நம்முடைய இந்த உலக வாழ்வில் மார்க்கத்தை விட்டும் வழிதவறாமல் இருக்க இறை பாதுகாப்பு மிகவும் அவசியம். ஏனென்றால் ஷைத்தான் எல்லா வகைகளிலும் நம்மை வழி தவற வைக்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான்.
அல்லாஹ் தன் அருள்மறையில் :
إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (7.201)
قال عصام بن المصطلق : دخلت المدينة فرأيت الحسن بن علي عليهما السلام ، فأعجبني سمته وحسن روائه ; فأثار مني الحسد ما كان يجنه صدري لأبيه من البغض ; فقلت : أنت ابن أبي طالب ! قال نعم . فبالغت في شتمه وشتم أبيه ; فنظر إلي نظرة عاطف رءوف ، ثم قال : أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين فقرأ إلى قوله : فإذا هم مبصرون ثم قال لي : خفض عليك ، أستغفر الله لي ولك إنك لو استعنتنا أعناك ، ولو استرفدتنا أرفدناك ، ولو استرشدتنا أرشدناك . فتوسم في الندم على ما فرط مني فقال : لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين أمن أهل الشأم أنت ؟ قلت نعم . فقال : شنشنة أعرفها من أخزم ، حياك الله وبياك ، وعافاك ، وآداك ; انبسط إلينا في حوائجك وما يعرض لك ، تجدنا عند أفضل ظنك ، إن شاء الله
அல்லாஹ் தன் அருள்மறையின் மற்றொரு வசனத்தில் :
وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم
ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.)
எனவே, எப்போதெல்லாம் நம்மை ஷைத்தான் தூண்டுகின்றானோ, அந்த சமயம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை தேட வேண்டும் என்று கூறி ஷைத்தானுடைய தூண்டுதல் என்னும் நோய்க்கு, அல்லாஹுத்தஆலா நிவாரணத்தை தருகின்றான்.
பாதுகாப்பு என்றால் என்ன ?
அல்லாஹ்வும் அவனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் நமக்கு காட்டி தந்த அந்த பாதையை விட்டும் தவறி விடாமல், அதிலே நிலைத்திருக்க அனைத்திலும் சக்திபெற்ற அல்லாஹ் விடம் தஞ்சமடைவது என்பது தான், இறைவனிடம் பாதுகாப்பு தேடுவதாகும்.
أستجير بالله وحده من الشيطان أن يضرني في ديني أو يصدني عن حق يلزمني لربي. ففي الاستعاذة التجاء إلى الله تعالى القادر على دفع وسوسة الشيطان العاتي المتمرد
எல்லா விதமான குழப்பத்திற்கும், முசீபத்திற்கும் ஆரம்பமாக இருப்பது ஷைத்தான் தான். அதனை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும். அதே ஷைத்தான் தான் நம்முடைய தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த சொர்கத்தை விட்டும் வெளியேற்ற வழி செய்ததும் ஷைத்தான் தான் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
அல்லாஹ் தன அருள்மறையில் கூறும்பொழுது :
(يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ )
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)
ஆனால் ஷைத்தானோ, நம்மை வழிகெடுக்க அந்த இறைவனிடத்திலேயே சவால் விடுகின்றான்.
(لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين)
அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்" (என்றும்) "நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்" என்றும் கூறினான்.
وروى سفيان عن منصور عن الحكم بن عتيبة : من بين أيديهم من دنياهم . ومن خلفهم من آخرتهم . وعن أيمانهم يعني حسناتهم . وعن شمائلهم يعني سيئاتهم .
قال النحاس : وهذا قول حسن وشرحه : أن معنى ثم لآتينهم من بين أيديهم من دنياهم ، حتى يكذبوا بما فيها من الآيات وأخبار الأمم السالفة ومن خلفهم من آخرتهم حتى يكذبوا بها . وعن أيمانهم من حسناتهم وأمور دينهم
இதனால் தான், நம்மை பல வசனங்களின் மூலம் அல்லாஹு தஆலா நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், நிச்சயமாக ஷைத்தான் நம்முடைய தெளிவான எதிரி என்றும் நம்மை அல்லாஹு தாலா எச்சரிக்கிறான்.
يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான்.
எனவே, அந்த ஷைத்தானை விட்டும் அல்லாஹு தஆலா நம்மை பாதுகாத்து, இறை வழியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காட்டி தந்த வழியிலும் தவறாமல் பின்பற்றி வாழ நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன்.
No comments:
Post a Comment