அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 13 February 2014

ஆன்மீகம்

ஆன்மீகம் என்ற வார்த்தை இன்று காலப்போக்கில் மழுங்கி கொண்டே வருகிறது. ஆன்மீகம் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு தவறான துறையை குறிக்கும் அபத்தமான வார்த்தையாக கருதப்படுகிறது.

சில நபர்கள் ஆன்மீகம் என்கின்ற பெயரில் அதை கலந்கப்படிதியாதே இதற்க்கு காரணம் என்று சொன்னாலும் மக்கள் ஆன்மீகத்தை பற்றி தெளிவான கண்ணோட்டம் இல்லாததால் இது போன்று அர்த்தமற்ற ஆன்மீக வாதிகளை தெர்தேடுப்பதர்க்கு காரணம்.
ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மீகம் அவ்வாறு அல்ல. இஸ்லாத்தில் ஆன்மீகம் உண்டு. ஆனால் மக்கள் நினைத்திருப்பது போல் உள்ள ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம் என்று கேள்வி பட்டாலே காகி ஆடைகளும் கிழிந்த ஆடைகளும் காடுகளின் வாழ்கையும் தான் சிலருக்கு நினைவில் இருக்கும். அவ்வாறு இஸ்லாம் வலியுறுத்தவில்லை.
இஸ்லாத்தின் உண்மையான அடிப்படையான ஆன்மீகம் உள்ள பரிசுத்தம். ஆன்மீகத்தில் பல அம்சங்கள் சொல்லப்பட்டாலும் அவை அனைத்திற்கும் அடிப்படையும் ஆரம்பமாகவும் இருப்பது இந்த உள்ள பரிசுத்தம். உள்ள பரிசுத்தம் செய்யாதவனுக்கு ஆன்மீகவாதி என்று பட்டம் தரலாம் ஆனால் அவன் உண்மையான ஆன்மீக வாதியாக முடியாது.
உள்ள பரிசுத்தம் இது நபிமார்களின் பனி. உலகி வந்த அல்லாவின் தூதர்கள் செய்த பனி.
குர்ஆனில் அல்லாஹ் மக்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டதை சொல்லி அவர்களின் அனுப்பட்ட நோக்கம் மற்றும் பணியை குறிப்பிடும் பொது அல்லாஹ் நான்கு செய்திகளை சொல்லிக்காட்டுவான்.

{يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ } [آل عمران: 164]
1.  மக்களுக்கு அல்லாஹ்வின் ஆயத்துகளை ஓதி காட்டுவார்கள்  2. அவர்களை பரிசுட்டப்படுதுவார்கள் 3 அவர்களுக்கு வேதத்தை சொல்லி கொடுப்பார்கள்.4 அவர்களுக்கு நுட்பமான நியானங்களை சொல்லி தருவார்கள்.

இந்த நான்கு பணிகளை பற்றி குர்ஆனில் மூன்று இடங்களில் அல்லாஹ் சொல்லி காட்டுகிறான். ஆகா வேடங்களை ஓதி சொல்லிகொடுப்பதும் அதற்கு விளக்கம் தருவது மட்டும் நபிமார்களின் பனி அல்ல அதையும் தாண்டி உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் நல்ல வழிகளை அவர்களுக்கு காட்டுவது அவர்களின் பனி.

உள்ளப்பரிசுத்தம் இல்லாமல் போனால் அணைத்து இபாதத்துகள் சரி இல்லாமல் போய்விடும். உள்ளத்தின் பரிசுத்தைதான் அல்லாஹ் கவனிக்கிறான்.

நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ "

[صحيح البخاري 1/ 20]
உதில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுக்க சீர்பெறும் . அது கேட்டுவிட்டால் உடல் முழுக்க கெட்டுப்போய்விடும். அறிந்துகொள்ளுங்கள் அது தான் உள்ளம்.

உள்ளதினால் வரும் நோய்களின் எண்ணிக்கையை பற்றி இன்றைய காலத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவை இல்லாத சிந்தனைகளை உள்ளத்தில் கொண்டு வந்து நடக்காத சில கற்பனைகளை நினைத்து மன ரீதியாக பாதிக்கப்பட்டு போனவர்கள் எத்துனை பேர்.

இன்றைக்கு மனநோய்களை சரி செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம். மனநோயாளிகளுக்கு கவுன்செல்லிங் கொடுக்கும் மனோதத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை அதிகம். இதை தாண்டி மன அமைதி வேண்டும் என்று ஆன்மீகவாதிகளிடம் செல்ல நினைப்போர் எத்துனை பேர். எனவே உள்ளம் சரி செய்யப்பட்டால் வாழ்கையில அனைத்து காரியங்களும் சரியாகிவிடும். ஆனால் உள்ளம் கவலைக்குல்லாகிவிட்டால் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் மரணத்தை நோக்கி செல்கிற அபாயம் உலகில் உண்டாகுவதை நாம் பார்க்கிறோம். தற்கொலை என்று தலைப்பில் இது போன்று வரும் நிகழ்சிகள் இடைவெளி இல்லாமல் பார்க்கும் அளவிற்கு நிறைய உண்டு.

எனவே உள்ள பரிசுத்தம் நமக்கு தேவை.
அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டு ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு முக்கியத்துவம் அதிகம். ஆனால் ஒரு செய்தியை அல்லா குர்ஆனில் ஏழு சத்தியங்களை குறிப்பிட்டு அதுவும் மிகப்பெரிய விஷயங்களின் மீது சத்தியமிட்டு சொல்கிறான்.
{
وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا (5) وَالْأَرْضِ وَمَا طَحَاهَا (6) وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10) } [الشمس: 1 - 11]

சூரியன் சந்திரன் பகல் இரவு வானம் பூமி ஆன்மா ஆகிய ஏழு விஷயங்களின் மீது அல்லாஹ் சத்தியமிட்டு ஒரு செய்தியை சொல்கிறான். அந்த ஆன்மாக்களை யார் பரிசுத்த படுத்துகிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றார்கள். யார் அதை பால்படுதிவிடுகிரார்களோ அவர்கள் நஷ்டவாளிகள்.

எனவே உள்ள பரிசுத்தம் ஆன்மீகம்.

ما التصوف قال وجدان الفرح فى الفؤاد عند إتيان الترح

ஆன்மீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இப்படியும் பதில் உண்டு. சிரமங்கள் வருகிற போதும் உள்ளத்தில் சந்தோசம் வருவது ஆன்மீகம். இது ஆன்மீக வாதிகளின் அடையாளம்.
அல்லாஹ் ஏதாவது தந்தாள் அவனுக்கு நன்றி சொல்லுவதும் அவன் எதையும் தர வில்லை என்றால் பொறுமையாக இருப்பது. இது சாதாரண மக்களின் ஈமான்.
ஆனால் ஆன்மீக வாதிகள் அல்லாஹ் கொடுத்தாலும் நன்றி சொல்லுவார்கள் கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு கொடுத்தால் எதாவது பாதிப்பு வரும் என்று கருதிதான் அல்லாஹ் இதை கொடுக்க வில்லை என்று சொல்லி அதற்கும் நன்றி சொல்லுவார்கள். கொடுத்ததற்கும் நன்றி கொடுக்காமல் இருந்ததற்கும் நன்றி . இது ஆன்மீக வாதிகளின் அடையாளம்.
எதையும் நல்ல கண்கொண்டு பார்க்கிற தன்மை. நான் ஆங்கிலத்தில் positive mind என்று இதை நாம் குறிப்பிடுவோம்.

எனவே உள்ள பரிசுத்தம் ஆன்மீகத்தின் அடையாளம். எதையும் நல்ல கண் கொண்டு பார்ப்பதும் அவர்களின் மற்றொரு அடையாளம்

فى يوم من الأيام مر يهودي معه كلب على إبراهيم بن ادهم رحمه الله فقال له: أيهما أطهر لحيتك أم ذيل كلبي ؟ فرد عليه بهدوء: أن كانت لحيتي في الجنة فهي أطهر من ذيل كلبك ، وإن كانت في النار فذيل كلبك اطهر منها. فما ملك اليهودي نفسه ألا أن قال :اشهد أن لا اله ألا الله و أن محمداً رسول الله ما هذا إلا خلق الأنبياء.

ஒரு நாள் ஒரு யூதன் இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மாதுள்ளஹி அலைஹி அவர்களிடம் வந்து அவனிடம் உள்ள நாயை சுட்டி காட்டி இந்த நாயின் வாள் சுத்தமானதா அல்லது உங்களின் தாடி சுத்தமானத என கேட்டான். அதற்கு அவர்கள் இந்த தாடி சொர்கத்திற்கு தகுதியானதாக இருந்தால் உன் நாயின் வாலை விட சுத்தமானது . இந்த தாடி நரகத்திற்கு தகுதியானதாக இருந்தால் உன் நாயின் வால் என் தாடியை விட சுத்தமானது என்று சொன்னார்கள் . இதை கேட்ட யூதன் கலிமாவை சொல்லி இஸ்லாத்தை ஏற்றான் .

இப்படி ஆன்மீகவாதிகளின் குணங்கள் அவற்றின் மேன்மையே மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கும்
எனவே உண்மையான ஆன்மீகத்தை தேடுவோம் 

No comments: