அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 7 November 2013

அந்த நாள்.....




அருளிரங்கும் ஆஷீரா

           ஆஷீரா என்ற வார்த்தையின் பொருள் பத்தாவது என்பதாகும். இது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளை குறிப்பதால் இதற்கு ஆஷுரா என்று சொல்லப்படுகிறது. இந்த நாள் நமது மார்க்கத்தில் மிக முக்கியமான ஒரு நாளாக கருதப்படவேண்டும். காரணம் இது நமக்கு மட்டுமல்ல அல்ல நமக்கு முன் உள்ள எல்லா சமுதாயத்திற்கும் இந்த நாள் ஒரு முக்கிய நாளாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டும் வந்தது.


ஆஷீரா நாளில் நடந்த அற்புதங்களும் வரலாற்று சம்பவங்களும்


பத்தாம் நாளின் முதல்வர்
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டு சொர்கத்தில் இருந்தார்கள். ஆனால் இப்லீஸின் சூழ்ச்சியால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட சறுகுதலின் காரணமாக அல்லாஹ் அவர்களையும் அவர்களின் துணைவி ஹவ்வா அம்மையார் அவர்களையும் பூமிக்கு அனுப்பினான்.
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த தவறுக்காக அல்லாஹ்விடம் பல காலம் தவ்பா செய்தார்கள். அவர்களின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் இந்த ஆஷுரா தினம் வெள்ளிக்கிழமை ஆகும்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37)البقرة
وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة   -  قرطبي  1324 
(தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்ட) அந்த நாள் வெள்ளிக்கிழமை ஆஷுராவின் நாளில் தான்.
ஆதாரம் : தப்ஸுர் குர்துபி பாகம் 1 பக்கம் : 324


கப்பலோட்டிய நபியும் கரைசேர்கப்பட்ட மக்களும்
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு ஏகத்துவ இறை செய்தியையும் கொள்கையையும் எடுத்து சொன்ன போது மக்களில் பலர் அதை ஏற்க மறுத்தார்கள். சொற்ப நபர்கள் மட்டுமே அவர்களை கொண்டு ஈமான் கொண்டார்கள். இறைவனிடம் அவர்கள் துஆ செய்தார்கள். பூமியில் காபிர்களை விட்டுவைக்க வேண்டாம் அவர்கள் வரம்புமீறி வழிகேட்டிலும் வழிகெடுப்பதிலும் விரைவார்கள் என்று முறையிட்டார்கள்.
அல்லாஹ் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு கப்பலை செய்ய சொல்லி அதில் அனைத்து முஸ்லிம்களையும் ஏற கட்டiயிடுகிறான். அனைத்து உயிரிகளிலும் ஒரு ஜோடியை நபி அவர்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் உத்திரவின் படி மழை பொழிந்தது. கடுமையான மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. கப்பலில் உள்ள முஸ்லிம்களை தவிர அனைத்து மக்களும் அந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். காபிரான நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் தான். ஆறு மாதங்களுக்கு பின் அந்த கப்பல் ஜுத் என சொல்லப்படும் ஒரு மலையின் மீது கரை இறங்கியது.
அந்த கரையிறங்கிய நாள் ஆஷுராவின் நாள்.


குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
 وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الأمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ
(44)(سورة هود)
பின்னர் 'பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடுஇ வானமே (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்' என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய ) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) ஜுதி (என்னும); மலையில் தங்கியது. அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது.
  - 18187حدثنا عباد بن يعقوب الأسدي قال، حدثنا المحاربي، عن عثمان بن مطر، عن عبد العزيز بن عبد الغفور، عن أبيه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: في أول يوم من رجب ركب نوح السفينة، فصام هو وجميع من معه، وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله. تفسير الطبري ஸ்ரீ جامع البيان ت شاكر 15335
நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்' ரஜப் மாதத்தின் முதல் நாளில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் பயனித்தது. நபியும் நபியுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். ஆறு மாதம் பயனித்தது. பின் முஹர்ரம் மாதத்தில் ஆஷீரா நாளில் (பத்தாவது நாளில் )அது கரை ஒதுங்கியது. நூஹ் நபி அவர்கள் நோன்பு வைத்தார்கள். அவர்களுடன் இருந்தவர்களையும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நோன்பு வைக்க ஏவினார்கள் '
ஆதாரம் : தப்ஸீர் தபரீ பாகம் 15 பக்கம் 335 எண்:18187



வேதனைகள் நீங்கிய தினம்
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு கூட்டத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அக்கூட்டம் மூஸில் என்ற பகுதியில் நீனவா என்ற இடத்தில் வாழ்பவர்கள். நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அம்மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். ஆனால் அம்மக்கள் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அம்மக்களுக்கு வேதனை இறங்கும் என்ற வஹி வந்தது. மூன்று நாள் கழித்து அவர்களுக்கு வேதனை வரும் என்று நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.
 இதை கேட்ட மக்கள் கொஞ்சம் பயந்தாலும், சிலர் சொன்னார்கள். 'இது வரை இவர் (நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) பொய் சொன்னதில்லை. மூன்று நாள் காத்திருப்போம். வேதனை இறங்கும் என்று சொன்ன இரவில் இவர் (நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) நம்மோடு தங்கினால் நமக்கு கவலை இல்லை. வேதனை வராது. அந்த இரவு இவர் (நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) நம்மோடு தங்கவில்லை என்றால் கட்டாயம் மறுநாள் காலை வேதனை இறங்கும் என முடிவுசெய்தார்கள்'.
அந்த நாள் வந்தது. அந்த இரவு நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வூரை விட்டும் கிளம்பினார்கள். மறுநாள் விடிந்தது. வேதனை அவர்களை சூழ்ந்தது. வானம் கருத்தது. நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காணவில்லை. மக்கள் வேதனை வந்துவிட்டது என்று பயந்து நடுங்கத்தொடங்கினார்கள்.
வீர வசனம் பேசிய ஆண்கள் பயந்து நடுங்கி தங்கள் குழந்தைகள் பெண்கள் கால்நடைகள் அனைவர்களையும் அழைத்துகொண்டு முடியாலான பங்கறை ஆடைகளை உடுத்திக்கொண்டு மனத்தூய்மையுடன் அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ செய்தார்கள். அவர்களின் அழுகை அல்லாஹ்விடத்திலிருந்து தவ்பாவை பெற்று தந்தது.
ஆதாரம் : சிராஜுல் முனீர் பாகம்:2 பக்கம் 38
இவர்களின் வேதனை நீங்கிய இந்த நாள் ஆஷுராவின் நாள்.
روي عن ابن مسعود وغيره: أنّ قوم يونس كانوا بأرض نينوى من أرض الموصل، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام، يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له: إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً، فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء، وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم.
فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم، فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب: غامت السماء غيماً عظيماً، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم، فلما رأوا ذلك أيقنوا بالهلاك، فطلبوا يونس بينهم فلم يجدوه، وقذف الله تعالى في قلوبهم التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح، وأظهروا الإيمان والتوبة، وأخلصوا النية، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض، وعلت أصواتها واختلطت بأصواتهم، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام، فرحمهم الله تعالى، واستجاب دعاءهم،  - السراج المنير في الإعانة على معرفة بعض معاني كلام ربنا الحكيم الخبير 238

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
قال الله تعالي فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آَمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آَمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ سورة يونس(98)
தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும் நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸ் உடைய மக்களைப் போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம் 



யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளும் ஆஷுராவும்
நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை தான் நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவர்களுக்கு பதினொறு பிள்ளைகள். ஆனால் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது அதிகம் பிரியம் வைத்திருந்தார்கள். இது ஏனைய பதினொறு சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. எனவே நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவயதாக இருந்தபோது அவர்களை கிணற்றில் தள்ளினார்கள்;. ஆனால் அல்லாஹ் தன் நபியை பாதுகாத்துவிட்டான்.
இதனால் நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடுமையான கவலையடைந்தார்கள். பின்னொரு காலத்தில் இந்த கவலையின் காரணமாக நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண் பார்வை மழுங்கிவிட்டது. இத்தகைய சிறமத்தை தந்துவிட்டோம் என்று அந்த பதினொறு நபர்கள் மனம் வருந்தி தங்களின் தந்தையான நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பாவமன்னிப்பு கோரச்சொல்லி கேட்டுக்கொண்டார்கள். அதற்கு நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சற்று தாமதித்து வேறொரு நேரத்தில் கேட்பதாக சொன்னார்கள். அந்த நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை சஹ்ருடைய நேரம்.
அந்த நாள் ஆஷீராவின் நாள்.
)قالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي) قَالَ ابْنُ عَبَّاسٍ: أَخَّرَ دُعَاءَهُ إِلَى السَّحَرِ. وَقَالَ الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ طَاوُسٍ قَالَ: سَحَرُ لَيْلَةِ الْجُمْعَةِ، وَوَافَقَ ذَلِكَ لَيْلَةَ عَاشُورَاءَ.  تفسير القرطبي 9262
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் சொல்கிறார்கள்'(யஃகூப் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் துஆவை சஹ்ரு நேரம் வரை பிற்படுத்தினார்கள்'. தாவூஸ் சொல்கிறார்கள் 'அது வெள்ளிக்கிழமை சஹ்ருடைய நேரம் ஆஷீராவின் இரவு'

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான
قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ-قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(يوسف9897இ)
(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) 'எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள பெரும் தவறிழைத்துவிட்டோம்' என்று (அவர்களே) கூறினார்கள்.

ஆஷீராவில் பதுங்கிய பாம்பு
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை எடுத்து சொல்லி பிர்அவ்னை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். ஆனால் அவன் ஏற்க மறுத்துவிட்டான்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை ஒரு சூனியக்காரனாக சித்தரித்தான். தன்னிடம் உள்ள சூனியக்காரர்களை வைத்த அவர்களை விரட்ட திட்டமிட்டு, அவன் நாட்டில் இருந்த பெரிய சூனியக்காரர்களை அழைத்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பயமுறுத்த ஏற்பாடுசெய்தான்.
அந்த சூனியக்காரர்கள் தங்களிடம் இருந்த சூனியங்களை வித்தைகளை அவிழ்த்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னான் 'பயப்படாதீர்கள் நிச்சயம் நீங்கள் உயர்ந்தவர்கள்.'. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கையில் இருக்கும் தடியை அல்லாஹ் கீழே போட சொன்னான். அது பாம்பாக மாறி அந்த சூனியக்காரர்களின் சூனியத்தை அது விழுங்கியது. யாராலும் வெல்ல முடியாத சூனியத்தை வென்ற இம்மனிதர் நிச்சயம் சாதாரன மனிதராக இருக்கமுடியாது என விளங்கி பலரும் அந்த நாளில் இஸ்லாத்திற்கு வந்தார்கள்.
இந்த செய்தி தாஹா 20 சூராவில் 53 70 வசனம் வரையிலும் வருகின்றது.
அந்த நாள் ஆஷுராவின் நாள்.
قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: فَحَدَّثَنِي ابْنُ عباس أن يوم الزينة اليوم الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ وَالسَّحَرَةِ هُوَ يَوْمُ عَاشُورَاءَ.
تفسير ابن كثير ط العلمية 5255
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் சொன்னார்கள் 'பிர்அவ்னையும் சூனியக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை தந்த தினம் ஆஷுராவின் நாள் '
ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5 பக்கம் 255

கடல் கொந்தளிப்பு; தினம்
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் ஏகத்துவ பிரச்சாரத்தை எடுத்து சொன்னபோது பிர்அவ்ன் மூலமாக எண்ணிலடங்கா துன்பங்கள் வந்தது. அவர்களை ஈமான் கொண்ட பனு இஸ்ராயீல் மக்களும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அடிமையாக நடத்தப்பட்டார்கள்.
பிர்அவ்னின் தொல்லைகளை சகித்துகொள்ள முடியாத மக்களை அல்லாஹ் அந்நாட்டை விட்டும் வேறொரு நாட்டிற்கு செல்லச் சொன்னான். இதை அறிந்த பிர்அவ்ன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களை ஈமான் கொண்ட பனு இஸ்ராயீல் கூட்டத்தையும் அழிக்க நினைத்து பெரும் படை திரட்டி கிளம்பினான். கடல் சங்கமிக்கும் இடத்திற்கு மக்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் ஆணைப்படி கடல் பிளந்து அதற்கிடையில் ஒரு பாதை தோன்றியது. அதில் ஈமான் கொண்ட மக்களுடன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றார்கள்.
பின் தொடர்ந்து வந்த பிர்அவ்னும் அவனின் படையும் கடலுக்கிடையில் அமைந்த அந்த பாதையில் அவர்களை விரட்டிச்சென்றார்கள். பிர்அவ்னின் எல்லாப் படைகளும் கடலுக்குள் வந்து விட்ட பிறகு அல்லாஹ் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி பிர்அவ்னின் மொத்த படையையும் அழித்தான்.
அந்த நாள் ஆஷுராவின் நாள்.
- 2004حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَرَأَى اليَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: «مَا هَذَا؟» ، قَالُوا: هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى، قَالَ: «فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ» ، فَصَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ
صحيح البخاري 344
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் சொல்கிறார்கள் 'நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு வைத்தார்கள். அதற்கு நபி அவர்கள் 'இது என்ன?' என கேட்டார்கள். யூதர்கள் சொன்னார்கள் 'இது நல்ல நாள் இந்நாளில் அல்லாஹ் பனு இஸ்ராயீல் மக்களை எதிரிகளை விட்டும் பாதுகாத்தான். எனவே இந்நாளில் நபி மூஸா அலைஹி ஸலாம அவர்கள் நோன்பு வைத்தார்கள்'. அதற்கு பெருமானார் சொன்னார்கள் 'உங்களை காட்டிலும் மூஸாவிற்கு நாங்கள் தான் ஏற்றமானவர்கள்.' எனவே தானும் நோன்பு வைத்து (மற்றவர்களையும்) நோன்பு வைக்க ஏவினார்கள்.
ஆதாரம்: புகாரி பாகம் 3 பக்கம் 44

ஆஷீராவில் அல்லாஹ்வுடன் உரையாடல்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தூரு ஸீனா என்ற மலைக்கு அழைத்திருந்தான். அதற்காக அவர்கள் முப்பது நாள் நோன்பு வைத்து விட்டு வர சொன்னான். ஆனால் அவர்கள் நோன்பு வைத்த பின் அல்லாஹ்வை சந்திக்க செல்ல சுத்தமாக இருக்கவேண்டும் என நினைத்து நோன்பின் மூலம் ஏற்பட்ட வாய் வாடையை சுத்தம் செய்துவிட்டு சென்றார்கள். ஆகவே மீண்டும் பத்து நாள் நோன்பு வைத்துவிட்டு அல்லாஹ் வரச்சொல்லி அவர்களிடம் நாற்பதாவது நாள் தூரு ஸினா என்ற மலையில் பேசினான்.
அந்த நாள் ஆஷுராவின் நாள்.


குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً الأعراف: 142
'மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து இரவுகளைச் சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று'. அஃராப் 142
ويقال: ثلاثين من ذي الحجة وعشر من المحرم. والمناجاة في يوم عاشوراء  - تفسير السمرقندي ஸ்ரீ بحر العلوم 1547
தப்ஸீர் சமர்கன்தீ என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூலில் அல்லாஹ்விடம் உரையாடிய அந்த நாள் ஆஷீராவின் நாள் என்று சொல்லப்படுகிற ஒரு கருத்தை பதிவுசெய்திருக்கிறார்கள்.
பாகம் 1 பக்கம் 547

வானிற்கு உயர்தப்பட்ட நாள்
நபி ஈஸா அலைஹி ஸலாம் அவர்களை எதிரிகள் கொள்ள வரும்போது அல்லாஹ் அவர்களை வானத்திற்கு உயர்தினான்.
அந்த நாள் ஆஷுராவின் நாள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ
அன்றி, 'அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் சிலுவையில் அறைந்து கொலை செய்து விட்டோம் ' என்று அவர்கள் கூறியதனாலும் அவர்களசை; சபித்தோம். அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை.
(அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற் குள்ளாக்கப்பட்டு விட்டனர். சூரா: 4 நிஸா  ஆயத் 157
மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158)
எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
சூரா: 4 நிஸா 158 ஆயத்து
وقال الضحاك: رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء. تفسير السمرقندي ஸ்ரீ بحر العلوم 1355
நபி ஈஸா அலைஹி ஸலாம் அவர்கள் உயர்த்தப்பட்ட தினம் ஆஷீரா நாளில் மக்ரிபுக்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரம் என்று திருகுர்ஆன் விரிவுரையாளர் இமாம் லஹ்ஹாக் அவர்கள் கூறுவதாக குறிப்பிடுகிறார்கள்.
நூல் : தப்ஸீர் சமர்கன்தி பாகம் 1 பக்கம் 355.











ஆஷீரா நாளின் அமல்கள்

பொதுவாக இஸ்லாத்தில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான். நாட்களில் நேரங்களில் துர்குறியை பார்க்கிற வழக்கம் இஸ்லாத்தில் இல்லை. ஆனால் இஸ்லாத்தில் நல்ல நேரம் நல்ல நாட்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கெட்ட சகுணஙகள் நேரங்கள் இல்லையே ஒழிய நல்ல நேரங்கள் நாட்கள் என்று இஸ்லாத்தில் உண்டு. உதாரணமாக லைலதுல் கத்ரு இரவு, ஜும்மா நாள், ரமளான் மாதம் போன்றவைகள்.
இந்த ஆஷீராவின் நாளில் நாம் செய்யவேண்டிய அமல்கள் என்ன என்பதை பார்ப்பதற்கு முன் பெருமானார் நமக்கு எந்த நல்ல காரியத்தை சொல்லி தந்தார்கள் என பார்ப்போம்.
  - 2006حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ، يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ
صحيح البخاري 344
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹீ அவர்கள் கூறுகிறார்கள்' நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷீரா நாள் மற்றும் ரமளான் மாத நோன்புகளில் அதிக ஆர்வமாக நோன்பு வைப்பவராக இருந்தார்கள்.'
நூல் : புகாரி பாகம் 3 பக்கம் 44 எண்: 2006
 - 1134 وحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ: حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صحيح مسلم 2797
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹீ அவர்கள் கூறுகிறார்கள்' நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷீரா நாளில் நோன்பு வைத்து மற்றவர்களை நோன்பு வைக்க ஏவினார்கள். அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் 'யா ரஸீலல்லாஹீ இது கிறுத்துவர்களும் யூதர்கள் கண்ணியப்படுத்தும் நாள்'. அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'வரும் வருடம் இன்ஷா அல்லாஹ் ஒன்பதாவது நாள் நான் நோன்பு வைப்பேன்'. ஆனால் வரும் வருடத்தில் பெருமானார் இந்த உலகை விட்டும் மறைந்துவிட்டார்கள்.'

குடும்பத்திற்கு செலவு செய்தலில் பரகத்
 - 10007 حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو عُبَيْدَةَ الْعَسْكَرِيُّ، ثنا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْبَزَّازُ، ثنا الْهَيْثَمُ بْنُ الشَّدَّاخِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَلْ فِي سَعَةٍ سَائِرَ سَنَتِهِ     -   المعجم الكبير للطبراني 1077
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்' ;யார் ஆஷீரா நாளில் தன் குடும்பத்தார்களுக்கும், தன் பிள்ளைகளுக்கும் தாராளமாக செலவு செய்கிறார்களோ அவர் ஏனைய வருடம் முழுக்க செழிப்பாக இருப்பார்'
ஆதாரம்: தப்ரானி பாகம்: 10 பக்கம் 77 எண் 10007

ஆஷீராவின் நோன்பு சுன்னத்தான நோன்பு என நினைத்து அதை விட்டுவிடுவது பெரும் இழப்புதான். காரணம் பெருமானார் அவர்கள் இந்த நோன்புக்கு அதிகம் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். மேலும் அறியாமை காலத்தில் வாழ்ந்த குரைஷீகள் உட்பட இந்த நோன்பை வைப்பவர்களாக இருந்தார்கள்.
  - 2002      حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَه    -  صحيح البخاري 344
ஆயிஷா ரலியல்லாஹீ அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் 'அறியாமை காலத்தில் குறைஷிகள் ஆஷீரா நாளில் நோன்பு வைப்பவராக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஹல்லம் அவர்களும் நோன்பு வைப்பவராக இருந்தார்கள். மதீனாவிற்கு வந்த போது தாங்களும் நோன்பு வைத்து மற்றவர்களையும் நோன்பு வைக்க ஏவினார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷீரா நாளை (கடமையாக செய்வதை)விட்டுவிட்டார்கள். யார் விரும்புகிறாரோ அவர் வைக்கட்டும் யார் விரும்புகிறாரோ அவர் (நோன்பை) விட்டுகொள்ளட்டும். (என்றார்கள்)'
قالت عائشة : وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الكَعْبَةُ    صحيح البخاري 2148
ஆயிஷா ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் கூறினார்கள்' இந்த நாளில் (ஆஷீராவில்) தான் கஃபாவிற்கு புது துணி அணிவிக்கப்படும்'
இந்த அளவிற்கு குறைஷிகளும் அறியாமை காலத்திலும் இந்த நாளிற்கு முக்கியத்துவம் தந்தார்கள்.
முஸ்லிம்காளாகிய நாம் இந்த நாளை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை நினைத்துபார்க்க வேண்டும்.
ஆஷீரா நோன்பை முடிந்த வரை முஹர்ரம் மாதம் 9 , 10 வது நாளில் வைக்க வேண்டும். முடியாத சூழ்நிலையில் 10 , 11 வது நாளில் வைக்கலாம்.
كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري، وكان الزهري يقول        (( رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت ))، ونص أحمد على أنه يصام عاشوراء في السفر.لطائف:121ஸ.
ஆஷீரா நோன்பின் முக்கியத்துவததை கருதி சில முன்னோர்கள் இந்த நோன்பை பிரயானத்திலும் வைத்திருக்கிறார்கள். அவர்களில் இப்னு அப்பாஸ் , அபூ இஸ்ஹாக் , ஜீஹ்ரி போன்றோர்கள்.
ரமளானின் கடமையான நோன்பை கூட நாம் பிரயானத்தில் இருக்கும்போது விட்டுவிட குர்ஆனில் அனுமதி உண்டு. ஆனால் ஆஷீரா நோன்பிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
இமாம் ஜுஹ்ரி அவர்கள் கூறுகிறார்கள்' ரமளான் நோன்பு தப்பிவிட்டால் மற்ற நாளில் வைத்து கொள்ளலாம் (அல்லாஹ் அதற்கு பகரத்தை தந்திருக்கிறான் ஆனால்) ஆஷீரா நோன்பு தப்பிவிட்டால் (அதற்கு மாற்று நாள் கிடையாது)'

குழந்தைகளையும் இந்த நோன்பை வைக்க சொல்லலாம்
1960 حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ» ، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَار           -    صحيح البخاري 337
ருபை பின்து முஅவ்வித் என்ற ஸஹாபி பெண்மனி கூறுகிறார்கள்' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷீரா நாளின் காலையில் அன்சாரி தோழர்களின் கிராமங்களுக்கு (தூதுவர்களை) அனுப்பினார்கள். யார் இந்த நாளில் நோன்பு வைக்கவில்லையோ அவர் அந்த நாள் முழுக்க அவ்வாறே இருக்கட்டும். யார் நோன்பு வைத்தார்களோ அவர் அந்நோன்பை (தொடர்ந்து) வைக்கவும். ' அப்பெண்மனி கூறுகிறார்கள் 'அதன் பின் நாங்களும் நோன்பு வைப்போம் எங்கள் குழந்தைகளையும் நோன்பு வைக்க செய்வோம் மேலும் (நோன்பின் சிரமம் தெரியாமல் இருக்க) அவர்களுக்கு (கம்பளி துணி அல்லது பஞ்சாலான) விளையாட்டு பொருட்களை கொடுப்போம். அச்சிறுவர்கள் உணவு வேண்டும் என அழுதால் அவர்களுக்கு உணவு கொடுப்போம்'
ஆதாரம் : புகாரி பாகம் 3 பக்கம் 37 எண்:1960
இது போக இந்த நாளில் விரும்பியவர்கள் நபிலான நல்ல காரியங்கள் செய்து கொள்ளலாம். அதில் எந்த வரையறையும் இல்லை. குறிப்பிட்ட இந்த சில காரியங்களை தான் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் புதிதாக வரையறுத்து யாரும் கட்டாயப்படுத்த முடியாது.


அந்த நாள்.....
   ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவம் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் பாதுகாக்கப்பட்ட நாள்.
   நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் ஒதுங்கி முஸ்லிம்கள் பாதுகாகப்பட்ட நாள்.
   நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டம் வேதனையை விட்டும் பாதுகாக்கப்பட்ட நாள்.
   யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாவமன்னிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நாள்.
   ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டு மக்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட நாள்.
   சூனியக்காரர்களின் சூழ்ச்சியை விட்டும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாதுகாக்கப்பட்ட நாள்.
   அல்லாஹ்வுடன் சம்பாஷனைக்கு ஒதுக்கப்பட்ட நாள்.
   பிர்அவ்னும் அவன் படைகளும் அழிக்கப்பட்ட நாள்.
   பிர்அவ்னின் கொடுமையை விட்டும் பனு இஸ்ராயீல் பாதுகாக்கப்பட்ட நாள்.
   நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரக நெருப்பை விட்டும் பாதுகாக்கப்பட்ட நாளா???...............!

No comments: