அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 23 March 2017

பாருக் என் தோழனே




முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவர் கொலை செய்யப்படுகிறார். மற்றொரு முஸ்லிம், தான் கொலை செய்ததாக சரணடைகிறார். ஆம்! கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாருக் என்பவர் நாத்திகக் கருத்தை பேசியதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த அசம்பாவிதத்தை தமிழகத்தின் எந்த இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரிக்கவில்லை. உடனுக்குடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் 24 இருந்தபோதும் இந்த எந்த அமைப்பிலும் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்கிறார். இஸ்லாத்தின் அடிப்படை அறிவில்லாத ஒருவர் செய்த செயலுக்கு ஒட்டுமொத்த சமூகமும் எப்படி பொறுப்பாக முடியும்?

பெரியாரியவாதிகளும் இஸ்லாமியர்களும் ஒரு புள்ளியில் இணைந்து செயலாற்றும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. பகுத்தறிவாளர்கள் இது இஸ்லாமியர்கள் செய்தது என்று பார்க்காமல் ஒற்றை நபரின் குறுக்கு புத்தியால் ஏற்பட்டது என்று பார்க்க வேண்டும்.

மாற்றுக் கருத்துக்கு இஸ்லாத்தில் உரிமையுண்டு. நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை. விருப்பம் தான் இஸ்லாத்தில் உண்டு. இஸ்லாம் தான் கடந்து வந்த பாதை முழுக்க ஏராளமான பாருக்களை சந்தித்திருக்கிறது. அவர்களுக்குரிய உரிமையையும் கொடுத்திருக்கிறது.

இன்றைக்கு முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் விரோதிகளாக பார்க்கப்படுகிறார்கள் அதற்கு காரணம் மற்றவர்கள் என்று பழியை அடுத்தவர்கள் மீது போடாமல் நம்மிடம் இருக்கிற குறைகளை ஆராய நாம் முன்வருவதில்லை. இஸ்லாம் பிற மதத்தைச் சார்தவர்களை மதிக்க சொல்கிறது; ஆனால் நாம் அதை பெரும் குற்றமாக நினைக்கிறோம். சகோதர மதத்தை சார்தவர்களை போல் வாழ கூடாது என்று சொன்ன இஸ்லாம் அவர்களுடன் பிணக்கு இல்லாத ஒரு சுமூக வாழ்வை வாழ சொல்கிறது.

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற ஒரு சுமூக உடன்பாடு கட்டாயம் தேவை. காரணம், இந்த நாடு ஒருத்தருக்கோ அல்லது ஒரு இனத்துக்கோ சொந்தமானது கிடையாது. அனைத்து மதத்தவர்களுக்கு இந்த நாட்டில் வாழ இடம் உரிமையும் உண்டு.

இஸ்லாம் மற்ற மதத்தவர்களை மன்னித்தது

இஸ்லாமிய மார்க்கத்தை அழிப்பதற்கு முழுக்க முழுக்க காபிர்களுக்கு உறுதியாகவும், உறுதுணையாகவும் இருந்த அபூசுப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வந்த போது ஸஅத் (ரலி) அவர்கள் இன்றைக்கு பலி தீர்க்கப்படும் நாள் எனவே நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்பதை சூசகமாக கூறிய போது நபி (ஸல்) அவர்கள் ஸஅத் தெரியாமல் கூறிவிட்டார்கள் நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள் என்பதை நபி ஸல் கூறி அபூசுப்யான் (ரலி) அவர்களை மன்னிக்கச் செய்தார்கள் என்பதை காணும் போது இஸ்லாம் தன்னை எதிர்த்தவர்களையும் கூட அரவணைத்தது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا سَارَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَامَ الْفَتْحِ فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا ، خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ وَحَكِيمُ بْنُ حِزَامٍ وَبُدَيْلُ بْنُ وَرْقَاءَ يَلْتَمِسُونَ الْخَبَرَ عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ ، فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ ، فَقَالَ أَبُو سُفْيَانَ مَا هَذِهِ لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ . فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ نِيرَانُ بَنِى عَمْرٍو . فَقَالَ أَبُو سُفْيَانَ عَمْرٌو أَقَلُّ مِنْ ذَلِكَ . فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ ، فَأَتَوْا بِهِمْ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ ، فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ « احْبِسْ أَبَا سُفْيَانَ عِنْدَ حَطْمِ الْخَيْلِ حَتَّى يَنْظُرَ إِلَى الْمُسْلِمِينَ » . فَحَبَسَهُ الْعَبَّاسُ ، فَجَعَلَتِ الْقَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - تَمُرُّ كَتِيبَةً كَتِيبَةً عَلَى أَبِى سُفْيَانَ ، فَمَرَّتْ كَتِيبَةٌ قَالَ يَا عَبَّاسُ مَنْ هَذِهِ قَالَ هَذِهِ غِفَارُ . قَالَ مَا لِى وَلِغِفَارَ ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ ، قَالَ مِثْلَ ذَلِكَ ، ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُذَيْمٍ ، فَقَالَ مِثْلَ ذَلِكَ ، وَمَرَّتْ سُلَيْمُ ، فَقَالَ مِثْلَ ذَلِكَ ، حَتَّى أَقْبَلَتْ كَتِيبَةٌ لَمْ يَرَ مِثْلَهَا ، قَالَ مَنْ هَذِهِ قَالَ هَؤُلاَءِ الأَنْصَارُ عَلَيْهِمْ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَهُ الرَّايَةُ . فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَا أَبَا سُفْيَانَ الْيَوْمُ يَوْمُ الْمَلْحَمَةِ ، الْيَوْمَ تُسْتَحَلُّ الْكَعْبَةُ . فَقَالَ أَبُو سُفْيَانَ يَا عَبَّاسُ حَبَّذَا يَوْمُ الذِّمَارِ . ثُمَّ جَاءَتْ كَتِيبَةٌ ، وَهْىَ أَقَلُّ الْكَتَائِبِ ، فِيهِمْ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَأَصْحَابُهُ ، وَرَايَةُ النَّبِىِّ - صلى الله عليه وسلم - مَعَ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ، فَلَمَّا مَرَّ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - بِأَبِى سُفْيَانَ قَالَ أَلَمْ تَعْلَمْ مَا قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ قَالَ « مَا قَالَ » . قَالَ كَذَا وَكَذَا . فَقَالَ « كَذَبَ سَعْدٌ ، وَلَكِنْ هَذَا يَوْمٌ يُعَظِّمُ اللَّهُ فِيهِ الْكَعْبَةَ ، وَيَوْمٌ تُكْسَى فِيهِ الْكَعْبَةُ »


மற்றமதத்தவர்களின் சொத்துகளுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளித்த இஸ்லாம்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் பைத்துல் முகத்தஸ் வெற்றிக்கொள்ளப்பட்ட சமயம் அது. உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்திஸில் உள்ள ஆலயங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு வருகிறார்கள். அப்பொழுது அஸருடைய நேரம் வருகின்றது. அங்கிருந்த பாதிரிமார்கள் உமர் (ரலி) அவர்களை அங்கேயே தொழும்படி பனிக்கிறார்கள் அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் நாவிலிருந்து வெளியான வார்த்தையை இன்றைய ஜனநாயகம் யோசித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளது. நான் இப்பொழுது இங்கு தொழுது விட்டுபோய்விடுவேன் ஆனால் நாளைய இஸ்லாமிய மக்கள் இதையே காரணமாக காட்டி அந்த இடத்தை தங்களுடையது என்று கூறிவிடுவார்கள் எனவே நான் இங்கு தொழமாட்டேன் என்று கூறிய வார்த்தைகள் கடந்த காலங்களில் மாற்றுமதத்தவர்களிடம் இஸ்லாம் மேற்கொண்ட அழகான நடைமுறையை நம்மால் காணமுடிகின்றது.


அதே போன்று கலீபா அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலம். ஒரு நாள் அலி (ரலி) அவர்கள் ஒரு கிறுத்தவரை தான் நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த தன்னுடைய உருக்கச்சட்டையுடன் பார்க்கிறார்கள். உருக்கச்சட்டை தன்னுடையது என வாதாடுகிறார்கள், வாக்குவாதம் முற்றி அப்பொழுது நீதிபதியாக இருந்த ஷுரைஹிடம் வழக்கு செல்கிறது. கடைசியில் சரியான ஆதாரத்தை அலி (ரலி) அவர்களால் சமர்பிக்க முடியாமல்போக வழக்கு கிறுத்துவருக்கு சாதகமாக மாருகிறது. கலீபாவுடைய பொருளை தான் வைத்திருந்த போதும் சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய இஸ்லாமிய நீதத்தை பார்த்து அந்த கிறுத்துவரும் பிரம்மித்து இஸ்லாத்தை ஏற்றார்.

عن على بن أبى طالب بعد أن ولى إمارة المؤمنين : " وجد على درعه عند رجل نصرانى . فجاء به إلى شريح القاضى . وقال : إنها درعى ولم أبع ولم أهب فسأل شريح ذلك النصرانى : ما تقول فيما يقول أمير المؤمنين ؟  قال النصرانى : ما الدرع إلا درعى ، وما أمير المؤمنين عندى بكاذب. فالتفت شريح إلى على يسأله : يا أمير المؤمنين هل من بينة ؟ فضحك على وقال : أصاب شريح مالى بينة فقضى القاضى للنصرانى بالدرع .. ، فأخذها ومضى .. إلا أن الرجل لم يخط خطوات حتى عاد يقول : أما أنا فأشهد أن هذه أحكام أنبياء ، أمير المؤمنين يديننى إلى قاضيه فيقضى عليه !!! أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ، الدرع درعك يا أمير المؤمنين ، اتبعت الجيش وأنت منطلق من صفين ، فخرجت من بعيرك الأورق ، فقال على أما إذا أسلمت فهى لك .

பிக்ஹு சட்டநூல்களில் காணப்படுகின்ற விஷயம் மாற்றுமத்த்தவராக இருந்தாலும் அவர் இஸ்லாமிய நாட்டில் வரி செலுத்தி வாழ்பவராக இருந்தால் அவருக்கு நோய்வினையோ, அவரைப் பற்றி புறம் பேசுதலோ அரவே கூடாது.

وجوب  كف الأذى عن الذمي، وتحرم غيبته كالمسلم.

அல்லாஹ் குர்ஆனில் மற்றவர்களின் பொருளை அபகரித்தலை எச்சரித்து பேசுவது.
إنَّ اللهَ يأمركم أنْ تُؤدَّوا الأَمَانَاتِ إلى أَهْلِها


ஒரு தாழ்ந்த ஜாதியை சார்ந்தவரை கவர்னரின் மகன் அடித்துவிட்டார். இதற்கு நீதி தேடி கலீபா உமர் (ரலி) அவர்களிடத்தில் வந்த போது சாட்டையை கொடுத்து தன்னை அடித்தவரை திருப்பி அடிக்கக் கூறியது.

أنَّ ابن عمرو بن العاص رضي الله عنه فاتح مصر وواليها من قبل الخليفة عمر بن الخطّاب قد نازع شاباً من دهماء المصريين الأقباط المسيحيين في ميدان سباق ،فأقبلت فرس المصري فحسبها محمد بن عمرو فرسه وصاح : "فرسي ورب الكعبة" ،ثُمَّ اقتربت وعرفها صاحبها فغضب محمد بن عمرو ووثب على الرجل يضربه بالسوط ويقول له : خذها وأنا ابن الأكرمين ،وبلغ ذلك أباه فخشي أن يشكوه المصري فحبسه زمناً ..ومازال محبوساً حتى أفلت وقدم إلى الخليفة لإبلاغه شكواه...
قال أنس بن مالك راوي القصة : فوالله ما زاد عمر على أن قال له أجلس ...ومضت فترة إذا به في خلالها قد استقدم عمراً وابنه من مصر فقدما ومثلا في مجلس القصاص ،فنادى عمر رضي الله عنه :" أين المصري ؟ دونك الدرة فاضرب بها ابن الأكرمين"
فضربه حتى أثخنه ،ونحن نشتهي أن يضربه .فلم ينزع حتى أحببنا أن ينزع من كثرة ما ضربه ،وعمر رضي الله عنه يقول : اضرب ابن الأكرمين ! ..ثُمَّ قال : " أجلها على صلعة عمرو ! فوالله ما ضربك ابنه إلاَّ بفضل سلطانهقال عمرو رضي الله عنه فزعاً : يا أمير المؤمنين قد استوفيت واشتفيت ، وقال المصري معتذراً : يا أمير المؤمنين قد ضربت من ضربني ..فقال عمر رضي الله عنه :"أما والله لو ضربته ما حلنا بينك وبينه حتى يكون أنت الذي تدعه .والتفت إلى عمرو مغضباً قائلاً له تلك القولة الخالدة :" أيا عمرو ! متى استعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحراراً )


உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டவுடன் செய்த முதல் காரியம் சொத்துக்கள் சூரையாடப்பட்டு வீதியில் நிர்மூலமாக இருந்த
ஒரு மாற்று மதத்தவரின் சொத்தை மீண்டும் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது.

لما ولي أمير العدل عمر بن عبد العزيز أمر مناديه أن ينادي: ألا من كانت له مظلمة فليرفعها، فقام إليه رجل ذمي يشكو الأمير العباس بن الوليد بن عبد الملك في ضيعة له أقطعها الوليد لحفيده العباس، فحكم له الخليفة بالضيعة، فردها عليه.

மாற்றார்களின் பொருட்களை அபகரிப்பதை பற்றியும், அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதை பற்றியும் பெருமானாரின் எச்சரிக்கை.
اتقوا دعوة المظلوم وإن كان كافرًا

இப்படி இஸ்லாமிய வரலாற்றை வழிநெடுக பார்த்தால் மாற்றுமதத்தவர்களுக்கு நாம் துரோகம் செய்தோம் என்றோ, அவர்களை மிக கீழ்தரமாக மூன்றாம் தர குடிமக்களாக நாம் நடத்தினோம் என்றோ, அவர்களின் பொருட்களை அநியாயமாக சூரையாடி அகதிகளாக ஆக்கினோம் என்றோ வரலாறு இருக்காது. சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் பெரும்பான்மை அந்தஸ்து கொடுத்து ஓர் உயரிய இடத்தில் வைத்திருந்தோம் என்பதே மறைக்கமுடியாத உண்மையாக இருக்கும். இன்றைக்கு நீதிகள் சாகடிக்கப்பட்டு ஒரு உருவம் இல்லாமல் இருக்கும் இன்றைய நம் ஜனநாயகத்தின் வருங்காலம் நலமாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இஸ்லாம் கற்றுத்தரும் சகோதர நல்லினக்கத்தையும், நீதியையும் கடைபிடித்தாக வேண்டியக கட்டாயக் கடமை இருக்கிறது.


   


No comments: