இன்றைய உலகில் மக்களுடன் பழகுகிற போது
ஒரு நளினத்தை கையாள மறந்து விடுகிறார்கள். குறிப்பாக தவறுகளை சுட்டி காட்டுகிற
விஷயத்தில் இந்த போக்கு மிகவும் அவசியம். காரணம் நளினமான முறையில் ஒரு செய்தியை
சொல்லும் பொது அதை எடுத்து கொள்ள மக்கள் முன் வருவார்கள். ஆனால் அதே விஷயத்தை
கொஞ்சம் கடினமாகவோ அல்லது அவர்களை இழிவுபடுத்தும் போக்கை நாம் கையாண்டால் எந்த
பயனும் இல்லை. மாறாக தவறை சுட்டி காட்டுகிற நம் மீதே அவர்கள் கோபப்பட வாய்ப்பு
உண்டு. எனவே எந்த விஷயத்திலும் ஒரு நளினத்தை ஒரு சூத்சுமத்தை கையாலுதல் நன்மை
தரும்.
பெருமானார்
சள்ளல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்களின் குணமும் கண்டிக்கும் விதமும் நிதானமாகவும்
நளினமாகவும் இருந்ததால் தான் இன்றைக்கும் பல மாற்று சகோதர மதத்தை சார்தவர்களும்
அவர்களை பின்பற்றுகிறார்கள்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறுகிறார்கள். “ நான் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு ஒன்பது வருடம்
பணிவிடை செய்தேன். ஆனால் எனக்கு அவர்கள் இன்ன இன்ன வேலையை ஏன் செய்தாய் என
என்னிடம் அவர்கள் இதுவரை கேட்டதில்லை. (நான் செய்த) எந்த விஷயத்தையும் என் மீது
குறை சொன்னது இல்லை.”
53 - (2309) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ
نُمَيْرٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، حَدَّثَنِي
سَعِيدٌ وَهُوَ ابْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: " خَدَمْتُ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ، فَمَا أَعْلَمُهُ قَالَ لِي
قَطُّ: لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا؟ وَلَا عَابَ عَلَيَّ شَيْئًا قَطُّ "
صحيح
مسلم 4/ 1804
இது பெருமானாரின் பண்புகளில் ஒன்று. தேவை
இல்லாத விமர்சனமும் அநாகரீகமான போக்கும் அவர்களிடம் காணப்படாது. ஒன்பது வருடம்
பெருமானாரோடு இருந்த ஒரு சஹாபியின் வாக்குறுதியை வைத்து பார்க்கிற பொது அவர்கள்
தவறை கண்டிக்கிற விதம் மேன்மையானதாக இருந்தது என்பது விளங்குகிறது. காரணம் அனஸ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்ற போது பெருமானார் என்னை குறை சொன்னது
இல்லை என்ற வாசகத்திலிருந்து அவர்களின் சில செயல்கள் அது கண்டிக்க தக்க வகையில்
இருந்திருக்கும் என்பதும் புரிகிறது. காரணம் அவர்கள் சிறு வயதில் இருக்கும் போது
பெருமானாருடன் இருந்து பனி விடை செய்தார்கள். சிறுவராக இருக்கும் போது யதார்த்தமான
சில பிழைகள் வருவது இயல்பான ஒரு விஷயம் தான்.
இரண்டாவது செய்தி நம்மை விட சிறு வயது
உடையவர்கள் தவறு செய்து விட்டால் அதை மிக நளினமாக சுட்டிகாடுகிற பொறுப்பு பெரியவர்களுக்கு
உண்டு. காரணம் சிறியவர்களுக்கு பரந்த பக்குவம் ஆழ்ந்த அறிவு இருக்கும் என்று சொல்ல
முடியாது. சிறியவர்களின் மனம் புண் படும்பாடி நாம் தவறை சுட்டிக்காட்டினால் அந்த
தவறை விடுவதற்கு பதிலாக நாம் சொல்லுகிற விஷயத்திற்கு எதிராக செயல்பட முற்படுவார்கள்.
ஒரு முறை பெருமானார் சள்ளல்லாஹு அலைஹி
வ சல்லம் அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து ஒரு வேலையை சொல்லி அதை
செய்து முடித்து வர சொன்னார்கள்.அதற்க்கு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்ல
மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களின் உள்ளத்தில் அந்த வேலைக்கு செல்ல
வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வெளியே சென்று கடைவீதியில் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். அங்கு வந்த பெருமானார் அவர்களின் பின் கழுதை பிடித்து அவர்களை பார்த்து
சிரித்தபின் பெருமானார் சொன்னார்கள் (என்னமா) அனஸ் (செல்லமான தோரணையில்) நான்
சொன்ன வேலையை செய்யுங்களேன் என்றார்கள். அதற்க்கு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
செய்கிறேன் என்று சென்றார்கள்.
இந்த ஹதீஸை சொல்லுவதற்கும் முன் அனஸ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொல்லித்தான் ஆரம்பிப்பார்கள் “كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا،” பெருமானார்
மக்களில் அழகிய குணம் படைத்தவர்கள்.
6031 - حَدَّثَنَا
أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا أَبُو يَحْيَى هُوَ
فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ أُسَامَةَ، عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ سَبَّابًا، وَلاَ فَحَّاشًا، وَلاَ لَعَّانًا، كَانَ يَقُولُ لِأَحَدِنَا
عِنْدَ المَعْتِبَةِ: «مَا لَهُ تَرِبَ جَبِينُهُ»
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
கூறுகிறார்கள் நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் திட்டுபவராக அசிங்கமான
குணம் படைத்தவராக சாபம்விடுபவராக இல்லை.எங்களில் ஒருவரை கண்டிக்கும்போது “ மா தரிப
ஜபீனுஹு ” என்று கூறுவார்கள். அதாவது இது அரபி புழக்க வார்த்தை இதன் நேரடி பொருள்
அவருக்கு என்ன ஆயிற்று அவர் நெற்றியில் மண் ஒட்டட்டும். இது அரபிகளின் சாதானமான
கண்டிப்பிர்குரிய வார்த்தை. இது போன்ற மென்மையான கையாடலை பெருமானார் பின்பற்றினார்கள்.
55 - أَخْبَرَنَا
سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ
قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى الْمَسْجِدِ فَبَالَ فَصَاحَ
بِهِ النَّاسُ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتْرُكُوهُ»
. فَتَرَكُوهُ حَتَّى بَالَ، ثُمَّ أَمَرَ بِدَلْوٍ فَصُبَّ عَلَيْهِ
[سنن النسائي
1/ 48]
பள்ளியில் ஒரு கிராமத்து
அரபி சிறிநீர் கழிக்கும் பொது மக்கள் சப்தமிட்டார்கர் ஆனால் பெருமானார் அவர்களில்
விட்டுவிடுங்கள் என்று தடுத்த்தார்கள். அந்த கிராமத்து அரபி முழுவதும் சிறிநீர்
கழித்து விட்ட பிறகு வாளியில் தண்ணீர் கொண்டு வர சொல்லி அதில் ஊற்ற சொன்னார்கள்.
பள்ளியில் அசுத்தம்
செய்வது மிகப்பெரிய குற்றம். அது அல்லாஹ்வின் பள்ளியை இழுவுபதுதுவது போல என மக்கள்
நினைத்து சப்தமிட்டர்கள். ஆனால் பெருமானார் அதை அமைதியான முறையில் கண்டித்தார்கள்.
இதில் பல நன்மைகள் உண்டு. ஒருகால் அந்த மக்கள் சப்தமிட்டு அந்த கிராமத்து அரபி
எழுந்த ஓட நினைத்தால் சிறுநீரை உடனே கட்டுப்படுத்த முடியாத எனவே அவர் பள்ளி பெரும்
அளவில் அசுத்தமாகிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு, அதே போல் சிறுநீர் கழிக்கும்
போது பாதியில் நிறுத்துவது அவருக்கு உபாதை. இது போன்ற சில தீமைகள் இங்கு
பெருமானாரின் மேன்மையான கையாடலால் நமக்கு கிடைத்திருக்கிறது.
பெருமானார் சள்ளல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் ஒரு
பிரயாணத்தில் இருக்கும் போது மக்களுக்கு தோழா வைத்தார்கள். அப்போது ஒரு நபர்
மட்டும் தொழாமல் தனியாக நின்றுகொண்டிருந்தார். அவரை அழைக்த்து என்ன காரணம் என
கேட்டார்கள். அதற்க்கு அவர் எனக்கு குழிப்பு கடமையாகிவிட்டது ஆனால் தண்ணீர் இல்லை
என்றார். قَالَ: «مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ
القَوْمِ؟» قَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ
بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ
அதற்க்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சுத்தமான
மண்ணை எடுத்து தயம்மம் செய்ய பயன்படுத்த சொன்னார்கள். அதுவே போதும் என்றார்கள்.
இதில் ஒரு நபர்
தொழுகைக்கு வர வில்லை என்று அவர்கள் கோபம் ஏதும் கொள்ளவில்லை. அதற்குரிய நியாயமான
காரணத்தை முதலில் கேட்டு அதற்குரிய தீர்வை பெருமானார் மென்மையான முறையில்
தந்தார்கள். இது போன்று நளினமான தவறை திருத்துகிற அல்லது விசாரிக்கிற போக்கும்
பொறுமையும் மக்களிடத்தில் இருப்பது இல்லை. தங்களையே உண்மையானவர்களாக மட்டும்
நினைக்கிற குணமும் சில நபரிடத்தில் உண்டு.
சில வித்தியாசங்களை
புரிந்து கொள்ள மக்கள் முன்வருவதில்லை. தருகள் சில நேரங்களில் தெரியாமலும்
ஏற்படும் சில நேரங்களில் தெரிந்து ஏற்படும். சில நேரம் நிர்பந்த்மாகவும் ஏற்படும்.
தவறு நடந்து விட்டது என்பதற்காக எல்லாரும் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாத.
காரணம் இயல்பாகவே தவறு செய்யும் குணம் மனிதனுக்கு உண்டு. எனவே தவறை கண்டிக்கிற
விதத்தை மாற்றி அமைத்தல் நன்மைக்கு வழி சேர்க்கும்.
சிலர்களின் தற்காலிக
செயலை அவர்களின் நிரந்தர குணம் என்றும் சிலர்கள் தவறாக நினைத்து கொள்கிறார்கள்
அதுவும் தவறான போக்கு என்பதையும் தரவரை சுட்டி காட்டும் பார்வையாளர் விளங்கி கொள்ள
வேண்டும். தவறை சுட்டிகாடுகிறேன் என வந்து தானே தவறி போகின்ற படு மோசமான நிலையை
விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.
கேட்ட குணம்
படிதவரிடத்திலும் பெருமானார் மென்மையான பேச்சையே மேற்கொண்டார்கள்.
73 - (2591) حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو
النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ نُمَيْرٍ كُلُّهُمْ عَنِ ابْنِ
عُيَيْنَةَ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ وَهُوَ ابْنُ
عُيَيْنَةَ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ،
يَقُولُ: حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ائْذَنُوا لَهُ، فَلَبِئْسَ ابْنُ
الْعَشِيرَةِ، أَوْ بِئْسَ رَجُلُ الْعَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ عَلَيْهِ أَلَانَ
لَهُ الْقَوْلَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ قُلْتَ لَهُ
الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ؟ قَالَ: «يَا عَائِشَةُ إِنَّ
شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ، مَنْ وَدَعَهُ، أَوْ
تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ»
ஒரு முறை பெருமானார்
சபைக்கு ஒரு நபர் வர அனுமதி கேட்டார் அதற்க்கு பெருமானார் அவரை உள்ள வர அனுமதி
தந்து விட்டு அவர்களின் தோழர்களுக்கு சொன்னார்கள். (உள்ளே வரும் நபர்) அவர்களின்
கூட்டத்தில் மிக மோசமானவர்.(காரணம் முஸ்லிம்கள் அவரை ஒரு முஸ்லிம் என
நினைதுகொண்டிருந்தார்கள் ஆனால் அவர் உண்மையான முஸ்லிம் இல்லைல் ஈமானில் பலமும்
இல்லை. இதை முஸ்லிம்களுக்கு விளக்குவதற்காக அவ்வாறு சொன்னார்கள்) உள்ளே வந்த
நபரிடத்தில் பெருமானார் மேன்மையான வார்த்தைகளை கொண்டு பேசினார்கள் எந்த கோபத்தையும்
அவர்கள் காட்ட்டவில்லை. பின் அந்த நபர் சென்று விட்ட பிறகு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அவர்கள் கேட்டார்கள். யா ரசூலல்லாஹ் அவர் விஷயத்தில் நீங்கள் இவ்வாறு சொன்னீர்கள்
ஆனால் அவரோடு மென்மையாக பேசினீர்களே என கேட்க அதற்கு பெருமானார் மறுமையில்
மக்களில் மிக மோசமானவர்கள் யாரை மக்கள் அவரின் அசிங்கமான் குணத்தை விட்டும் ஒதுங்க
வேண்டும் என்பதற்காக விட்டு விடுகிறார்களோ அவர் தான் மிக கேட்டவர் என்ற
கருத்துப்பட ஒரு செய்தியை அங்கு சுட்டி காட்டுகிறார்கள்.
எனவே ஒருவர் தவறானவர்
என்று தெளிவாக தெரிந்தாலும் அவரிடத்தில் ஒரு நளி போக்கை கையாழுதலே பெருமானாரின்
உண்மையான குணம் என்பதை நாம் புரிய வேண்டும். பெருமானாரை பின் பற்றுகிற நாம்
அவர்களின் செயல்களை மட்டும் அல்ல அவர்களின் குணங்களையும் பின்பற்ற நாம்
முற்படவேண்டும்.
1 comment:
பெருமானார் என்று மட்டும் போடுவதை சலல்லாஹூ அலைஹி வசல்லம் என முழுமையா போட்டால் மற்றவரும் முழுமையாக படிப்பார்கள் நாமே இப்படி போடுவது சரி என படவில்லை
நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
Post a Comment