وَتَعَاوَنُوا عَلَى البِرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُوا عَلَى
الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ العِقَابِ5:2நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை
அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும்
அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க
வேண்டாம். முஸ்லிம்களே!
அல்லாஹ் தன அடியார்களில் நன்மைகளின் திறவுகோலை வழங்கியிருக்கிறான். அவைகளை
நன்மையான காரியங்கள் செய்வதிலும் இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்கும் வணக்கங்களை
செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ் தன திருமறையில்
கூறுகிறான். يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ23:61. இ(த்தகைய)வர்கள் தாம்
நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில் முந்துபவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ் மனிதனை படைத்து பூமியில் தன் பிரதிநிதிகளாக
அமர்த்தி அவனுக்கு நன்மைகள் செய்யும்படியும், அடுத்தவர்களுக்கு உபகாரம்
செய்யும்படியும் ஏவி இருக்கிறான். இந்த இரண்டு காரியங்களை அல்லாஹ்வை நெருங்கும்
வழியாகவும் இரு உலக வெற்றிக்கு காரணமாகவும் அமைத்து வைத்திருக்கிறான்.
வல்ல அல்லாஹ் தனது
திருமறையில் கூறுகிறான்يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا
رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ22:77.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள்
இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். மார்க்க வல்லுனர்கள் இந்த வசனத்துக்கு
விளக்கம் சொல்லும் போது “ இந்த வசனம் எல்லா வகையான
நன்மையான காரியங்களை பற்றி சொல்லுகிறது. மனிதர்கள் மீது இறக்கம் காட்டுவது,
ஏழைகளின் மீது அன்பு செலுத்துவது அவர்களுக்கு உதவுவது, தர்மம் செய்வது, அன்போடு
பேசுவது மேலும் இது போன்றவைகள் ” எனவே நாம்
எல்லா வகையான நன்மையான காரியங்களை செய்ய முற்படவேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது
என்பது இறைவனை நெருங்கும் ஒரு வழி. மக்களுக்கு நன்மை செய்வது என்பதன் பொருள் “
அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களின் சிரமங்களை நீக்க முயற்சிப்பது, அவர்களின்
தேவைக்காக குரல் கொடுப்பது அல்லது அவர்களின் சிரமம் நீங்க ஏதேனும் ஒரு வழியில்
நாம் காரணமாக இருப்பது.” வல்ல அல்லாஹ் தனது
திருமறையில் கூறுகிறான். إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لاَ نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلاَ
شُكُوراً76:9.
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்)
நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). அதாவது
இந்த வசனத்தின் கருத்து: உங்களுக்கு உணவளிப்பத்தின் நோக்கம் அல்லாஹ் எங்களை
பொருந்திக்கொள்ள வேண்டும் அவன் எங்களுக்கு நல்ல கூலியை வழங்க வேண்டும். இந்த
செயலுக்காக எங்களுக்கு வேறு யாரிடமும் கூலியும் எந்த பலனும் வேண்டாம்.
அந்த நல்ல
அடியார்களின் உள்ளத்தை அறிந்த இறைவன் அவர்களை தன திருமறையில் புகழ்கிறான். இந்த
எண்ணத்துடன் அடியார்களுக்கு நன்மைகளை செய்பவர்களும் இந்த புகழுக்கு தகுது
பெறுவார்கள். அடியார்களே!
மக்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு மனித நேயம். இந்த குணம் எல்லா
மனிதர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
மக்களில்
சிறந்தவர்கள் மக்களுக்கு அதிகம் நன்மை செய்பவர்கள. மேலும் இது நபிமார்கள் மற்றும்
நல்லடியார்களின் குணம்.
நம்முடைய
நபியாகவும் முன்னோடியாகவும் வாழ்ந்த முஹம்மது நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்களின் வாழ்கையை பாருங்கள்.
ஹிரா
குகையில் ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் வந்து வஹி செய்தியை தந்த பிறகு நபி
சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவி ஹதீஜா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களிடம்
வருகிறார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் புதிய மனிதரை கண்ட பயத்தால்
“
எனக்கு பயமாக உள்ளது ” என்று சொல்லி தனக்கு ஹிரா
குகையில் நடந்ததை சொல்கிறார்கள். அதை
கேட்ட கதீஜா ரலியல்லாஹ் அன்ஹா அவர்கள் “ நிச்சயம்
ஒரு போதும் அல்லாஹ் உங்களை அவ்வாறு இழிவுப்படுத்தமாட்டான். ஏனெனில் நீங்கள்
உறவுகளுடன் சேர்ந்து வாழ்கிறீர்கள், ஒன்றும் இல்லாதவர்களுக்கு நீங்கள் பணத்தால்
உதவுகிறீர்கள், ஏழைகள், அனாதைகளுக்காக நீங்கள் செல்வு செய்கிறீர்கள், உண்மைக்காக
உழைக்கிறீர்கள்”. நபி
சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நுபுவ்வத்துக்கு முன்பும் மக்களின் நலன்
பனியில்தான் தான் வாழ்கையை அமைத்தார்கள்.
நபி மூஸா அலைஹி வ ஸலாம் அவர்களின் வாழ்கை குறிப்பை பற்றி இறைவன்
தனது திருமறையில் கூறுகிறான்.وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ
يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا
خَطْبُكُمَا قَالَتَا لاَ نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ
كَبِيرٌ* فَسَقَى لَهُمَا28:23.
இன்னும், அவர் மத்யன்
நாட்டுத் தண்ணீர்(த்
துறையின்) அருகே வந்தபோது,
அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள்
ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின்
விஷயம் என்ன?”என்று (அப்பெண்களிடம்) அவர்
கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்”என்று அவ்விருவரும்
கூறினார்கள். நபி மூஸா
அலைஹி வ ஸல்லம் அவர்கள் மத்யன் நாட்டிற்கு வந்தபோது ஒரு கினற்றின் அருகிள் ஷூஐபு
அலைஹி வ ஸலாம் அவர்களின் இரண்டு மகள் தண்ணீர் எடுக்க முடியாமல் இருந்தார்கள். அதை
பார்த்த நபி மூஸா அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களுக்கு உதவி செய்து கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்து கொடுத்தார்கள்.
வரலாற்று
நிகழ்வுகளை மிக சுருக்கமாக சொல்லும் அல்லாஹ் இந்த நிகழ்வுகளையும் சுட்டிகாட்டுகிறான்
எனில் அடுத்தவருக்கு உதவி செய்யும் பண்பு நபிமார்களின் என்பதை விளக்குகிறான். துல்கர்னைன்
அலைஹி ஸலாம் அவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் உதாரணமாக
எடுத்து சொல்கிறான்.
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்களின் குழப்பத்தை விட்டும் மக்களை காப்பாற்றுவதற்காக
இரு மலைகளுக்கு மத்தியில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்களை துல்கர்னைன் அலைஹி ஸலாம்
அவர்கள் அடைத்தார்கள். அப்போது மக்கள் துல்கர்னைன் அலைஹி ஸலாம் அவர்களிடம் சொன்னதை
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ
فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجاً عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا
وَبَيْنَهُمْ سَدًّا18:94.அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே!
நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து)
பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு
தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள்.அதற்கு துல்கர்னைன் அலைஹி
ஸலாம் அவர்கள் மக்களிடம் சொன்னார்கள் مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي
بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكمْ وَبَيْنَهُمْ رَدْماً18:95.அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே
(போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும்
அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" மக்களுக்கு
செய்யும் உதவிகளே மகத்தான நன்மையான காரியங்கள் என்பதே மேற்கண்ட வசனங்களின்
கருத்தாகும். இந்த
குணங்கள் சஹாபாகளிடமும் அதிகம் காணப்பட்டது. சஹாபாக்கள் அடுத்தவர்களுக்கு நன்மை
நாடுவதிலும் அதற்காக தன பங்களிப்பை வழங்குவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக
இருந்தார்கள்.
அவர்களில்
குறிப்பாக அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவுதலிலும்
மக்களுக்கு நன்மை தரும் செயற்களில் எடுபதுவதிலும் அதிகம் தீவிரம் காட்டினார்கள்.
அபு ஹுரைரா
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் சஹாபாகளிடம் “ உங்களில் யார் இன்று
நோன்பாளியாக இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள். அதற்கு
அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “ நான் ”
என்று பதில் சொன்னார்கள். பிறகு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ உங்களில்
யார் இன்று ஒரு ஜனாஜாவை பின்தொடர்ந்து சென்றது ( அடக்கம் செய்வதற்காக )”
என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் என்று பதில்
சொன்னார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீண்டும் கேட்டார்கள் “
உங்களில் யார் இன்று ஏழைக்கு உணவு வழங்கியது ”.
அதற்கும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “
நான்” என பதில் அளித்தார்கள். அடுத்து நபி சல்லால்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ உங்களில் யார் இன்று
நோயாளியை நலம் விசாரித்தது ” என்று கேட்டார்கள்.
அதற்கும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்”
என்று பதில் சொன்னார்கள்.
இதை கேட்ட
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “
இந்த (மேல்சொல்லப்பட்ட நான்கு )
விஷயங்கள் ஒரு மனிதனிடம் ஒன்றாக காணப்பட்டால் அவன் சொர்க்கம் புகுவான். ” முஸ்லிம்களே!
நம்முடைய நேரிய மார்க்கம் நமக்கு நன்மைகளின் பல வாசல்களை திறந்து விட்டிருக்கிறது.
அவைகளை செய்யும் பல்வேறுப்பட்ட முறைகளையும் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது.
ஒரு முறை
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “
ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமானதாக இருக்கிறது”.
அதை கேட்ட சஹாபாக்கள் கேட்டார்கள் “ யாரசூலல்லாஹ்!. தர்மம்
செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் ?”. அதற்கு நபி சல்லால்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ தான் உழைக்கும் பணத்தில்
தானும் பயன் பெற்று அடுத்தவருக்கும் அதை தானம் செய்யவேண்டும் ”
என்று கூறினார்கள்.
இதை கேட்ட
சஹாபாக்கள் சொன்னார்கள் “ யாரசூலல்லாஹ்! ஒருவனுக்கு
அதற்கும் சக்தி இல்லாமல் போனால் அவன் என்ன செய்ய வேண்டும்?”.
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்”
அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனால் அவன் தேவை உடையவர்களுக்கு உதவிகள்
செய்யவேண்டும்”. மீண்டும் சஹாபாக்கள் கேட்கிறார்கள் “
யாரசூலல்லாஹ் ஒருவனுக்கு இதையும் செய்ய முடியாமல் போனால் அவன் நிலை என்ன?”
அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “
ஒருவன் நன்மையான காரியங்கள் செய்து அவன் அடுத்தவர்களுக்கு தீங்கு தராமல் தன்னை
காத்து கொள்ளட்டும். அதுவே அவனுக்கு தர்மமாகும்.” எனவே
இஸ்லாம் நன்மையான காரியங்களை மட்டுமல்ல அதை செய்யும் பல்வேறுப்பட்ட வழிகளையும்
சொல்லிக்காடுகிறது. அல்லாஹ் தனது திருமறையில்
கூறுகிறான். وَمَا أَمْوَالُكُمْ وَلاَ أَوْلادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا
زُلْفَى إِلاَّ مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُوْلَئِكَ لَهُمْ جَزَاءُ
الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الغُرُفَاتِ آمِنُونَ34:37.(நீங்கள் எண்ணுகிறவாறு) உங்களுடைய
பொருள்களும் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவைகளல்ல. ஆயினும்,
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே
அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) இத்தகையவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின்
காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. அன்றி, அவர்கள்
(சுவனபதியிலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள். எனவே வல்ல
அல்லாஹ் நம் அனைவரையும் அதிகமான நன்மைகளை செய்யும் நல்லடியார்களாகவும் குறிப்பாக
மக்களுக்கு அதிகம் நன்மை செய்யும் சிறப்பு மிகுந்த கூடத்தில் உள்ளவர்களாக இருக்க
அருள் புரிய வேண்டும்
No comments:
Post a Comment