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
இந்த மூன்று குர்ஆன் ஆயத்து என்ன சொல்லுகிறது என்பதை ரத்தினச் சுருக்கமாக பார்த்தோமென்றால் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு முன்னாள் முஸ்லிம்களாகிய இருக்கக்கூடிய நாம் அவர்களுக்கு எதிராக நம்முடைய பலத்தை நம்முடைய திறமையை நம்முடைய ஆயுதங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்றும்.
அதேபோல அவர்கள் சமாதானமாக வந்தாள் நீங்களும் சமாதானமாக போங்கள் அந்தப் பொறுப்பை அல்லாஹ்விடமே சாட்டுங்கள் என்றும் சொல்லுகிறான்.
அல்லது அந்த எதிரிகள் உங்களுக்கு சதி செய்தால் அல்லாஹ்வே உங்களுக்கு போதுமானவன் நான்தான் உங்களை உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களை கொண்டும் பலப்படுத்துகிறேன்.
கடைசியாக உள்ள அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்லுகிறான் முஃமின்களுக்கு உதவி செய்வது எண்ணின் மீது கடமை என்று.
எனவே எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நமக்கு ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அணு அளவு கூட குறைத்து விடாமல் எல்லா விஷயத்திற்கும் தயாராக நாம் இருப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தௌபீக் செய்வானாக!
No comments:
Post a Comment