இஸ்லாமும் விளையாட்டும்
மணலில் மாளிகை கட்டி, சுட்டி சாமான்களில் கூட்டாஞ் சோறாக்கி, தம் விருப்பு வெறுப்பை பகிர்ந்து கொள்ளும் முதல் நண்பனாய் பொம்மைகளோடு மழலை மொழிகளில் உறவாடிய தருணங்கள் இன்றளவும் நாம் ருசிக்கும் சிறுபிள்ளை விளையாட்டாகும்.
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் பொம்மை விளையாட்டு:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي
நாயகத்தின் மனைவி ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் சிறுவயதிலே பொம்மைகள் வைத்து தன் தோழிகளுடன் விளையாடுவதாக சொல்வதில் குழந்தைகளுக்கான யதார்த்த சுட்டித்தனத்தை நம்மால் அறிய முடிகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ ابوداوود
அப்படி ஒருநாள் தனியாக என் குழந்தைகளான பொம்மைகளோடு உறவாடிக் கொண்டிருந்த போது, அது என்ன என ஒரு பொம்மையை காட்டி நாயகம் கேட்க, நான் அது குதிரை என்றேன். அதை பார்த்த நாயகம் ஆச்சிரியத்தோடு என்ன உன் குதிரைக்கு இறகுகள் உள்ளதே ஆயிஷா என கேட்டார்கள். உடனே நான் நபி சுலைமான் (அலை) அவர்களின் குதிரைக்கு இறக்கைகள் இருந்ததல்லவா (அது போன்று தான் இதுவும்) என என் பதில் கேட்டு பெருமானார் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள் என தன் குழந்தைப் பருவ நிகழ்வை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
இப்படி நம் குழந்தைபருவம் முதல், நண்பர்களோடு வீதியில் விளையாடும் கண்ணா மூச்சியும், தாய் நாட்டிற்கு கௌரவத்தை பெற்றுத்தரும் நோக்கில் விதிமுறைக்கு உட்பட்டு விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் தோன்றியதின் பிரதானமே, உடல் நலத்தையும், அதன் ஆரோக்கியத்தையும் மையப்படுத்தியதாகத் தான் அமைந்துள்ளது. காரணம்,
விளையாட்டு ஸ்ரீ விளை10ஆட்டு. விளை என்றால் உற்பத்தி ஆக்கு, வளரச் செய், எனவும், ஆட்டு என்றால் அசைத்தல், குளுக்குதல், எனவும் பொருள்படும். ஆக உடல் உறுப்புகளை பல கோணங்களில் அசைப்பதின் மூலம் உடலில் உற்பத்தியாகும் வலிமையும், வளர்ச்சியும் தான் விளையாட்டு, உடற்பயிற்சி, எனச் சொல்லப்படும்.
உடல் ஆரோக்கியத்தை வலியுத்தும் இஸ்லாம்:
யமன் தேசத்தில் ஸபா என்ற பகுதியை ஆட்சி செய்த பல்கீஸ் என்ற அரசிக்கு நபி சுலைமான் (அலை) இறைத்தூதுவச் செய்தியை தன் ஹூத்ஹூத் பறவை மூலம் கடிதமாக எழுதி அனுப்பினார்கள். இக்கடிதம் குறித்து அரசி தன் நாட்டு பிரமுகர்களிடம் ஆலோசனை கேட்ட போது, அதற்கு அவர்கள் பெருமையாக சொன்ன பதிலை குர்ஆனில் இறைவன் அப்படியே கூறுகிறான்.
قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32) قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ
شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33) - النمل .
'நஹ்னு உலூ குவ்வத்தின்' - நாங்கள் பலசாலிகள்;;, என்றாலும் அரசியின் முடிவே இறுதியானது என பதில் சொன்னார்கள். உடல் பலமும், அதன் வலிமையும் உண்மையில் பெருiமிக்கது என்பதிற்கு குர்ஆன் சான்று.
தொழுகையும் உடற்பயிற்சியும்:
நின்று கைகளை உயர்த்தி, குனிவதும் நிமிர்வதுமாக, பூமியோடு தலை வைத்து இறைவணக்கம் செய்வதுமாக ஒவ்வொரு இஸ்லாமியனும் நாளொன்றுக்கு ஐ வேளை தொழுகின்ற தொழுகை நல்லதோர் உடற்பயிற்சி மிகு வழிபாடு எனவும் உணரமுடிகிறது.
பெருமை, கவுரவம், பொழுதுபோக்கு என்பதை தாண்டி உடலுக்கும், உணர்வுக்குமான வலிமையும், புத்துணர்வும், ஆரோக்கியமும் விளையாட்டுகளில் அபரிமிதமாய் நிரம்பக் கிடைக்கிறது. இறைவனிடம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் என்பது நபியின் பொன்மொழியாகும்.
ورغب رسول الله محمد بن عبد الله صلى الله عليه وسلم بها وكان يوجه الصحابة إليها، لما فيها من تقوية للأجساد والمحافظة على سلامتها. قال : 'المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف، وفي كلٍّ خير'. (صحيح مسلم، كتاب القدرة، باب في الامر قوة
பலகீனமான ஒரு இஸ்லாமியனை விட பலம் வாய்ந்த வலிமை மிகு இஸ்லாமியன் சிறந்தவன், அவன் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவன் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஆனால்... மாலை சிறிது நேரம் விளையாட்டு என்பதெல்லாம், இன்று நம் குழந்தைகளின்; கம்யூட்டர் ஸ்கிரீனுக்குள் இரு விரல்களின் அசைவோடு மௌனமாகிப் போனது.
அன்று உடல் ஆரோக்கியத்தோடு நமக்குள் ஒரு வித சிநேகத்தை, பிணைப்பை, புரிந்துணர்வை, விட்டுக்கொடுத்தலை, தலைமைத்துவத்தை கற்றுதந்த பாரம்பரியமிகு மண்ணோடு ஆடிய விளையாட்டுகள்; எல்லாம் குறைந்து, இன்று நம் குழந்தைகளின் சிரிப்பையும், புன்முறுவலையும் பறித்துக் கொள்கிற தனிமையான மின் விளையாட்டனதே என்பது தான் நம்மின் அதீத கவலையாக இருக்கிறது.
நம் வீதியோர விளையாட்டுகள் அநாகரிகமானது அல்ல. அதுதான் நம் பாரம்பரியமும் கலச்சாரமும் என்பதை நாம் உணரவேண்டும்.
وقد قال النبى ـ صلى الله عليه وسلم ـ لعبد الله بن عمرو بن العاص، وقد أرهق نفسه بالعبادة صياماً وقياماً: صم وأفطر، وقم ونم، فإن لبدنك عليك حقاً، وإن لعينك عليك حقاً متفق عليه عن عبد الله بن عمرو بن العاص
சற்றும் உண்ணாமலும், உறங்காமாலும் நோன்பு, இறைவணக்கம் என இருந்த நபிதோழர் ஹஜ்ரத் அம்ரு இப்னு ஆஸ் அவர்களிடம், உங்கள் உடலையும் அதன் உறுப்புகளையும் சரியாக பராமரிப்பது உங்கள் மீது கட்டாயம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள்.
ஆக உடல் நலம் பாதிக்கின்ற அளவிலான வணக்க வழிபாடும் கூட சில நேரங்களில் குறைத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை புரிய முடிகிறது.
விளையாட்டு உபகரணங்களோடு அல்லது அவைகள் இல்லாமல், தனியாகவோ குழுவாகவோ, நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என பலவகை விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன இன்று. அன்று...?
பெருமானர் காலத்து விளையாட்டுகள்:
• ஓட்டபந்தயம்
நபிதோழர்களான அப்துல்லாஹ் (ரலி), உபைதுல்லா (ரலி), மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் பெருமானார் அவர்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். என்னிடம் யார் முதலிலே வந்து வெற்றி பெறுவீர்களோ அவர்களுக்கு இன்ன இன்ன பரிசுகள் உண்டு என சொல்வார்கள். அப்படி ஓட்டப்பந்தயத்தில் கலந்து தமக்கு முன்பாக ஓடி வந்து நிற்கும் அனைத்து குழந்தைகளையும் மகிழ்ச்சியில் கட்டியணைத்து முத்தமிட்டு ஆர்வமூட்டுபவர்களாக அண்ணலார் இருந்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) என்ற நபிதோழர் சொல்கிறார்;.
ومرة تسابق مع عائشة فقالت: تسابقت أنا ورسول الله فسبقته، فلما ركبني اللحم سبقني، فقال:ياعائشة هذه بتلك تعادل
பெருமானருக்கும், மனைவியான ஆயிஷா (ரலி) இருவருக்குமிடையே ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் ஒருமுறை நாயகமும், மற்றொரு முறை ஆயிஷா அவர்களும் பெற்றிப் பெற்றார்கள்.
• குதிரை பந்தயமும், ஓட்டகப் பந்தயமும்:
ففي حديث أبو هريرة، أن النبي قال: 'لا سبق إلا في خُفِ أو حافر أو نصل'. (سنن أبو داوود، كتاب الجهاد، باب السبق.)
நடைபெற்ற குதிரை பந்தயத்தில் தான் வெற்றிப்றெ;றதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வெகு மதிகளும் வழங்கப்பட்டது.
• மல்யுத்தம்:
وَعَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ رُكَانَةُ : أَنَّ رُكَانَةُ صَارَعَ النَّبِيَّ ? فَصَرَعَهُ النَّبِيُّ ? . رَوَاهُ أَبُو دَاوُد
பலத்தை மட்டும் வெளிப்படுத்தும் N;நாக்கில் நட்புறவோடு மல்யுத்தப் போட்டிகள் பெருமானார் காலத்தில் நடைபெற்றது. மதீனாவின் யாரும் எளிதில் சாய்த்;திட முடியாத பலம்வாய்ந்த மல்யுத்த வீரராக இருந்த ருகானா இப்னு ஜைது என்பவரோடு பெருமானார் (ஸல்) அவர்கள் மல்யுத்தம் செய்து வெற்றிப் பெற்றார்கள்.
• வீர வாள் விளையாட்டு:
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ ? بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ فَأَهْوَى إلَى الْحَصْبَاءِ فَحَصَبَهُمْ بِهَا فَقَالَ رَسُولُ اللهِ ? : « دَعْهُمْ يَا عُمَرُ. مُتَّفَقٌ عَلَيْهِ
நாயகம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்குள் வந்த போது மனதில் ஏற்ப்பட்ட மகிழ்ச்சியில் வீர வாள் விளையாட்டு நடைபெற்றது. அதை தடுக்கச் சென்ற உமர் அவர்களிடம் உமரே விளையாடட்டும் விட்டுவிடுங்கள் என நாயகம் சொன்னார்கள்.
• பளுதூக்குதல்:
கனமான கற்களை வைத்து பளுதூக்குகின்ற முறைக்கு 'அர்ருப்ஹ்' என்று அரபுலகில் அழைக்கப்பட்டது. பளுதூக்குதலில் பிரசித்தப் பெற்றவர்களாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்சாரி என்ற நபிதோழர் இருந்தார்கள்.
பல பேர் சேர்ந்தாலும் தூக்கிட முடியாத கைபர் கோட்டையின் கதவுகளை ஹஜ்ரத் அலி ஒருவரே தூக்கினார்கள் என்பது அவர்களின் பலத்தையும், பளுதூக்குதலையும் நமக்கு காட்டுகிறது.
• நீச்சல், அம்பு எய்தல்:
وورد عن رسول الله صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم علموا أبنائكم السباحة والرماية، ونعم لهو المؤمنة في بيتها المغزل، وإذا دعاك أبواك فأجب أمك
குழந்தைகளுக்கு நீச்சலையும், அம்பு எறிதலையும் கற்றுக் கொடுங்கள் என அண்ணலார் அவர்கள் சொன்னார்கள்.
இப்படி பல்வேறு விதமான விளையாட்டுகள் விளையாட்டப்பட்டன. என்றாலும் அனைத்து விளையாட்டுகளும், போட்டிகளும் பலத்தையையும், திறமையையும் மையப்படுத்தியே நடைபெற்றது என்பதை தெளிவாக புரிய வேண்டும்.
• தாயம் விளையாடுவது தடுக்கப்பட்டது:
« مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ » قَالَ النَّوَوِيُّ : النَّرْدَشِيرُ هُوَ النَّرْدُ عَجَمِيٌّ مُعَرَّبٌ ، وَشِيرُ مَعْنَاهُ حُلْوٌ . وَقِيلَ : هُوَ خَشَبَةٌ قَصِيرَةٌ ذَاتُ فُصُوصٍ يُلْعَبُ بِهَا وَهَذَا الْحَدِيثُ حُجَّةٌ لِلشَّافِعِيِّ وَالْجُمْهُورِ فِي تَحْرِيمِ اللَّعِبِ بِالنَّرْدِ .
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ : أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ أَحَداً مِنْ أَهْلِهِ يَلْعَبُ بِالنَّرْدِ ضَرَبَهُ وَكَسَرَهَا
• சூதாட்டம் தடுக்கப்பட்டது:
இறைசிந்தனையை விட்டுத் தூரப்படுத்தும் அளவிலான விளையாட்டும், போட்டிகளும் சற்று குறைத்து கொள்வது அவசியமாகும். அதேபோல் பொதுவாகவும், விளையாட்டு போட்டிகளின் வெற்றியின் பேரிலும் நடைபெறும் சூதாட்டத்தை இஸ்லாம் தடுக்கிறது. காரணம் சூதாட்டம் ஷைத்தானின் செயல்களில் மிககேடு கெட்டதாகும். அவற்றை விட்டுவிடுவதில் தான் உண்மையான வெற்றி உள்ளது என குர்ஆன் வழியாக இஸ்லாம் உலகுக்கு சொல்கிறது.
'உடலை உறுதி செய்' - இன்று அனைவருக்கமான மந்திரச் சொல் இது. ஏனென்றால் எல்லா நோய்களின் தாக்கமும், அதன் வீரியமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் மூலம் நம்; கட்டுக்குள் வருகிறது என்கிறது இன்றைய மருத்துவத்தின் ஆராய்ச்சி முடிவுகள்;. இது உண்மையும் தானே.
அதனால் தான் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஆரோக்கியமிகு உணவுகளோடு வயதிற்கேற்ற உடற்பயிற்சியும், விளையாட்டும் சிறப்பானதொரு மருந்தாக இன்று பரிந்துரைக்கப்படுகிறது
முழுமையான உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதைவிட மிக அவசியமாய் நமக்கெல்லாம் தேவைப்படுவது உறுதியான மனமும் திடமான உள்ளமும் தான்;.
விளையாட்டால் உடலையும், இறை தியானத்தால் உள்ளத்தையும் வலிமையாக்குவோம்.
இஸ்லாமும் விளையாட்டும்
மணலில் மாளிகை கட்டி, சுட்டி சாமான்களில் கூட்டாஞ் சோறாக்கி, தம் விருப்பு வெறுப்பை பகிர்ந்து கொள்ளும் முதல் நண்பனாய் பொம்மைகளோடு மழலை மொழிகளில் உறவாடிய தருணங்கள் இன்றளவும் நாம் ருசிக்கும் சிறுபிள்ளை விளையாட்டாகும்.
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் பொம்மை விளையாட்டு:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي
நாயகத்தின் மனைவி ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் சிறுவயதிலே பொம்மைகள் வைத்து தன் தோழிகளுடன் விளையாடுவதாக சொல்வதில் குழந்தைகளுக்கான யதார்த்த சுட்டித்தனத்தை நம்மால் அறிய முடிகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ ابوداوود
அப்படி ஒருநாள் தனியாக என் குழந்தைகளான பொம்மைகளோடு உறவாடிக் கொண்டிருந்த போது, அது என்ன என ஒரு பொம்மையை காட்டி நாயகம் கேட்க, நான் அது குதிரை என்றேன். அதை பார்த்த நாயகம் ஆச்சிரியத்தோடு என்ன உன் குதிரைக்கு இறகுகள் உள்ளதே ஆயிஷா என கேட்டார்கள். உடனே நான் நபி சுலைமான் (அலை) அவர்களின் குதிரைக்கு இறக்கைகள் இருந்ததல்லவா (அது போன்று தான் இதுவும்) என என் பதில் கேட்டு பெருமானார் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள் என தன் குழந்தைப் பருவ நிகழ்வை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
இப்படி நம் குழந்தைபருவம் முதல், நண்பர்களோடு வீதியில் விளையாடும் கண்ணா மூச்சியும், தாய் நாட்டிற்கு கௌரவத்தை பெற்றுத்தரும் நோக்கில் விதிமுறைக்கு உட்பட்டு விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் தோன்றியதின் பிரதானமே, உடல் நலத்தையும், அதன் ஆரோக்கியத்தையும் மையப்படுத்தியதாகத் தான் அமைந்துள்ளது. காரணம்,
விளையாட்டு ஸ்ரீ விளை10ஆட்டு. விளை என்றால் உற்பத்தி ஆக்கு, வளரச் செய், எனவும், ஆட்டு என்றால் அசைத்தல், குளுக்குதல், எனவும் பொருள்படும். ஆக உடல் உறுப்புகளை பல கோணங்களில் அசைப்பதின் மூலம் உடலில் உற்பத்தியாகும் வலிமையும், வளர்ச்சியும் தான் விளையாட்டு, உடற்பயிற்சி, எனச் சொல்லப்படும்.
உடல் ஆரோக்கியத்தை வலியுத்தும் இஸ்லாம்:
யமன் தேசத்தில் ஸபா என்ற பகுதியை ஆட்சி செய்த பல்கீஸ் என்ற அரசிக்கு நபி சுலைமான் (அலை) இறைத்தூதுவச் செய்தியை தன் ஹூத்ஹூத் பறவை மூலம் கடிதமாக எழுதி அனுப்பினார்கள். இக்கடிதம் குறித்து அரசி தன் நாட்டு பிரமுகர்களிடம் ஆலோசனை கேட்ட போது, அதற்கு அவர்கள் பெருமையாக சொன்ன பதிலை குர்ஆனில் இறைவன் அப்படியே கூறுகிறான்.
قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32) قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ
شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33) - النمل .
'நஹ்னு உலூ குவ்வத்தின்' - நாங்கள் பலசாலிகள்;;, என்றாலும் அரசியின் முடிவே இறுதியானது என பதில் சொன்னார்கள். உடல் பலமும், அதன் வலிமையும் உண்மையில் பெருiமிக்கது என்பதிற்கு குர்ஆன் சான்று.
தொழுகையும் உடற்பயிற்சியும்:
நின்று கைகளை உயர்த்தி, குனிவதும் நிமிர்வதுமாக, பூமியோடு தலை வைத்து இறைவணக்கம் செய்வதுமாக ஒவ்வொரு இஸ்லாமியனும் நாளொன்றுக்கு ஐ வேளை தொழுகின்ற தொழுகை நல்லதோர் உடற்பயிற்சி மிகு வழிபாடு எனவும் உணரமுடிகிறது.
பெருமை, கவுரவம், பொழுதுபோக்கு என்பதை தாண்டி உடலுக்கும், உணர்வுக்குமான வலிமையும், புத்துணர்வும், ஆரோக்கியமும் விளையாட்டுகளில் அபரிமிதமாய் நிரம்பக் கிடைக்கிறது. இறைவனிடம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் என்பது நபியின் பொன்மொழியாகும்.
ورغب رسول الله محمد بن عبد الله صلى الله عليه وسلم بها وكان يوجه الصحابة إليها، لما فيها من تقوية للأجساد والمحافظة على سلامتها. قال : 'المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف، وفي كلٍّ خير'. (صحيح مسلم، كتاب القدرة، باب في الامر قوة
பலகீனமான ஒரு இஸ்லாமியனை விட பலம் வாய்ந்த வலிமை மிகு இஸ்லாமியன் சிறந்தவன், அவன் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவன் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஆனால்... மாலை சிறிது நேரம் விளையாட்டு என்பதெல்லாம், இன்று நம் குழந்தைகளின்; கம்யூட்டர் ஸ்கிரீனுக்குள் இரு விரல்களின் அசைவோடு மௌனமாகிப் போனது.
அன்று உடல் ஆரோக்கியத்தோடு நமக்குள் ஒரு வித சிநேகத்தை, பிணைப்பை, புரிந்துணர்வை, விட்டுக்கொடுத்தலை, தலைமைத்துவத்தை கற்றுதந்த பாரம்பரியமிகு மண்ணோடு ஆடிய விளையாட்டுகள்; எல்லாம் குறைந்து, இன்று நம் குழந்தைகளின் சிரிப்பையும், புன்முறுவலையும் பறித்துக் கொள்கிற தனிமையான மின் விளையாட்டனதே என்பது தான் நம்மின் அதீத கவலையாக இருக்கிறது.
நம் வீதியோர விளையாட்டுகள் அநாகரிகமானது அல்ல. அதுதான் நம் பாரம்பரியமும் கலச்சாரமும் என்பதை நாம் உணரவேண்டும்.
وقد قال النبى ـ صلى الله عليه وسلم ـ لعبد الله بن عمرو بن العاص، وقد أرهق نفسه بالعبادة صياماً وقياماً: صم وأفطر، وقم ونم، فإن لبدنك عليك حقاً، وإن لعينك عليك حقاً متفق عليه عن عبد الله بن عمرو بن العاص
சற்றும் உண்ணாமலும், உறங்காமாலும் நோன்பு, இறைவணக்கம் என இருந்த நபிதோழர் ஹஜ்ரத் அம்ரு இப்னு ஆஸ் அவர்களிடம், உங்கள் உடலையும் அதன் உறுப்புகளையும் சரியாக பராமரிப்பது உங்கள் மீது கட்டாயம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள்.
ஆக உடல் நலம் பாதிக்கின்ற அளவிலான வணக்க வழிபாடும் கூட சில நேரங்களில் குறைத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை புரிய முடிகிறது.
விளையாட்டு உபகரணங்களோடு அல்லது அவைகள் இல்லாமல், தனியாகவோ குழுவாகவோ, நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என பலவகை விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன இன்று. அன்று...?
பெருமானர் காலத்து விளையாட்டுகள்:
• ஓட்டபந்தயம்
நபிதோழர்களான அப்துல்லாஹ் (ரலி), உபைதுல்லா (ரலி), மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் பெருமானார் அவர்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். என்னிடம் யார் முதலிலே வந்து வெற்றி பெறுவீர்களோ அவர்களுக்கு இன்ன இன்ன பரிசுகள் உண்டு என சொல்வார்கள். அப்படி ஓட்டப்பந்தயத்தில் கலந்து தமக்கு முன்பாக ஓடி வந்து நிற்கும் அனைத்து குழந்தைகளையும் மகிழ்ச்சியில் கட்டியணைத்து முத்தமிட்டு ஆர்வமூட்டுபவர்களாக அண்ணலார் இருந்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) என்ற நபிதோழர் சொல்கிறார்;.
ومرة تسابق مع عائشة فقالت: تسابقت أنا ورسول الله فسبقته، فلما ركبني اللحم سبقني، فقال:ياعائشة هذه بتلك تعادل
பெருமானருக்கும், மனைவியான ஆயிஷா (ரலி) இருவருக்குமிடையே ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் ஒருமுறை நாயகமும், மற்றொரு முறை ஆயிஷா அவர்களும் பெற்றிப் பெற்றார்கள்.
• குதிரை பந்தயமும், ஓட்டகப் பந்தயமும்:
ففي حديث أبو هريرة، أن النبي قال: 'لا سبق إلا في خُفِ أو حافر أو نصل'. (سنن أبو داوود، كتاب الجهاد، باب السبق.)
நடைபெற்ற குதிரை பந்தயத்தில் தான் வெற்றிப்றெ;றதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வெகு மதிகளும் வழங்கப்பட்டது.
• மல்யுத்தம்:
وَعَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ رُكَانَةُ : أَنَّ رُكَانَةُ صَارَعَ النَّبِيَّ ? فَصَرَعَهُ النَّبِيُّ ? . رَوَاهُ أَبُو دَاوُد
பலத்தை மட்டும் வெளிப்படுத்தும் N;நாக்கில் நட்புறவோடு மல்யுத்தப் போட்டிகள் பெருமானார் காலத்தில் நடைபெற்றது. மதீனாவின் யாரும் எளிதில் சாய்த்;திட முடியாத பலம்வாய்ந்த மல்யுத்த வீரராக இருந்த ருகானா இப்னு ஜைது என்பவரோடு பெருமானார் (ஸல்) அவர்கள் மல்யுத்தம் செய்து வெற்றிப் பெற்றார்கள்.
• வீர வாள் விளையாட்டு:
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ ? بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ فَأَهْوَى إلَى الْحَصْبَاءِ فَحَصَبَهُمْ بِهَا فَقَالَ رَسُولُ اللهِ ? : « دَعْهُمْ يَا عُمَرُ. مُتَّفَقٌ عَلَيْهِ
நாயகம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்குள் வந்த போது மனதில் ஏற்ப்பட்ட மகிழ்ச்சியில் வீர வாள் விளையாட்டு நடைபெற்றது. அதை தடுக்கச் சென்ற உமர் அவர்களிடம் உமரே விளையாடட்டும் விட்டுவிடுங்கள் என நாயகம் சொன்னார்கள்.
• பளுதூக்குதல்:
கனமான கற்களை வைத்து பளுதூக்குகின்ற முறைக்கு 'அர்ருப்ஹ்' என்று அரபுலகில் அழைக்கப்பட்டது. பளுதூக்குதலில் பிரசித்தப் பெற்றவர்களாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்சாரி என்ற நபிதோழர் இருந்தார்கள்.
பல பேர் சேர்ந்தாலும் தூக்கிட முடியாத கைபர் கோட்டையின் கதவுகளை ஹஜ்ரத் அலி ஒருவரே தூக்கினார்கள் என்பது அவர்களின் பலத்தையும், பளுதூக்குதலையும் நமக்கு காட்டுகிறது.
• நீச்சல், அம்பு எய்தல்:
وورد عن رسول الله صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم علموا أبنائكم السباحة والرماية، ونعم لهو المؤمنة في بيتها المغزل، وإذا دعاك أبواك فأجب أمك
குழந்தைகளுக்கு நீச்சலையும், அம்பு எறிதலையும் கற்றுக் கொடுங்கள் என அண்ணலார் அவர்கள் சொன்னார்கள்.
இப்படி பல்வேறு விதமான விளையாட்டுகள் விளையாட்டப்பட்டன. என்றாலும் அனைத்து விளையாட்டுகளும், போட்டிகளும் பலத்தையையும், திறமையையும் மையப்படுத்தியே நடைபெற்றது என்பதை தெளிவாக புரிய வேண்டும்.
• தாயம் விளையாடுவது தடுக்கப்பட்டது:
« مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ » قَالَ النَّوَوِيُّ : النَّرْدَشِيرُ هُوَ النَّرْدُ عَجَمِيٌّ مُعَرَّبٌ ، وَشِيرُ مَعْنَاهُ حُلْوٌ . وَقِيلَ : هُوَ خَشَبَةٌ قَصِيرَةٌ ذَاتُ فُصُوصٍ يُلْعَبُ بِهَا وَهَذَا الْحَدِيثُ حُجَّةٌ لِلشَّافِعِيِّ وَالْجُمْهُورِ فِي تَحْرِيمِ اللَّعِبِ بِالنَّرْدِ .
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ : أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ أَحَداً مِنْ أَهْلِهِ يَلْعَبُ بِالنَّرْدِ ضَرَبَهُ وَكَسَرَهَا
• சூதாட்டம் தடுக்கப்பட்டது:
இறைசிந்தனையை விட்டுத் தூரப்படுத்தும் அளவிலான விளையாட்டும், போட்டிகளும் சற்று குறைத்து கொள்வது அவசியமாகும். அதேபோல் பொதுவாகவும், விளையாட்டு போட்டிகளின் வெற்றியின் பேரிலும் நடைபெறும் சூதாட்டத்தை இஸ்லாம் தடுக்கிறது. காரணம் சூதாட்டம் ஷைத்தானின் செயல்களில் மிககேடு கெட்டதாகும். அவற்றை விட்டுவிடுவதில் தான் உண்மையான வெற்றி உள்ளது என குர்ஆன் வழியாக இஸ்லாம் உலகுக்கு சொல்கிறது.
'உடலை உறுதி செய்' - இன்று அனைவருக்கமான மந்திரச் சொல் இது. ஏனென்றால் எல்லா நோய்களின் தாக்கமும், அதன் வீரியமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் மூலம் நம்; கட்டுக்குள் வருகிறது என்கிறது இன்றைய மருத்துவத்தின் ஆராய்ச்சி முடிவுகள்;. இது உண்மையும் தானே.
அதனால் தான் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஆரோக்கியமிகு உணவுகளோடு வயதிற்கேற்ற உடற்பயிற்சியும், விளையாட்டும் சிறப்பானதொரு மருந்தாக இன்று பரிந்துரைக்கப்படுகிறது
முழுமையான உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதைவிட மிக அவசியமாய் நமக்கெல்லாம் தேவைப்படுவது உறுதியான மனமும் திடமான உள்ளமும் தான்;.
விளையாட்டால் உடலையும், இறை தியானத்தால் உள்ளத்தையும் வலிமையாக்குவோம்.
No comments:
Post a Comment