அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 27 February 2014

மறைப்பதே மகான்களின் குணம்




இஸ்லாமிய மார்க்கம் நமக்கு அனைத்து நற்குணங்களையும் சொல்லித்தருகிறது.குறிப்பாக அடுத்தவர்களுடன் பழகுகிற ஒழுக்கங்களை பற்றி தெளிவாக பேசுகிறது.

இன்றைக்கு நண்பர்களுக்கு மத்தியிலும் சக மாணவர்களுக்கு மத்தியில் விளையாடிற்காக என்கின்ற பெயரில் அடுத்தவர்களின் குறைகளை அல்லது குற்றங்களை சொல்லி விமர்சிப்பதும் கேலி செய்வதும் பழக்கமாகி விட்டது அல்லது இதை வேறு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் fashion என்று கூட சொல்லலாம். இதனால் அடுத்தவர்களின் மனம் புண்படும் என்று இதை எடுத்து கொள்ளாமல் இதையெல்லாம் செய்வது ஜாலிக்காக என எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் வியாக்கியானம் தருவது சீர்கெட்ட வழியை நோக்கி இந்த சமுதாயம் செல்கிறது என்பதை குறிக்கிறது.
அடுத்தவர்களின் குறைகளை குற்றங்களை வெளிக்காட்ட அல்லாஹ்வே விரும்புவதில்லை. அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று ستار குறைகளை குற்றங்களை மறைப்பவன் என்ற பொருள். ஆனால் அடுத்தவர்களின் குறைகளை வெளிக்கொண்டுவருவதில் சுவாரசியம் என்று இன்றைய சமூக சூழல் அமைந்திருக்கிறது. கிசு கிசு கள் நிறைந்த பற்றிகைகளும் நாளிதழ்களும் தான் அதிகம் விற்பனையாகின்றது. அடுத்தவர்களை அதிகம் விமர்சனம் செய்யும் எழுத்துக்களம் பேச்சுக்களும் தான் சமூகத்தில் அதிகம். ஒருவர் தவறே செய்திருந்தாலும் அதையும் மறைப்பது அல்லாஹ்வின் பண்பு. ஆனால் தவறு செய்யாமல் செய்வதற்குரிய சாத்திய கூறுகளை வைத்து தவறை செய்ததை போல சித்தரிப்பது ஷைத்தானின் பண்பு. இத்தகைய பன்று நம்மை சுற்றியும் நிறையவே நடக்கிறது. ஒன்றும் இல்லாத செய்தியையும் இருப்பது போல சித்தரித்து ஒரு கட்டத்தில் அந்த செய்தி உண்மையாக நடந்ததைப்போல நியாப்படிதும் நாட்டு நடப்பு நிறைய உண்டு.
ஆனால் இன்று நாம் குறிப்பிடுவது ஒருவன் தவறே செய்திருந்தாலும் அந்த தவறின் மூலம் அடுத்தவருக்கு பாதிப்பு இல்லை என்றால் அல்லது அத்தவறு அவன் தனிப்பட்ட விஷயம் சம்மந்தமாக இருந்தால் அந்த தவறை பற்றி நமக்கு தெரிந்தாலும் அதை மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது.
" كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا المُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ المُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، فَيَقُولَ: يَا فُلاَنُ، عَمِلْتُ البَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ "
நபி சல்லால்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள். என் உம்மத்தில் உள்ள அனைவரும் மன்னிக்கப்படுபவர்கள். ஆனால் (பாவங்களை ) வெளிப்படுத்துபவர்களை தவிர. நிச்சயம் (பாவங்களை ) வெளிப்படுத்துவது என்பது ஒரு அடியான் இரவில் ஒரு செயலை (தவறை) செய்கிறான். பிறகு அல்லாஹ் அவன் தவறை மறைத்த நிலையில் அவன் காலையில் எழுகிறான். ஆனால் அவனோ (காலையில் அடுத்தவர்களிடம் ) நான் நேற்று இரவு இன்ன இன்ன (தவறுகளை ) செய்தேன் என சொல்லி அல்லாஹ் மறைத்த குற்றத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.
[صحيح البخاري 8/ 20]
மேற் கண்ட நபி மொழி கருத்தில் ஒரு செய்தி விளங்குகிறது ஒரு அடியான் தான் செய்த தவறை அல்லாஹ் மறைக்கும் பொது அந்த தவறை அவனே வெளிப்படுத்தினாலும் அல்லாஹ்வின் பொருத்தமின்மை அவனுக்கு கிடைக்கிறது.
இது இறைப்பந்பிர்க்கு மாற்றம். காரணம் ஒரு அடியானின் குற்றத்தை அல்லாஹ் மறைக்கும் பொது அவனே அதை வெளிப்படுத்துவது “ நான் அல்லாஹ்விற்கு பயப்பட மாட்டேன் நான் விரும்பியதை செய்வேன் அல்லாவிற்கு மாருசெய்வேன்” என்று சொல்வதை போன்று இருக்கிறது.
ஒருவரின் குற்றத்தை மற்றவர்களோ அல்லது அவரோ வெளிப்படுத்தும்போது அந்த குற்றம் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இதே நிலை தொடருமானால் அந்த குற்றம் சமூக அரங்கில் குற்றம் இல்லை என்ற நிலையில் நியாயப்படுத்தப்படும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு மது குடிப்பது சமூக அரங்கில் ஒரு பழக்கமாகவும் சகஜமாகவும் ஆகிவிட்டது. யாரும் செய்யாத தவறையா நான் செய்து விட்டேன் என்று வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது.
லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார்கள் பெரும் அசிங்கத்தை ஒரு ஊரே சரியென்று சொல்லுவது போல பகிரங்கமாக செய்து கொண்டிருந்தார்கள். ஓரினச்சேர்கை என்னும் குற்றம் அவர்கள் பார்வையில் தவறாக தெரியாமல் இருந்ததோடு அதை பகிரங்கமாக செய்யும் அளவிற்கு துணிவும் வந்ததற்கு காரணம் இது.
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَسْتُرُ اللهُ عَلَى عَبْدٍ فِي الدُّنْيَا، إِلَّا سَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ»
நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சொன்னார்கள்.
இவ்வுலகத்தில் ஒரு அடியானின் (குற்றங்களை ) மறைக்கும் இறைவன் மறுமையிலும்(குற்றங்களை ) அவரை மறைப்பான்.
அனைத்தும் அறிந்த இறைவனின் பண்பு அதுதவர்களை அவர்களின் குறைகளை வெளிக்காட்டி கேவலப்படுத்துவது அல்ல. அனால் ஒரு சில ரகசியங்கள் நமக்கு தெரிந்து விட்டால் அதை வெளிப்படுதுவர்க்குள் நமக்கு தூக்கம் வருவதில்லை. யாரிடமும் சொல்லாதே என்று சொல்ல எல்லாரிடம் நாம் சொல்லி விடுகிறோம். அதற்கு பல சமூக வலைதளங்களும் காரணம்.
மறுமை நாளின் அதிபதி அல்லாஹ். அவனின் அணுகுமுறைகளை பாருங்கள்.
" إِنَّ اللَّهَ يُدْنِي المُؤْمِنَ، فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ، فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا، أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: نَعَمْ أَيْ رَبِّ، حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ، وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ، قَالَ: سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ اليَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ،
[صحيح البخاري 3/ 128]
மறுமையில் அல்லாஹ் ஒரு அடியானை தன் பக்கம் நெருக்கி அவன் மீது மறைப்பை ஏற்படுத்தி “ இன்ன இன்ன பாவங்கள் உனக்கு தெரியுமா ” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான் ஆம் என் இறைவா என்று சொல்லுவான். இவ்வாறு அவனுக்கு அனைத்து குற்றங்களை எடுத்து சொல்லி அவனும் அந்த குற்றங்களை ஒப்புக்கொண்டு இனி நான் தப்பிக்க முடியாது என்று நினைப்பான். அப்போது இறைவன் இந்த குற்றங்களை நான் உலகில் மறைத்தேன் இன்று உன் பாவங்களை நான் மன்னிக்கிறேன் என்று சொல்லி நன்மை புத்தகத்தை அவன் கையில் அல்லாஹ் கொடுப்பான்.

இவ்வாறு மறுமை நாள் அந்த நாளிற்கு தான் அதிபதி என்று சொல்லும் இறைவனே அவன் அடியார்கள் செய்த குறைகள் கன்னியாக விசாரிக்க விரும்புகிறான். அவைகள் அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது என நினைக்கிறான்.

அனைத்து மனிதர்களுக்கு தவறு செய்யும் இயல்பு உடையவர்கள் தான். தவறுகளுக்குரிய நேரமும் சூழலும் வருகிற பொது அவர்கள் தவறு செய்கிறார்கள். எனவே ஒரு மனிதனின் தனிப்பட்ட அல்லது மக்களுக்கு இடையூறு தராத தவறுகளை மக்களுக்கு சுட்டிகாட்டுவது தவறு. அவருக்கு வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் உபதேசங்கள் செய்யலாமே தவிர தவறுகளை வெளியில் சொல்லி அவரை அசிங்கப்படுத்துவது என்றும் நல்ல செயலாக இருக்க முடியாது.
நபி சல்லால்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்
«مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
[سنن ابن ماجه 2/ 850]
யார் ஒரு முஸ்லிமின் (குறைகளை ) மறைக்கிராரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமையில் இம்மையிலும் மறைக்கிறான்.

அடுத்தவர்களின் குறைகள் அல்லது அசிங்கமான குணங்கள் மக்களுக்கு மத்தியில் பரப்புவதை அசிங்கமான குணம் என்பது மட்டும் இல்லமால் அல்லாஹ்வின் கோவத்தை ஏற்படுத்தும்.
:( إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لاَ تَعْلَمُونَ
முஹ்மீன்கள் விஷயத்தில் அசிங்கமான விஷயங்கள் பரவ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நோவினை தரும் வேதனை உண்டு என்று கருத்தை சொல்லும் வசனம் நமக்கி இதை புரிய வைக்கும்
நபி சல்லால்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  மின்பர் படியில் ஏறி உரக்க சப்தத்தில் சொன்னார்கள்.
«يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيمَانُ إِلَى قَلْبِهِ، لَا تُؤْذُوا المُسْلِمِينَ وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ
உள்ளத்தில் ஈமான் நுழையாமல் நாவால் இஸ்லாத்தை ஏற்ற மக்களே முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள் , அவர்களை குறை சொல்லாதீர்கள், அவர்களின் மறைவான விஷயங்களை துருவி ஆராயாதீர்கள். யார் ஒருவர் தன சகோதர முஸ்லிம் குறைகளை துருவி ஆராய்கிரார்கலாய் அவரின் குறைகளை அல்லாஹ் ஆராய்கிறான். யாரின் குறைகளை அல்லாஹ் ஆராய்கிறானோ அவர் வீட்டின் மத்தியில் ( மக்களை விட்டும் மறைந்து )  இருந்தாலும் அல்லாஹ் அவரை கேவலப்படுத்துவான்.

மாலிக் ரஹ்மாதுல்லாஹி அவர்கள் சொல்கிறார்கள். மதீனாவில் சில மக்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் எந்த குறையையும் காண முடியாது. ஆனால் அவர்கள் அடுத்தவர்களின் குறைகளை ஆராய்வார்கள். அதானால் மக்கள் இவர்களை பற்றி குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். மதீனாவில் வேறு சில மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சில குறைகள் இருக்கும். ஆனால் அவர்கள் அடுத்தவர்களின் குறைகளை ஆராயமாடார்கள். அதனால் மக்கள் அவர்களின் குறைகளை பற்றி பேசுவதில்லை.
இது ஒரு ஆழமான கருத்தை சொல்லும் ஒரு செய்தி. குறை இல்லாதவர்கள் கூட அடுத்தவர்களின் குறையை பேச முற்படும்போது இவர்களை பற்றி குறை பேச ஒரு கூடம் வருகிறது. ஆனால் குறை உள்ளவர்கள் கூட அடுத்தவர்களின் குறையை பேசாமல் இருந்தால் இவர்களின் குறைகளும் மறைக்கப்படுகிறது. எனவே அடுத்தவர்களின் குற்ற குறைகளை பற்றி துருவி அலசி ஆராயாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.

No comments: