மனித குலத்திடம் இருக்க வேண்டிய சிறந்த குணம். இறைநேசர்கள் மிக உயர்ந்த குணம். இன்றைய காலத்தில் நம்மிடம் இருந்தது என்றால் நிச்சயம் நமக்கு மத்தியில் எந்த வித குழப்பமோ கஷ்டமோ மன சஞ்சலங்களோ ஏற்படாது என்பது தான் உண்மை.
அதற்கு மனிதன் தன்னுடைய உண்மை நிலையை அறிய வேண்டும்.அதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள் :
أولك نُطفة مَذرة، وآخرك جيفة قذرة، وأنت بين ذلك تَحمل العَذرة.
உன்னுடைய ஆரம்பம் எது தெரியுமா ? நாற்றம் உடைய விந்து துளி, உன்னுடைய முடிவு எது தெரியுமா ? நாற்றம் உடைய பிணம், அதற்கு மத்தியில் தன உன்னுடைய வாழ்வு. அதிலும் நாற்றம் உடைய மலத்தை தான் உன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று.
ஆம் ! அந்த இரு நாற்றத்திற்கும் மத்தியில் தான் நம்முடைய வாழ்வு. அதுவும் மலத்தை சுமந்து கொண்டு. அதன் அளவு நம்முடைய வயிற்றில் குறைந்தது என்றாலும், அதிகமானது என்றாலும், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. அது இருந்தால் தான் உடல் நலத்துடன் வாழ முடியும்.
அல்லாஹு தஆலா கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை :
حيث أمر الله تعالى به نبيه صلى الله عليه وسلم فقال عز وجل:
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவைகளின் பக்கம் நீங்கள் உங்கள் இரு கண்களையும் நீட்டாதீர்கள்; நீங்கள் இவர்களுக்காக கவலையும் படாதீர்கள். எனினும், நீங்கள்நம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள்.. (15:88.)
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும், இதனை ஸஹாபாக்களுக்கு மத்தியிலும் வலியுறுத்தினார்கள்.
وقد حث النبي صلى الله عليه وسلم على التحلي بالتواضع فقال صلى الله عليه وسلم :« إن الله أوحى إلي أن تواضعوا، حتى لا يفخر أحد على أحد، ولا يبغي أحد على أحد».
வலிமார்கள் குணம் :
அல்லாஹு தஆலா இறை நேசர்களின் குணத்தை புகழ்ந்து கூறும்பொழுது, பணிவை தான் முதலில் குறிப்பிடுகிறான்.
مدحهم الله عز وجل بقوله:( وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما).
இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள். (25:63.)
பெற்றோரிடத்தில் பணிவு :
நாம் பிறருக்கு பணிவுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு முன்பு நம் பெற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும். அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! (17:24 )
ஏனென்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மற்ற எல்லா மக்களை காட்டிலும், தந்தையை காட்டிலும், தாயை தான் முற்படுத்தினார்கள்.
حديث أبي هريرة قال: جاء رجل إلى رسول الله ﷺ فقال: يا رسول الله، من أحق الناس بحسن صحابتي؟ -يعني: صحبتي، قال: أمك قال: ثم من؟ قال: أمك، قال: ثم من؟ قال: أمك، قال: ثم من؟ قال: أبوك[1]. متفق عليه.
وفي رواية: يا رسول الله، من أحق بحسن الصحبة؟، قال: أمك، ثم أمك، ثم أمك، ثم أباك، ثم أدناك أدناك
இதனை நினைவில் கொள்ள வேண்டும் :
நாம் என்ன தன சிறந்த உயர்ந்த கோத்திரத்தையும், செல்வத்திலும் செழிப்பிலும் உயர்ந்தவராக இருத்தலும், பிறரை தாழ்வாக நினைக்க கூடாது. என்றுமே, அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே.
( يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير)
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 49:13
எனவே அல்லாஹ் நம்மை அவனுக்கு விருப்பமுள்ள பிரியமானவர்களான வலிமார்களை நேசிக்கும் கூட்டத்தில் ஆக்கியருள்வானாக ! ஆமீன்.
No comments:
Post a Comment