அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 19 December 2013

மீலாது விழாக்கள் காலத்தின் கட்டாயம்



மீலாது விழாக்கள் ஏன்? எதற்கு?  என்ற கேள்விக் கனையோடு எனது வார்த்தையை தொடங்குகிறேன். நபிகள் நாயகம் பிறந்த மாதத்தில் அவர்களது வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக ஆங்காங்கே மீலாது விழாக்கள் நடத்தப்படுவதும், அதனை எதிர்த்து நோட்டீஸ் பிரசுரிப்பதும் வழக்கமாகியுள்ளது. இதன் காரணமாக ஒரு சில ஊர்களில் இது போன்ற விழாக்கள் தடைசெய்யப்பட்டாலும், ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது சீரத்துந் நபி விழாக்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தபோதும் இவ்வளர்ச்சி போதாது. அந்தந்த மஹல்லாக்களில் வசிக்கின்ற இமாம்கள் நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது நற்குணம் படைத்த செல்வந்தகளின் மூலமாகவோ குறைந்தபட்சம் ஒரு நாளாவது மீலாது விழாவை நடைமுறைப்படுத்த முயற்ச்சிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து தலைப்புக்குள் நுழைகிறேன்.
மீலாது விழா பித்அத்தா
                                                    நபிகளாரின் அழகிய வரலாற்றை நினைவுகூறும்விதமாகவும், பூமான் நபியை புகழவும் நடத்தப்படுகின்ற மீலாதுவிழாக்கள் என்ன மாநபியின் காலத்தில் இருந்ததா அல்லது சஹாபாக்கள் தான் இது போன்று செய்துள்ளார்களா என்று சிலர் வாய் கிளிய கேட்கலாம். ஏன் புதிதாக ஏற்படுத்தப்படுகிற எல்லா விஷயங்களும் வழிகேடே. அனைத்து வழிகேடுகளும் நரகத்தில்தான் இருக்கும் என பெருமானார் கூறியிருக்கிறார்களே என்று ஹதீஸையும் குறிப்பிடலாம். இத்தகு மடமைத்தனமான பேச்சுக்களில் நமது கொள்கையை இழந்துவிடக் கூடாது. காரணம் நாயகத்தின் காலத்தில் நடைபெறாத எத்தனையோ விஷயங்கள் பிற்காலத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றை நாமும் வறவேற்றுள்ளோம். மார்க்கம் அல்லாத விஷயங்களை தாண்டி மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயத்திலேயே சஹாபாக்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனவே அண்ணல் நபியின் காலத்தில் இல்லாத ஒன்றை செய்வதோ, அல்லது மார்க்கத்தில் புதிதாய் ஒன்றை இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணாக அமையாத விதத்தில் ஏற்படுத்துவதோ  தவறில்லை என்பது தெளிவாகிறது.

கண்மனி நாயகம் ஸல் குறிப்பிடுகிற ஒரு ஹதீஸ் ஸஹீஹுல் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
مَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ
                                          ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தில் நல்ல வழிமுறையை நடைமுறைப்படுத்தி அவ்வழிமுறையை மற்றவர்களும் ஏற்று நடக்கும்போது அவ்வழிமுறையை அறிமுகப்படுத்தியவருக்கு இரட்டிப்பான கூலி கிடைக்கும் என்கின்ற கருத்தை உள்ளடக்கிய பெருமானாரின் போதனைகள்  நல்ல நடைமுறைகள் மார்க்கத்தில் வரவேற்க்கத்தக்கனவே என்பதை எடுத்துரைக்கிறது.
                        
  அவ்வடிப்படையில் மீலாது விழாக்கள் என்பன புதிதாய் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட நல்லவழிமுறையில் கட்டுப்பட்டதே. பெருமானாரின் புகழை பாடவும், அண்ணல் நபியின் அற்புதமான வரலாற்றை பல சமயத்தவர்களுக்கும், ஜனத்தவர்களுக்கும் எத்திவைக்க கிடைத்த மாபெரும் வாய்ப்பு. கண்மனி நாயகத்தின் வழிமுறையை மறந்து தடம் புறண்டு சென்றுக் கொண்டிருக்கிற யுவன் யுவதிகளை நல்வழிப்படுத்தவும், பெருமானாரின் மீது அளப்பெரும் பற்றை உருவாக்கவும் நடத்தப்படுகின்ற மீலாது விழாக்கள் ஒரு போதும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு அப்பாற்பட்டதல்ல.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயேஸ், அண்ணல் நபியின் முன்னிலையிலேயே  அதுவரைக்கும் நடைமுறையில் இல்லாத விஷயங்களை ஸஹாபாக்கள் செய்துள்ளனர். பெருமானாரும் அத்தகு நல்ல விஷயங்களை வரவேற்றுள்ளனர்.

ஹழ்ரத் பிலால் ரலி அவர்கள் எப்பொழுது உளூ செய்தாலும் இரண்டு ரக்அத்கள் தொழும் வழக்கமுடையவர்களாய் இருந்தது.

عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّ النَّبِىَّ - صلى الله عليه وسلم - قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الْفَجْرِ « يَا بِلاَلُ حَدِّثْنِى بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِى الإِسْلاَمِ ، فَإِنِّى سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَىَّ فِى الْجَنَّةِ » . قَالَ مَا عَمِلْتُ عَمَلاً أَرْجَى عِنْدِى أَنِّى لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِى سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِى أَنْ أُصَلِّىَ
صحيح البخاري

தொழுகையில் நிலைநிறுத்தலில் இருக்கும் போது புதிதாக ஒரு வார்த்தையை கூறிய சஹாபி

عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِىِّ قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّى وَرَاءَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ « سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ » . قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ، فَلَمَّا انْصَرَفَ قَالَ « مَنِ الْمُتَكَلِّمُ » . قَالَ أَنَا . قَالَ « رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا ، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ »
صحيح البخاري
நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் உமர் ரலி அவர்கள் எல்லா நபர்களையும் ஒன்று சேர்த்து ஒரு இமாமின் கீழ் தராவீஹை ஜமாஅத்தாக தொழச்செய்தது . அதுவரைக்கும் நடைமுறையில் இல்லாத ஒன்று.  சற்று தெளிவாகக் கூற வேண்டுமென்றால் பெருமானார் ஆரம்பித்து பிறகு வேண்டாம் என்று தடுத்த விஷயம். ஆனால் இன்றைக்கு எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் அகிலம் முழுக்க தராவீஹ் நடத்தப்படுகிறது.
قال عروة فأخبرني عبد الرحمن بن عبد القارى وكان من عمال عمر وكان يعمل مع عبد الله بن الأرقم على بيت مال المسلمين أن عمر بن الخطاب خرج ليلة في رمضان فخرج معه عبد الرحمن فطاف في المسجد وأهل المسجد أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرجال قال عمر والله إني لأظن لو جمعناهم على قارىء واحد لكان أمثل ثم عزم عمر على أن يجمعهم على قارىء واحد فأمر أبي بن كعب أن يقوم بهم في رمضان فخرج عمر والناس يصلون بصلاة قارىء لهم ومعه عبد الرحمن بن عبد القارى فقال عمر نعمت البدعة
سنن البيهقي
குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டது, ஓதும் முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது, ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது, மார்க்கத்தை விளங்க, விளக்க பல நூல்கள் எழுதப்பட்டது போன்ற ஏராளமான விஷயங்களை பித்அதே ஹஸனா என்று சொல்லப்படக்கூடிய மார்க்கத்தில் புதிதாய் ஏற்படுத்தப்பட்டு வரவேற்க்கத்தக்கதாய் அமைந்த காரியங்களுக்கு உதாரணமாய் குறிப்பிடலாம்.
இவ்வடிப்படையில் பார்க்கும் போது மாநபியை நினைவுகூர்ந்து மீலாது விழாக்கள் நடத்துவது ஒரு போதும் மார்க்கத்திற்கு முரணான காரயமாக ஆகாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
وروينا في حديث عبد الله بن مسعود أنه قال : « إن الله عز وجل نظر في قلوب العباد فاختار محمدا صلى الله عليه وسلم ، فبعثه برسالته وانتخبه بعلمه ثم نظر في قلوب الناس بعده فاختار له أصحابه ، فجعلهم أنصار دينه ووزراء نبيه صلى الله عليه وسلم ، فما رآه المؤمنون حسنا فهو عند الله حسن وما رأوه قبيحا فهو عند الله قبيح »
معرفة السنن والاثار للبيهقي
பெருமானார் ஸல் அவர்கள் ஓர் ஹதீஸில் இப்படி குறிப்பிடுவார்கள் முஃமின்கள் ஒரு விஷயத்தை நல்லதாகக் கருதினால் அது அல்லாஹ்விடத்திலும் நல்லதாய் இருக்கும். முஃமின்கள் ஒரு விஷயத்தை வெறுப்பாகக் கருதினால் அது அல்லாஹ்விடத்திலும் வெறுப்பானதாய் இருக்கும்.
மீலாது விழா என்பது நேற்றோ  இன்றோ  தற்காலிகமாய் தொடங்கப்பட்டவை அல்ல மாறாக பெருமானாரின் முஹப்பத்தை மனதில் விதைக்கவும், அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளவும், மாநபியின் புகழை மென்மேலும் பரப்பவும் பந்நூற்றாண்டுகளாய் பாரம்பரியமிக்கதாய் உலகில் நடைபெற்றுவருகின்ற விஷயம் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஹதீஸோடு நம் செயல்களை நாம் தொடர்புபடுத்தி பார்த்தால் நாம் சத்தியவான்கள் என்பதை தெளிந்த நீரோடை போன்று விளங்கிக் கொள்ளலாம்.

மேற்படி விஷயங்களுக்கு கீழ் உள்ள தலைப்பை சுடக்கவும்
 மீலாது காலத்தின் கட்டாயம்-1

No comments: