அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 23 February 2017

இஸ்லாம் பெண்களுக்கு எதிரானதா?



உலகிலே இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே தொடர்பிரச்சனைகளையும், தொல்லைகளையும் இடைவிடாமல் இஸ்லாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருகின்றது. இஸ்லாமிய வளர்ச்சியையும், எழுச்சியையும் கண்டு சகித்துக்கொள்ள முடியாத, ஜீரனிக்கமுடியாத பாஸிச விஷமிகளாலும், வக்கிர புத்தி படைத்த அக்கிரமக்கார யூத, கிறுத்துவர்களாலும் இஸ்லாத்திற்கு எதிராக மடைத்தனமான, பொய்க்கு பஞ்சமில்லாத, போலிப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது, பெண்களை விலங்கினங்களைப் போல் நடத்துகிறது, சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய பெண்களை நான்கு சுவற்றுக்குள் வைத்து பூட்டுகிறது, மூலையில் முடங்கச் செய்கின்றது. போதாதைக்கு பர்தா என்ற ஓர் வன்கொடுமையை சட்டமாக திணித்து ஒட்டுமொத்த பெண்சுதந்திரத்திற்கும் வேட்டு வைக்கின்றது என்றெல்லாம் தங்களால் இயன்ற கட்டுக்கதைகளை கட்டவிழ்துவிட்டனர். இதன் விளைவு இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குர்ஆனையும், ஹதீஸையும், இஸ்லாமிய வாழ்வியலையும் கையிலெடுத்து ஆராயத் தொடங்கிய பலபேர் உண்மையை உணர்ந்து, மனம் நிறைந்து முஸ்லிம்களாய் மாறினர், மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உலகறிந்த உண்மை. 
 

பெண்களுக்கு எதிரான, முரனான கருத்துக்களை குர்ஆனிலோ, நபிமொழியிலோ, நபிவழியிலோ ஒரு வரி கூட நம்மால் பார்க்க இயலாது. வேண்டுமென்றால் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு சாதகமாகவும் ஆண்களுக்கு பாதகமாகவும் சட்டங்களும், சலுகைகளும், உரிமைகளும் பெண்களுக்கு கூடதலாக வழங்கப்பட்டிருக்கமே ஒழிய பெண்ணுரிமையை பாதிக்கின்ற விஷயங்கள் இஸ்லாத்தில் துளியும் இல்லை. உலகிலே பெண்களை ஒரு போதைப்பொருட்களாக, காமப்பொருட்களாக சித்தரிக்கப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டு வந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான எல்லா உரிமைகளையும், சலுகைகளையும் பிரகடனம் செய்தது. அதைப் பார்த்து இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டவர்களும், இதனை எதிர்த்து எதிரியாய் நின்றவர்களும் ஏராளம். 

பெண்களுக்கு வழங்கும் பிறப்புரிமை

பெண்களுக்கு பிறப்புரிமையை வழங்கியதே இஸ்லாம் தான். குழந்தை கருவுக்குள் இருக்கும்போதே சவக்குழியைத் தோன்றி தயார்நிலையில் வைத்துக் கொண்டு பிறக்கும் பிள்ளை ஆணாக இருந்தால் எடுத்து வளர்ப்பது பெண்ணாக இருந்தால் புதைத்து கொள்வது என்ற வைராக்கிய நெஞ்சோடு வாழ்ந்து வந்த மக்களையும் மாற்றியது இஸ்லாம் தான். 

وكان الرجل من العرب إذا ولدت له بنت فأراد أن يستحيها ألبسها جبّة من صوف أو شعر ترعى الإبل والغنم في البادية وإذا أراد أن يقتلها تركها حتى إذا صارت سداسية قال أبوها لأمها طيّبيها وزيّنيها حتى أذهب بها إلى أحمائها وقد حفر لها بئراً في الصحراء فإذا بلغ بها البئر قال لها : انظري إلى هذا البئر فيدفعها من خلفها في البئر لم يهيل على رأسها التراب حتى يستوي البئر بالأرض ،
 وقال ابن عباس : كانت المرأة في الجاهلية إذا حملت وكان أوان ولادتها حفرت حفرة فتمخضت على رأس الحفرة فإذا ولدت جارية رمت بها في الحفرة ، وإن ولدت غلاماً حبسته ، وكانت طوائف من العرب يفعلون
 தப்ஸீர் கஷ்ஷாப்


குர்ஆனிலே அல்லாஹ் இஸ்லாம் வருவதற்கு முன் பெண்களின் நிலையைப் பற்றி குறிப்பிடும்போது

وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ

 இப்படி பெண்ணை பெற்றெடுப்பதே கேடு, தருத்தரியம், முஸீபத்து என்றெண்ணியவர்களை பெண்ணை பெற்றெடுப்பவர் பாக்கியசாலி, அதிர்ஷடசாலி, குடுத்து வைத்தவர் என்ற நினைப்புக்கு சொந்தக்காரராக மாற்றியது என்றால் குர்ஆனும், நபிகளார் போதித்த பொன்மொழிகளும், நபிமொழிகளுமே காரணம்.

 பெண்களை பெற்றெடுத்து வளர்ப்பது பற்றிய பொன்மொழிகள்

فعن ابن مسعودٍ أنه قال: سألتُ رسول الله أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قال: "أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ". قلت: ثُمَّ أَيُّ؟ قال: "أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ". قال: ثُمَّ أَيُّ؟ قَالَ: "أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ 
"
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அடுத்த பெரிய பாவமாக பெண்களை வருமைக்கு பயந்து உலகத்தில் காலடிஎடுத்துவைப்பதற்கு முன்பாகவே கொல்வதை பெருமானார் குறிப்பிட்டது.

عن عائشة قالت : جاءتني مسكينة تحمل ابنتين لها فأطعمتها ثلاث تمرات فأعطت كل واحدة منهما تمرة ورفعت إلى فيها تمرة لتأكلها فاستطعمتاها ابنتاها فشقت التمرة التي كانت تريد أن تأكلها بينهما فأعجبني حنانها فذكرت الذي صنعت لرسول الله صلى الله عليه و سلم فقال : ( إن الله قد أوجب لها الجنة وأعتقها بها من النار )

ابن ماجة

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு ஏழையான மிஸ்கீன் பெண்மணி என்னிடத்தில் தன்னுடைய இரு குழந்தைகளையும் சுமந்து வந்தாள். எனவே நான் அவளுக்கு ஒரு பேரித்தம் பழத்தை கொடுத்தேன். அதனை அவள் சாப்பிடுவத்ற்கு கரத்தை தன் வாயின் பக்கம் நீட்டியபோது அவளுடைய இரு குழந்தைகளும் அப்பழத்தை கேட்டன. எனவே அவள் அந்தப் பழத்தை இரண்டாக பிழந்து தன்னுடைய இரு குழந்தைக்கும் ஊட்டினாள். அவளுடைய இரக்கம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இதை நான் பெருமானார் ஸல் அவர்களிடத்தில் கூறினேன் அப்பொழுது பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள் நிச்சையமாக அல்லாஹ்வாகிறவன் அப்பெண்ணிற்கு சொர்கத்தை கட்டாயமாக்கிவிட்டான் இன்னும் அவளை நரகத்திலிருந்து விடுவித்துவிட்டான் என்றார்கள்.



عن عُقْبَةَ بْنَ عَامِرٍ رضي الله عنه قال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ كَانَ لَهُ ثَلاثُ بَنَاتٍ ، فَصَبَرَ عَلَيْهِنَّ ، وَأَطْعَمَهُنَّ وَسَقَاهُنَّ وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ كُنَّ لَهُ حِجَابًا مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ

 ابن ماجه (3669)

எவரிடத்தில் மூன்று பெண்மக்கள் இருந்து அவர்களடித்தில் பொருமையோடு நடந்து அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க பானமும், உடுத்த உடையும் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து கொடுத்தாரோ அவருக்கு அந்த பெண்பிள்ளைகள் கியாமநாளிலே நரகத்திலிருந்து திரையாக, தடுப்பாக ஆகியிருப்பர் என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள். இப்படி இஸ்லாத்தின் வழிநெடுகிழும் பார்த்தால் பெண்களை பெற்றுடுத்தவன் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்.  பெண்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினால் அவர் ஒரு பாக்கியசாலி, ஒரு வேலை கஞ்சிக்கே வழியில்லாதவனும் தன் பெண்மக்களை நல்லமுறையில் வளர்த்தால் அவருக்கு சுவனம் நிச்சயம் என்ற செய்திகளை பார்க்கும் போது பெண்களுக்கு பிறப்புரிமையை இவ்வுலகில் வழங்கியதே இஸ்லாம் தான் என்பதை நம்மால் தெளிவாக உணர முடியும். அதே சமயம் சமீபத்திய கடந்த 2012 ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 2529979 நபர்கள் கருகலைப்பு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கணக்கில் வராமல் இன்னும் ஏராளமான நபர்கள் இருப்பர். எப்படி இஸ்லாம் பெண்களை நல்லமுறையில் பெற்றெடுத்து வளர்ப்பது கடமை, கட்டாயம் என்கிறதோ அதே போன்றே அவளை பெற்றெடுக்காமல் கொள்வது பெரும்பாவம் அவன் ஒரு நரகவாதி என்ற சான்றிதழை வழங்கி இது போன்ற கருகலைப்புக்கும் தடைவிதிக்கிறது. 

 قال النبي صلي الله عليه وسلم الوائدة في النار
பெண்ணை புதைப்பவன் நரகத்திலே இருப்பான்.

பெண்களுக்கான கருத்துச் சுதந்திரமும், மஹரும்

இஸ்லாம் பெண்களுக்கு வழங்குகிற உரிமைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது கணவன் மனைவிக்கு வழங்கவேண்டிய மஹர் என்னும் மாப்பிளை வீட்டார் சீதனம். ஒரு பெண்ணை திருமணம் முடிக்க நினைத்தால் இஸ்லாமிய வழக்கில் மஹர் கொடுக்காமல் அத்திருமணம் சாத்தியமாகாது. அந்த மஹர் தொகையையும் பெண் பொருந்திக் கொள்ளும் அளவுக்கு இருத்தல் வேண்டும். ஒரு பெண் இலட்ச ரூபாய் மஹராக கேட்டால் அதை ஒப்படைக்காமல் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளமுடியாது என்பது இஸ்லாமியச் சட்டம். இச்சட்டம் ஆண்களுக்கு பாதகமான அதே சமயத்தில் பெண்களுக்கு சாதகமானது என்பதையும் விளங்க வேண்டும். எந்த ஒரு மதத்திலும் இது போன்ற சலுகைகள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக வரதட்சனை என்னும் பணப்பேய் தான் சமுதாயத்தில் நிறைந்து காணப்படுகிறது. இஸ்லாத்தில் பெண்ணுக்கு காசு கொடுக்காமல் திருமணம் நடக்காது இதற்கு நேர்முரனாக சமுதாயத்தில் ஆணுக்கு பெண்வீட்டார் பணம் கொடுக்காமல் திருமணம் நடக்காது. இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் இன்றைய இஸ்லாமிய சமுதாயமும் சீர்கெட்ட இந்தக் கலாச்சாரத்திற்குள் சிக்கி தவிக்கிறது என்பதே ஆகும். பெண்ணை திருமணம் முடித்து மணமகன் வீட்டில் மணப்பெண் புகும் பொழுது அவளோடு சேர்ந்து சீர்வரிசைகளும், சீதனங்களும் புகுந்துவிடுகின்றன. படிப்பிற்கேற்றார் போன்று வேலை என்பது மாதிரி படித்த மாப்பிள்ளைக்கேற்றார் போன்று வரதட்சனை. அந்தப் பெண் புகுந்த வீட்டிற்கு புதிதாக மட்டும் செல்வதில்லை கூடவே உடுத்தகின்ற துணியிலிருந்து பல் துளக்க பிரஷ், பேஸ்ட், குளிக்கும் வாளி வரைக்கும் கூட்டிச் செல்கிறாள். இந்த இடத்தில் கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் அரங்கேறிய ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

عن عبد الله بن مصعب قال: "قال عمر رضي الله عنه: "لا تزيدوا مهور النساء على أربعين أوقية، وإن كانت بنت ذي الغُصّة - يعني: يزيد بن الحصين الحارثي - فمن زاد ألقيت الزيادة في بيت المال، فقالت امرأة من صفّ النساء طويلة، في أنفها فَطْسٌ: "ما ذاك لك"، قال: "ولم؟" قالت: "لأن الله تعالى يقول: {وآتَيْتُم إِحْدَاهُنَّ قِنْطَاراً فَلاَ تَأْخُذوا منه شَيئاً أَتَأْخُذونَه بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً}" [النساء: 20]، فقال عمر رضي الله عنه: "امرأة أصابت ورجل أخطأ".

ஆண்கள் பெண்களுக்கு மஹர் அளவுக்குமீறி கொடுத்து வந்த சூழ்நிலையில் உமர் ரலி அவர்கள் மக்களைக் கூட்டி இனிமேல் 40ஊக்கியாக்களைவிட அதிகமாக மஹரை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கூறியபோது அக்கூட்டத்திலிருந்து ஒரு பெண்மனி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த ஒரு ஜனாதிபதியை நோக்கி பேசினார்கள் உனக்கு அது (அந்த உரிமை) இல்லை. உடனே உமர் ரலி அவர்கள் காரணத்தை வினவியபோது அப்பெண்மனி கூறினார்கள். அல்லாஹ்வே தன் திருமறையில் நீங்கள் அப்பெண்மனிகளில் ஒருவருக்கு குவியல் அளவிற்கு கொடுத்தாலும் அதிலிருந்து ஒரு வஸ்துவைக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டான் என்றார்கள். அப்பொழுது உமர் ரலி அவர்கள் கூறினார்கள் பெண் (சரியானதை) அடைந்துவிட்டால் ஆண் தவறிழைத்துவிட்டான். இச்செய்தியை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் பெண்களுக்குண்டான மஹரை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை ஒரு ஜனாதிபதி நினைத்தாலும் கூட மாற்றி அமைக்கின்ற உரிமையோ, சக்தியோ கிடையாது என்று இச்சம்பவத்தின் மூலம் உணருகின்ற அதே வேளேயில் ஒரு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகவும் தன் கருத்தை பதிவு செய்கின்ற உரிமையை ஒரு சாதாரன பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்குகிறது என்பதே ஆகும். ஹதீஸ்களில் அப்பெண்ணின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பதிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத அடிதட்டு குடிமக்களில் கட்டுப்பட்ட ஒரு பெண்ணாகத்தான் அவர்கள் இருப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. அப்பெண்மனி தனக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று யோசிக்காமல் அப்பெண்மனி சரியானதை சொல்லிவிட்டால் என்று உமர் அவர்கள் பாராட்டியது அவர்களின் நீதத்தையும் இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்குன்டான உரிமைகளையும் நமக்கு போதிக்கின்றது.

குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு வழங்கப்படுகிற உரிமை


ஒரு பெண்ணை அவளுடைய அனுமதி இல்லாமல் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் ஒரு போதும் இடம் தருவதில்லை. தோலில் போட்டு சுமந்த தந்தையாக இருந்தாலும் முதலில் மணப்பெண்ணின் அனுமதியும், சம்மதமும் இருப்பது திருமணத்திற்கு இஸ்லாம் வைத்திருக்கின்ற நிபந்தனை. பெருமானார் ஸல் அவர்கள் கூறுவார்கள்

 وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ
கன்னிப்பெண் அனுமதி அளிக்கும் வரை திருமணம் முடித்து வைக்கப்படாது.

عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْىَ ثَيِّبٌ ، فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - فَرَدَّ نِكَاحَهُ
 ஒரு அன்சாரியைச் சார்ந்த பெண் அவருடைய விருப்பம் இல்லாமல் திருமணம் முடித்து வைக்கப்படுகின்றது. இதை பெருமானாரிடத்தில் வந்து கூறியதும் அத்திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இப்படி இஸ்லாமிய மார்க்கம் தருமணத்திற்கான அளவுகோலை நிர்ணயிக்கும்போது முழுக்க முழுக்க பெண்களுக்கு சாதகமாக நிர்ணயிக்கின்றது . ஆனால் இங்கு இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீசப்படுகின்ற குற்றச்சாட்டோ சற்றும் பொருத்தமில்லாத இஸ்லாம் பெண்ணுரிமையை பரிக்கின்றது என்பதாகும்.

கணவன் மனைவிக்கு தரவேண்டிய உரிமை

ஒரு கணவன் தன் மனைவியடத்தில் ஒழுக்கமுள்ளவராகவும், சிறந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்களை நன்முறையில் நடத்த வேண்டும். தான் வைத்த்து தான் சட்டம் என்ற ரீதியில் கட்டினமனைவியை துன்புரறுத்தவோ, விரட்டி அடிக்கவோ கணவனுக்கு உரிமையில்லை. அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவான்
 
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ) النساء/19

அவர்களிடத்தில் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்.

وقوله صلى الله عليه وسلم : ( خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي ) رواه الترمذي

குடும்பத்தாரிடத்தில் சிறந்தவராக இருப்வர் உங்களில் சிறந்தவராக இருப்பார் நான் என்னுடைய குடும்பத்தாரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன் என்று பெருமானார் ஸல் கூறியுள்ளார்கள்.

" عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ:
إِنَّ الرَّجُلَ إِذَا سَقَى امْرَأَتَهُ مِنَ الْمَاءِ أُجِرَ.
ஒரு கணவன் தன் மனைவிக்கு தண்ணீர் புகட்டினால் கூட அதற்கு கூலி கொடுக்கப்படும் என்று பெருமான் ஸல் கூறினார்கள்.
عَنِ الأَسْوَدِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - يَصْنَعُ فِى أَهْلِهِ قَالَتْ كَانَ فِى مِهْنَةِ أَهْلِهِ ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ  إِلَى الصَّلاَةِ .
பெருமானார் ஸல் வீட்டில் தன் குடும்பத்தாரிடத்தில் என்ன செய்வார்கள் என்று கேட்கப்பட்டபோது ஆயிஷா அம்மையார் கூறினார்கள் தன்னுடைய குடும்பத்தாருடைய வேலையில் இருப்பார்கள். தொழுகைநேரம் வந்துவிட்டால் தொழுகைக்கு சென்றுவிடுவார்கள்.
இப்படி கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் இஸ்லாம் அழகாக பட்டியலிடுகின்றது. வீட்டிற்கு வெளியே உழப்பதோடு மட்டும் கணவனுடைய பொறுப்பு முடிந்து விடாது தன் மனைவியினுடைய வீட்டு வேலையிலும் கணவன் பங்கெடுத்து ஓர் பாட்னராக இருக்கவேண்டும். அவளுக்கு ஓர் ஒத்தாசையாகவும் இருக்கவேண்டும். நல்ல மனிதன் என்பவன் அவனுடைய வெளிப்பழக்கவழக்கங்களை வைத்து மட்டும் எடைப்போடப்படுவது கிடையாது வீட்டிற்கு சிறந்தவனே நாட்டிற்கும் சிறந்தவனாக இருப்பான் என்பதையும் பெருமானார் உணர்த்தியுள்ளார்கள். ஏன் பெண்கள் தவறே செய்தாலும் எடுத்த எடுப்புக்கெல்லாம் கைநீட்டிவிடுவதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குவதில்லை முதலில் உபதேசம் செய்யவேண்டும், பிறகு படுக்கை அறையிலிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும், கடைசியாகவே அவளை அடிக்க வேண்டும் என்று உரிமை தருகின்றது . அதுவும் கூட கடுமையாக மிருகத்தனமாக அடித்தல் கூடாது அவளின் தலும்புகள் கூட படாதவாறு தான் அடிக்க வேண்டும் என்ற அளவுகோலை இஸ்லாம் விதிக்கின்றது.
இப்படி பெண்களுக்குண்டான  உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் காணக்கிடக்கிறது. பர்தா என்னும் கவசத்தை அணிவித்து அந்நிய ஆண்களின் கொடூர பார்வைக்கு பலிகேடாக்கப்படுவதை விட்டும் பாதுகாக்கிறது. ஆண் பெண் கலப்பதை முற்றிலுமாக தடை செய்து அவர்களது கற்புக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. ஒரு பத்தினிப் பெண்ணை அவதூறு கூறி கலங்கப்படுத்திவிட்டால் அவனுக்கு 80கசையடி கொடுத்து தண்டிக்கின்றது. வரைமுறை இல்லாமல் தலாக் என்னும் மணவிலக்கு இருந்த வந்த அந்தக்காலத்தில் மூன்று தான் என்று நிர்ணயம் செய்து பெண்கள் மீது  இழைக்கப்பட்டு வந்த பெருங்கொடுமைகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்தது. ஆண்களுக்கு தலாக் என்றால் பெண்களுக்கும் ஹுலுஃ
என்னும் உரிமையை வழங்கி ஒட்டு மொத்தமான பெண்ணுரிமயை பெண்களுக்கு கேடுவிளைவிக்காமல் அனாச்சாரம் கலக்காமல் அதே சமயத்தில் சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்படாமல் பெற்றுத் தந்ததும் தருவதும் இஸ்லாம் தான் என்பதை நடுநிலையோடு இஸ்லாத்தை பார்ப்பவர்களால் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியும்.

No comments: