அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 10 January 2013

மீலாது காலத்தின் கட்டாயம்!



ஸபர் மாதம் நிறைவடையவும் ரபீஉல் அவ்வல் பிறக்கவும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இந்த ஜும்ஆவினை நாம் சந்திக்கிறோம். ரபீஉல் அவ்வல் மாதத்தில் பெருமானாரின் வாழ்வியலை நினைவு கூறும் பொருட்டு மீலாது விழாக்கள் பரவலாக நடத்தப்படுவதும். இது நபிவழியோ இறைநெறியோ அல்ல என்று கூப்பாடு போடுவதும் காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒன்று. என்றைக்கு மீலாது என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதலே அதனை எதிர்ப்பவர்களும் சமூகத்தில் முளைத்துவிட்டனர். நல்லவர்கள் என்று இருந்தால் தீயவர்களும் இருப்பார்கள். இறைநேசர்கள் என்று இருந்தாலும் அங்கு ஷைத்தானின் நேசர்களும் இருப்பார்கள். அது போன்று தான் என்றைக்கு மீலாத் பிறந்ததோ அன்றைக்கே அதனின் எதிர்ப்பாளர்களும், சர்ச்சைக்குரிய விஷயமாக பாவிப்பவர்களும் பிறந்துவிட்டனர். மீலாத் அவசியமில்லை, அது ஓர் அனாச்சாரம், மார்க்கத்திற்கு முரணானது என்று மக்களுக்கு மத்தியில் விஷமக் கருத்துக்களை பரப்புவர்களுக்கு மத்தியில், மீலாத் தேவைதானா? மீலாத் ஏன்? எதற்காக? என்று நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மீலாதின் தோற்றமும் அதன் நோக்கமும்

 

மீலாத் என்றால் பிறப்பு, பிறந்தநாள் என்று பொருள். நபியினுடைய வாழ்வியலை நினைவுகூறும் முகமாக அவர்கள் பிறந்த மாதத்தன்று மீலாது விழா, சீரத்துந்நபி விழா என்று நடத்தப்பட்டு வருகின்றது. ஹிஜ்ரி 600ல் வாழ்ந்தملك المظفر  என்ற மன்னரால் இது ஏற்படுத்தப்பட்டது என்பவையெல்லாம் நாம் அறிந்த செய்திகளே. மீலாது விழாக்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கும், நடைபெற்று வருவதற்கும் மிக முக்கிய நோக்கம் ஒரு மனிதன் பெருமானாரின் வாழ்வியலை முழுமையாக அறிந்து அதனை ஒட்டி வாழ வேண்டும் என்பதே ஆகும். காரணம் நாம் மார்க்கம் என்று எதனை ஏற்று நடந்து வருகின்றோமோ அதனின் ஒட்டுமொத்த உருவே பெருமானார் தான். அவர்கள் எதை தீன் என்றார்களோ அது தான் தீன். அவர்கள் எதை வீண் என்றார்களோ அது தான் வீண். பெருமானார் இவ்வுலகை பிரிவதற்கு முன்னால் தன்னுடைய இறுதி ஹஜ்ஜிலே நான் உங்களுக்கு இந்த மார்க்கத்தை எத்திவைத்து விட்டேனா என்று கேட்டார்கள். உடனே சஹாபாக்கள் ஆம் என்றார்கள். மீண்டும் பெருமானார் உங்களில் இருப்பவர் இல்லாதவருக்கு எத்திவைக்கட்டும் என்று கூறினார்கள் என்ற செய்தியை நாம் அறிந்திரும்போம்.

عَنْ أَبِى بَكْرَةَ ، وَرَجُلٌ أَفْضَلُ فِى نَفْسِى مِنْ عَبْدِ الرَّحْمَنِ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِى بَكْرَةَ - رضى الله عنه - قَالَ خَطَبَنَا النَّبِىُّ - صلى الله عليه وسلم - يَوْمَ النَّحْرِ ، قَالَ « أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا » . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ . قَالَ « أَلَيْسَ يَوْمَ النَّحْرِ » . قُلْنَا بَلَى . قَالَ « أَىُّ شَهْرٍ هَذَا » . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ . فَقَالَ « أَلَيْسَ ذُو الْحَجَّةِ » . قُلْنَا بَلَى . قَالَ « أَىُّ بَلَدٍ هَذَا » . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ . قَالَ « أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الْحَرَامِ » . قُلْنَا بَلَى . قَالَ « فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا ، فِى شَهْرِكُمْ هَذَا ، فِى بَلَدِكُمْ هَذَا ، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ . أَلاَ هَلْ بَلَّغْتُ » . قَالُوا نَعَمْ . قَالَ « اللَّهُمَّ اشْهَدْ ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ ، فَلاَ تَرْجِعُوا بَعْدِى كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ

மார்க்கம் சம்பந்தமான ஞானங்களை பிறருக்கு எடுத்துக் கூறுவது என்பது ஒரு முஃமினின் தலையாய கடமை என்பது இதிலிருந்து நம்மால் விளங்கமுடிகின்றது. இன்றைக்கு மீலாது மேடைகளில் அரங்கேற்றப்படுகின்ற காட்சிகளும் இவை தான். அல்லாஹ், ரஸுலைப் பற்றி பேசுதல், பெருமானாரின் வாழ்வினை நினைவு கூறல், சமுதாயப் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? வருங்காலத் தலைமுறையின் தலையெழுத்தை நல்ல முறையில் நிர்ணயிக்க பெருமானார் வழங்கிய போதனைகள் என்ன? மிஞ்சினால் சதக்கா என்ற அடிப்படையில் உணவுகளும், குளிர் பானங்களும் பரிமாரப்படுதல் என்கின்ற இஸ்லாமிய அறநெறிகளே பேணப்படுகின்றன தவிற இஸ்லாத்திற்கு முரணான செயல்பாடுகளோ, சம்பவங்களோ அரங்கேற்றப்படுவது கிடையாது. ஒருவர் மீலாத் கூடாது என்று வாய்கிளிய பேசினால் அவன் அல்லாஹ்வையும் ரஸுலையும் பற்றி பேசக்கூடாது, சமுதாயத்தை சீர்திருத்தக்கூடாது என்று கூறுவதற்கு ஒப்பாகும். பரபரப்பான உலகில், இயந்திரங்களாக மனிதர்கள் நடமாடும் சூழ்நிலையில் கண்மனி நாயகத்தின் அற்புதமான வாழ்வினை தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது வாசித்திருப்பார்களா? என்பது கேள்விக்குறியே. இப்படியிருக்க மார்க்த்தை எவ்வாரு தூய வடிவிலே பின்பற்ற முடியும்?  தூயவடிவில் மார்க்கத்தை எடுத்து இயம்புவதற்கும், தூய முஃமின்களாக, மார்க்கசீலராக மாற்றுவதற்குமே மீலாது விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எத்தனையோ மனிதர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியதற்கான காரணத்தை தங்களுடைய வரலாற்று புத்தகத்தில் பதிக்கின்றபோது அவர்கள் எடுத்து வைக்கின்ற பிரதான காரணம் முகமது நபியின் மாசற்ற, கலப்படமற்ற வரலாற்றை நாங்கள் வாசித்தோம் எனவே இஸ்லாத்தை நேசித்தோம் என்கின்றனர். இன்றைக்கும் சாரை சாரையாக ஒரு பெருங்கொண்ட கூட்டம் இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பெருமானாரின் வாழ்வியலே. பெருமானாரின் வாழ்க்கைக்கு ஒரு காபிரையும் முஸ்லிமாக மாற்றக்கூடிய சக்தி இருக்குமென்றால் ஏன் ஒரு முஸ்லிமை உண்மை முஃமினாக மாற்றக்கூடிய சக்தி இருக்காது. பின்பு ஏன் மீலாது விழாக்கள் நடைபெறக்கூடாது?

பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸிலே இவ்வாரு குறிப்பிடுவார்கள்

عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ »
உங்களில் ஒருவர் தன்னுடைய குழந்தையை விட இன்னும் தன்னுடைய பெற்றோரை விட இன்னும் அனைத்து மக்களை காட்டிலும் என்னை பிரியப்படுகின்ற வரை அவர் முழுமையான முஃமினாக மாட்டார் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் முழுமையான முஃமினாக வேண்டும் என்றால் பெருமானாரின் மீது பிரியம் இருந்தால் மட்டுமே முடியும். அந்தப் பிரியம் பெருமானாரைப் பற்றி அறியாமல் வந்துவிடுமா? முற்கள் நிறைந்த பாதையில் அண்ணலார் கண்ட மகத்தான வெற்றிகள், கருப்பராக இருந்தாலும் கட்டித்தழுவி அரவனைத்த காட்சிகள், மரணப் படுக்கையிலும் உம்மதீ உம்மதீ என்று சமுதாயத்துக்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடிய செய்திகளெல்லாம் சமுதாயத்தின் சிந்தனைக்கு வராமல் பிரியம் வந்துவிடுமா? கண்டிப்பாக கிடையாது. வேதனையும், பல சோதனைகளும் நிறைந்த அண்ணலாரின் வாழ்வியலை அறிந்தால் மட்டுமே முடியும். அதற்கு மீலாதுந் நபி கொண்டாடப்பட்டால் மட்டுமே சாத்தியம்.

அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவான்
وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ 

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை நினைவு கூர்ந்து பாருங்கள்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளிலே மிக உன்னதமானதும், உயர்ந்ததும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள்தான். ஈருலகிலும் நமக்கு துணையாய் நிற்க்கப்போவதும், நம் கரத்தை பிடித்து சொர்கத்தில் நுழைய வைப்பதும் பெருமானார் என்ற ஒரு ஜீவனே என்கின்றபோது அவர்களை நினைவுகூறுதல் எந்த வகையிலும் மார்க்த்திற்கு முரணானதாக ஆகாது. அவர்களை நினைவு கூறுவதே மார்க்கமாக கணிக்கப்படும்.

விதண்டாவாதிகளின் வாதமும் தக்க பதில்களும்

மீலாது நிகழ்ச்சிகள் கூடாது என்று உளறுபவர்களில் பெரும்பாலோர் நம்மை பார்த்து கேட்டகக் கூடிய கேள்வி ஸஹாபாக்கள் மீலாது விழா நடத்தினார்களா? பெருமானாரின் மீது உயிரையே வைத்திருந்த அந்த தோழர்கள் செய்யாத ஒன்றை எப்படி நீங்கள் செய்கிறீர்கள்? இது பித்அத் அல்லவா அனாச்சாரம் தானே என்று மிக வக்கனையாக கேட்பார்கள். நடுநிலையோடு சீரிய சிந்தனையோடு நாம் யோசித்து பார்ப்போமேயானால் ஸஹாபாக்கள் ஏன் மீலாது விழாக்கள் நடத்தவில்லை என்ற எதார்த்த உண்மையை நம்மால் விளங்க முடியும். பெருமானார் உலகை விட்டும் மறைந்த நாளும் உலகில் அவதரித்த நாளும் ஒன்று. பெருமானாருடனே இருந்து நாயகத்தினுடைய ஒவ்வொரு அங்க அசைவுகளையும் அனுபவித்து வாழ்ந்து வந்த உத்தம நபியின் உண்மை தோழர்களுக்கு பெருமானார் மறைவிற்குப் பின்பு பிரிவின் வழியை அவர்களால் மறக்கவோ தாங்கவோ முடியவில்லை. கண்மனி நாயகத்தோடு வாழ்ந்த இனிமையான நாட்களை விட நாயகம் பிரிந்த துக்கமே அவர்களின் தொண்டையை அடைத்தது. எனவே ரபீஉல் அவ்வல் 12 என்பது பெருமானாரின் பிறந்த நாள் என்பதை விட அவர்கள் மறைந்த நாள் என்பதாகவே அவர்களின் நினைவில் நீடித்தது. கடுமையான கவலைகளுக்கு ஆட்பட்டிருந்த அந்த உள்ளம் எப்படி மீலாதுந்நபியை நினைத்துப் பார்க்கும்?

உமர் (ரலி) அவர்களின் நினைவிழந்த பேச்சு

 

பெருமானார் உலகை விட்டும் மறைந்த அந்த தருணத்திலே உமர்(ரலி) அவர்களின் சொல்லும் செயலும் கண்மனி நாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அளப்பெரும் பாசத்தையும், இறப்பின் மீது கொண்ட கவலையையும் வெளிப்படுத்துகிறது.  

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ " لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ قَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: إِنَّ رِجَالا مِنَ الْمُنَافِقِينَ يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ، وَإِنَّ رَسُولَ اللهِ وَاللهِ مَا مَاتَ، وَلَكِنَّهُ ذَهَبَ إِلَى رَبِّهِ كَمَا ذَهَبَ مُوسَى بْنُ عِمْرَانَ، فَقَدْ غَابَ عَنْ قَوْمِهِ أَرْبَعِينَ لَيْلَةً، ثُمَّ رَجَعَ إِلَيْهِمْ بَعْدَ أَنْ قِيلَ: مَاتَ، وَاللهِ لَيَرْجِعَنَّ رَسُولُ اللهِ كَمَا رَجَعَ مُوسَى، فَلَيُقَطِّعَنَّ أَيْدِي رِجَالٍ وَأَرْجُلَهُمْ، زَعَمُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَاتَ قَالَ: وَأَقْبَلَ أَبُو بَكْرٍ حَتَّى نَزَلَ عَلَى بَابِ الْمَسْجِدِ حِينَ بَلَغَهُ الْخَبَرُ، وَعُمَرُ يُكَلِّمُ النَّاسَ، فَلَمْ يَلْتَفِتْ إِلَى شَيْءٍ، حَتَّى دَخَلَ عَلَى رَسُولِ اللهِ فِي بَيْتِ عَائِشَةَ، وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةِ الْبَيْتِ مُسْجًّى، عَلَيْهِ بُرْدٌ حِبَرَةٍ، فَأَقْبَلَ حَتَّى كَشَفَ عَنْ وَجْهِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَكَبَّ عَلَيْهِ، فَقَبَّلَهُ، وَقَالَ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَمَّا الْمَوْتَةُ الَّتِي كَتَبَ اللهُ عَلَيْكَ فَقَدْ ذُقْتَهَا، ثُمَّ لَنْ تُصِيبَكَ بَعْدَهَا مَوْتَةٌ أَبَدًا قَالَ: ثُمَّ رَدَّ الْبُرْدَ عَلَى وَجْهِ رَسُولِ اللهِ، ثُمَّ خَرَجَ وَعُمَرُ يُكَلِّمُ النَّاسَ، فَقَالَ: عَلَى رِسْلِكَ يَا عُمَرُ، أَنْصِتْ قَالَ: فَأَبَى إِلا أَنْ يَتَكَلَّمَ، قَالَ: فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ لا يَصْمُتُ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَلَمَّا سَمِعَ النَّاسُ كَلامَهُ، أَقْبَلُوا عَلَيْهِ، وَتَرَكُوا عُمَرَ، فَحَمِدَ اللهَ عَزَّ وَجَلَّ، وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: أَيُّهَا النَّاسُ إِنَّهُ مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا، فِإَنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللهَ عَزَّ وَجَلَّ فإِنَّ اللهَ حَيٌّ لا يَمُوتُ، قَالَ: ثُمَّ تَلا هَذِهِ الآيَةَ : {وَمَا مُحَمَّدٌ إِلا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِينَ} قَالَ: فَوَاللهِ لَكَأَنَّ النَّاسَ لَمْ يَعْلَمُوا أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ حَتَّى تَلاهَا أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ، قَالَ: وَأَخَذَهَا النَّاسُ عَنْ أَبِي بَكْرٍ فَإِنَّمَا: هِيَ فِي أَفْوَاهِهِمْ، قَالَ: فَقَالَ أَبُو هُرَيْرَةَ: قَالَ عُمَرُ: وَاللهِ مَا هِيَ إِلا أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلاهَا، فَعَقِرْتُ حَتَّى وَقَعْتُ إِلَى الأَرْضِ، وَمَا تَحْمِلُنِي رِجْلايَ، وَعَرَفْتُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَاتَ "

சுருக்கமான மொழியாக்கம்

 

பெருமானார் வபாத்தான செய்தியை மக்கள் கூறிய போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெருமானார் வபாத்தாகிவிட்டார்கள் என்று சில முனாஃபிகீன்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெருமானார் இறக்கவில்லை தன்னுடைய ரப்பிடத்திலே சென்றுள்ளார்கள். எப்படி மூஸா (அலை) தன்னுடைய ரப்பை சந்திக்க 40நாட்கள் சென்றார்களோ அது போன்றுதான் பெருமானார் சென்றுள்ளார்கள். 40நாட்கள் கழித்து மீண்டும் மூஸா தன் கூட்டாதரிடம் வந்தது  போலவே நாயகமும் வருவார்கள். அப்போது பெருமானார் வபாத்தாகிவிட்டார்கள் என்று கூறியவர்களின் கைகளையும், கால்களையும் நாம் வெட்டுவோம் என்று கூறினார்கள்.
கடைசியில் அபூபக்கர் ரலி அவர்கள் வசனத்தை ஓதிய போது

وَمَا مُحَمَّدٌ إِلا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِينَ
உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:  பெருமானார் வபாதாகிவிட்டார்ள் என்ற செய்தியை நான் கேள்விபட்டபோது என்னால் நிற்க முடியவில்லை பூமியிலே விழுந்து விட்டேன் என்றார்கள்.

ஹழ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் நிலை:


நபிகளம் பெருமான் (ஸல்) அவர்கள் வபாத்தாகி 6மாத காலமே அன்னையார் உயிரோடு இருந்தார்கள். பெருமானாருடைய நினைவினால், பிரிவின் வருத்தத்தால் மிக குறுகிய காலத்திலே வபாத்தானார்கள்.
عن عائشة رضي الله عنها قالت : مكثت فاطمة بعد وفاة رسول الله صلى الله عليه و سلم ستة أشهر
பெருமானாரின் மீது கொண்ட பிரியத்தினால் நபிகளாரின் வபாத்துக்கு பின்பு ஒரு முறை கூட அன்னையார் அவர்கள் சிறிக்கவில்லை என்று அபு ஜஹ்பர் (ரலி) அவர்கள் கூறியது:

ما رايت فاطمة بعد رسول الله ضاحكة

இப்படி ஒவ்வொரு சஹாபியும் பெருமானார் மீது கொண்ட அளப்பெரும் காதலினால் அவர்களின் உள்ளத்திலே பிரிவின் வழியே காலம் முழுக்க தழும்புகளாக நீடித்திருந்தன எனவே தான் அவர்கள் மீலாது விழாக்களை கொண்டாடவில்லை.

பெருமானாரின் பிறப்பை கேள்விப்பட்டு தன் அடிமையை உரிமையிட்டதின் பலனாக அபு லஹப்பிற்கு ஒவ்வொரு திங்களும் வேதனை குறைக்கக்கப்படுதல்


رؤي أبو لهب بعد موته في النوم فقيل له ما حالك ؟ فقال : في النار إلا أنه يخفف عني كل ليلة اثنين وأمص من بين أصبعي ماء بقدر هذا وأشار لرأس أصبعه وإن ذلك باعتاقي لثويبة عند ما بشرتني بولادة النبي صلى الله عليه وسلّم وبإرضاعها له

ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களின் சொல்


இமாம் அவர்களின் சொல் வலிமையைப் பற்றி இப்படி குறிப்பிடுவார்கள் கல் உடைந்தாலும் இப்னு ஹஜரின் சொல் உடையாது. இத்தகைய உறுதிமிக்க இமாம் அவர்கள் மீலாதுந் நபியை பற்றி கூறிய செய்தி

سئل شيخ الإسلام حافظ العصر أبو الفضل أحمد بن حجر عن عمل المولد فأجاب بما نصه : أصل عمل المولد بدعة لم تنقل عن أحد من السلف الصالح من القرون الثلاثة ولكنها مع ذلك قد اشتملت على محاسن وضدها ، فمن تحرى في عملها المحاسن وتجنب ضدها كان بدعة حسنة وإلا فلا ، قال : وقد ظهر لي تخريجها على أصل ثابت وهو ما ثبت في الصحيحين من أن النبي صلى الله عليه وسلّم قدم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسألهم فقالوا هو يوم أغرق الله فيه فرعون ونجى موسى فنحن نصومه شكراً لله تعالى ، فيستفاد منه فعل الشكر لله على ما من به في يوم معين من إسداء نعمة أو دفع نقمة ، ويعاد ذلك في نظير ذلك اليوم من كل سنة ، والشكر لله يحصل بأنواع العبادة كالسجود والصيام والصدقة والتلاوة ، وأي نعمة أعظم من النعمة ببروز هذا النبي نبي الرحمة في ذلك اليوم ، وعلى هذا فينبغي أن يتحرى اليوم بعينه حتى يطابق قصة موسى في يوم عاشوراء ، ومن لم يلاحظ ذلك لا يبالي بعمل المولد في أي يوم من الشهر ، بل توسع قوم فنقلوه إلى يوم من السنة وفيه ما فيه ، فهذا ما يتعلق بأصل عمله . وأما ما يعمل فيه فينبغي أن يقتصر فيه على ما يفهم الشكر لله تعالى من نحو ما تقدم ذكره من التلاوة والإطعام والصدقة وإنشاد شيء من المدائح النبوية والزهدية المحركة للقلوب إلى فعل الخير والعمل للآخرة.

இமாம் ஸுயூத்தி (ரஹ்) அவர்களின் மீலாதுந் நபியைப் பற்றி கூறியது



 

ظهر لي تخريجه على أصل آخر وهو ما أخرجه البيهقي عن أنس أن النبي صلى الله عليه وسلّم عق عن نفسه بعد النبوة مع أنه قد ورد أن جده عبد المطلب عق عنه في سابع ولادته والعقيقة لا تعاد مرة ثانية ، فيجعل ذلك على أن الذي فعله النبي صلى الله عليه وسلّم إظهار للشكر على إيجاد الله إياه رحمة للعالمين وتشريع لأمته كما كان يصلي على نفسه لذلك فيستحب لنا أيضاً إظهار الشكر بمولده بالاجتماع وإطعام الطعام ونحو ذلك من وجوه القربات وإظهار المسرات.


இப்படி மீலாதுந் நபி நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏராளமான ஆதரங்கள் இமாம்களின் சொற்களின் வாயிலாகவும், நம் அறிவார்ந்த சிந்தனையினாலும் விளங்க முடிகின்றது. நபியினுடைய வரலாற்றை குறிப்பிட்ட நாளில் தான் கூற வேண்டும் என்பதல்ல எந்த நாளில் வேண்டுமானாலும் கூறலாம். இருந்தாலும் நபிகளார் இவ்வுலகிற்கு அவதரித்த அந்த நன்நாளில் குறிப்பிடுவது சிறந்தது. இன்றைய தினத்தில் மீலாதின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் உணராமல் எத்தனையோ வழிகெட்ட கூட்டங்களோடு தரிகெட்ட நபர்களும் உள்ளனர். இவர்களின் வஹ்ஹாபிச பிடியில் பல கிராமங்கள், பல பள்ளிவாசல்கள், பல மஹல்லாக்கள் சிக்கித்தவிக்கின்றன. இவற்றை மீண்டும் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமையும் ஆகும் குறிப்பாக அந்தந்த மஹல்லாக்களில் இருக்கின்ற இமாம்களின் தார்மீக பொருப்பாகும். மீலாத் பெருமானாரின் சரித்திரத்தை திரும்பிப்பார்க்க கிடைத்த அற்புத வாய்ப்பு , பெருமானாரின் வாழ்வியல் தத்துவங்களை எடுத்துரைக்கும் ஓர் தத்துவக் களஞ்சியம், எல்லாவற்றிர்கும் மேலாக மீலாத் காலத்தின்
 கட்டாயம்!




  

2 comments:

misbahul huthaa said...

அவசர உலகில் மீலாதின் அவசியத்தை நங்கூரம் அடித்தார் போன்று பதிவு செய்திருப்பது வரவேற்க்கத்தக்கது.

Sathak Maslahi said...

மீலாது விழாக்கள்
மீளாத விழாக்களாக இல்லாமல்
மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களாக இருக்கவேண்டும்
என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதற்கு நன்றி.