அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 18 April 2013

ஊர்மானமத்தை கப்பலேற்றும் ஐநாவின் தீர்மானம்!

கடந்த மார்ச் 4-15இல் ஐநா சபையின் பெண்களுக்கான ஆணையம்(Commission On the Status of Women-CSW 57) ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’(Elimination and prevention of all forms of violence against women and girls) என்ற பெயரில் ஓர் தீர்மானத்தை வெளியிட்டு அரபு நாடுகளில்  சர்ச்சையை கிளப்பியது. வழக்கம் போல் ஊடகங்களின் இருட்டடிப்பால், ஒரு சார்பு போக்கால் இந்தியா போன்ற முஸ்லிம்கள் குறைவாக வாழுகிற பகுதிகளில் செய்தி என்னவென்றே தெரியவில்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்மையை பாழ்படுத்துகிற 9அம்ச தீர்மானத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது. முழுக்க முழுக்க மேற்கத்திய அநாச்சாரத்தை விதைப்பதற்கு தொடுக்கப்பட்டுள்ள முயற்சியே இந்த தீர்மானம். ஒரு பக்கம் நாகரீகத்தையும், பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் முகமாகவே இத்தீர்மானம் அமைந்திருந்தாலும் மறுபக்கம் இது இஸ்லாத்தை குறிவைத்து தொடுக்கப்படுள்ள தீர்மானமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பலமாக கிளப்புகிறது. ஆறு அறிவு படைத்த மனிதனின் சிந்தையில் இப்படியோரு களிசடைகளும் உதிக்குமோ என்று விந்தையாக இருக்கின்றது. சரி அப்படி என்னதான் அந்த தீர்மானம் ஒப்பாரி வைக்கிறது என்று நினைக்கிறீர்களா... இதோ
.
ஐநாவின் நாசகர தீர்மானங்கள்

1. இளம்பெண்களுக்கு முழுப் பாலினச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்; ஒரு பெண் பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும். 




2. பருவ வயதை நெருங்கும் சிறுமிகளுக்குக் கர்ப்பத் தடை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் கருக்கலைப்புக்கு அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலின மற்றும் மகப்பேறு உரிமை (விரும்பினால் பிள்ளை பெறலாம்; இல்லையேல் கலைக்கலாம் எனும் உரிமை) வழங்கல் வேண்டும். 


3. ஆசை நாயகியையும் மனைவிக்குச் சமமாக நடத்த வேண்டும்; விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு, சட்டப்படி பிறந்த பிள்ளைகளுக்கு வழங்கும் எல்லா உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும். 

4. விலைமாதுகளுக்கு எல்லாவிதமான உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை வழங்கப்பட வேண்டும். விபசார விடுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

5. ஒரு பெண், தன்னை தன் கணவன் கற்பழித்ததாகவும் தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு உரிமை உண்டு. அப்போது, அந்நியப் பெண்மீது பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தண்டனையோ அதே தண்டனை கணவனுக்கும் வழங்கப்பட வேண்டும். 

6. ஆண்-பெண் இடையே பாகப்பிரிவினைச் சட்டத்தில் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும். 

7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தாமேற்கொள்ளல், ‘வலீயை ஏற்படுத்தல், ‘மஹ்ர்அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும். 

8. மணவிலக்கு (தலாக்) அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். தலாக்ஆனபின் எல்லா சொத்துகளையும் இருவரிடையே பங்கிட வேண்டும். 

9. ஒரு பெண், கணவனின் அனுமதியின்றியே வெளியே செல்லலாம்; பயணம் போகலாம்; வேலைக்குச் செல்லலாம்; கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

இப்படி அறிவுக்குபொருந்தாத சொல்லுவதற்கே நாகூசுகிற  நய்யாண்டித்தனம் நிறைந்த தீர்மானத்தை தான் ஐநா நிறைவேற்றியுள்ளது. இதனை இஸ்லாத்திற்கு எதிரான தீர்மானம் என்று மட்டும் பார்க்காமல் நாகரிகமும், பண்பாடும் நிறைந்த சமுதாயங்களை நிர்வாணமாக்கும் தீர்மானம் என்று சொல்லலாம். நாகரிகம் நிறைந்த எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத அநாகரிகமான தீர்மானத்தை தான் இன்றைக்கு ஐநா நிறைவேற்றியுள்ளது. மானுடவியலுக்கு எதிராக விடுக்கப்பட்ட ஓர் அரைக்கூவல் இது. ஏன் வனாந்திரமான காடுகளில் வாழும் மலைவாழ் மக்களிடத்தில் குடிகொண்டிருக்கும் குடும்பவாழ்வில் கூட கலாச்சாரமும், நாகரிகமும் மிளிரும் ஆனால் ஐநாவின் தீர்மானத்தில் குடும்பவாழ்வும் சமூகபண்பாடுகளும் சாகடிக்கப்பட்டுவிட்டன. சிறுவயதிலியே சிறுமிகளுக்கு கருத்தடை செய்ய கற்றுத்தர வேண்டும், கருத்தடை செய்ய அனுமதியும் வழங்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது நல்வழியில் வார்த்தெடுக்கப்பட வேண்டிய வளரும் சமுதாயத்தை தவறான வழியில் செல்லுவதற்கு சாதகமாய் அமைந்துள்ளது. ஆசை நாயகிக்கு மனைவிக்குச் சமமான உரிமையை வழங்கியிருப்பது ஒட்டுமொத்த குடும்வாழ்வையும் குப்பையாக்கியதோடு, எய்ட்ஸின் வளர்ச்சி அசுர வேகத்தில் உயர்வதற்கு காரணமாக இருக்கும்.

தலாக், இத்தா, பலதாரமனம், பெண்கள் வேலைக்கு செல்லுதல், கணவனின் அனுமதியின்றி வெளியே செல்லுவது, மாற்று மதத்தவரை திருமணம் செய்துகொள்ளுதல் போன்றவைகள் முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கு எதிராய் நயவஞ்சகத்தனத்தோடு, இஸ்லாமிய வளர்ச்சியை பொருக்கமுடியாமல் தீட்டப்பட்டுள்ள தீர்மானங்களாகும்.

இத்தீர்மானங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் நாகரிகம், பண்பாடு, குடும்பவியல் செத்துப்போகும் என்பது மட்டுமல்ல 100ல் 70நபர்கள் தகப்பன் பெயர் தெரியாதவர்களாகவுள்ள இன்றைய மேற்கத்திய நாடுகளின் நிலை தான் அனைத்துலகிலும் ஏற்படும். தாயும் மகனும், தந்தையும் மகளும் உடலுறவு கொள்வதும் கூட உரிமை, பரவாயில்லை என்கின்ற நிலைக்கு நாளைய சமுதாயம் தள்ளப்படும். ஊரின் கடைகோடியில் எவருக்கும் தெரிந்துவிடுமோ என்று பயந்து பயந்து நடத்தப்படுகிற விபச்சார வடுதிகள் லைசன்ஸ் பெற்று நடு ரோட்டிற்கும், தெரு ஓரத்திற்கும் வந்துவிடும். இன்றைய சமுதாயத்தின் அடிநாதமான ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைமாறி எவரோடு எவரும் இருக்கலாம் எனஅற நிலை உருவாகும். பின்பு நாளைய சமுதாயம் நாகரிகம் என்ற வாடையை கூட நுகர்ந்தும் பார்க்காத சமுதாயமாகத்தான் ஒளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஓர் சமூகம் தனக்கே உரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் விட்டொழிக்கும்போதுதான் அச்சமுதாயம் உண்மையான தோல்வியை தழுவுகிறது என்பது கடந்தகால வரலாறுகள் நமக்கு கற்றுத்தருகிற பாடம்.

தொலைந்து போன ஜப்பானிய கலாச்சாரம்

ஜப்பானில் ஹிரோஷிமாவில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். இதனால் ஜப்பான் உலக அரங்கில் நினைத்துப்பார்த்திராத சரிவுக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளானது. மீண்டும் ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுக்குமா, மீண்டும் வல்லரசு நாட்டை எதிர்த்து நிற்கிற அளவிற்கு தன்னை மீட்டுருவாக்கம் செய்யுமா என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த வேலையில் ஜப்பான் தீராமுயற்ச்சியில் ஈடுபட்டது. தன்னுடைய இலக்கை அடைவதற்காக ஆண்களோடு பெண்களையும் களத்தில் இறக்கியது. தான் எதிர்பார்த்த மாதிரியே ஜப்பான் சில வருடங்களில் பொருதார வலிமை பெற்றதாகவும் தொழில் நுட்பத்தில் சிறந்ததாகவும்
காட்சியளித்தது. அப்போதைய ஜப்பானிய அதிபர் ஓர் அறிக்கை வெளியிட்டார். நாங்கள் பொருளாதாரத்தில் வென்றுவிட்டோம் ஆனால் கலாச்சாரத்தில் தோற்றுவிட்டோம் என்பதே அந்த அறிக்கை. பெண்களை வீதிக்கு கொண்டு வந்ததால் ஏற்பட்ட விளைவு ஜப்பானில் கலாச்சாரங்கள் இருந்த தடம் தெரியாமல் போயின. இந்த நிலமையை நாடெங்கிலும் நடைமுறைபடுத்தவே ஐநாவின் தீர்மானம் துடித்துக்கொண்டிருக்கிறது. எனவேதான்
இத்தீர்மானங்களை எதிர்ப்பதென எகிப்து உள்ளிட்ட 17 முஸ்லிம் நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. இதற்கான முன்முயற்சியை எகிப்து எடுத்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கத்தர், சஊதி, ஈரான் முதலான நாடுகளும்
இதில் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு எதிரான இத்தீர்மானங்களைக் கடுமையாக எதிர்ப்போம் என இந்நாடுகள் முடிவு செய்துள்ளன.

அனாச்சாரம் தலைதூக்குகிறபோது ஒரு சமுதாயம் தண்டிக்கப்பட்டது

ذكر ابن عباس وابن إسحاق والسدى وغيرهم أن موسى عليه الصلاة والسلام لما قصد حرب الجبارين ونزل أرض بني كنعان من أرض الشام أتى قوم بلعام إلى بلعام وكان عنده اسم الله الأعظم فقالوا إن موسى رجل حديد  ومعه جنود كثيرة وإنه قد جاء يخرجنا ويقتلنا ويحلها لبني إسرائيل وأنت رجل مجاب الدعوة فاخرج فادع الله أن يردهم عنا فقال لهم ويلكم نبي الله معه الملائكة والمؤمنون كيف أدعو عليهم وأنا أعلم من الله ما أعلم وإني إن فعلت ذلك ذهبت دنياي وآخرتي فراجعوه وألحوا عليه فقال حتى أوامر ربي وكان لا يدعو حتى ينظر ما يؤمر به في المنام فوامر في الدعاء عليهم فقيل له في المنام لا تدع عليهم فقال لقومه إني قد وامرت ربي وإني قد نهيت فأهدوا له هدية فقبلها ثم راجعوه فقال لقومه حتى أوامر فوامر فلم يجىء إليه شيء فقال قد وامرت ولم يجيء إلى شيء فقالوا لو كره ربك أن تدعو عليهم لنهاك كما نهاك في المرة الأولى فلم يزالوا يتضرعون إليه حتى فتنوه فافتتن فركب أتانا له متوجها إلى جبل يطلعه على عسكر بني إسرائيل يقال له حسبان فلما سار عليها غير كثير ربضت به أي جلست فنزل عنها فضربها حتى إذا أذلقها أي أقلقها قامت فركبها فلم تسر به كثيرا حتى ربضت ففعل بها مثل ذلك فقامت فركبها فلم تسر به كثيرا حتى ربضت فضربها حتى أذلقها أذن الله لها بالكلام فكلمته حجة عليه فقالت ويحك يا بلعام أين تذهب ألا ترى الملائكة أمامي تردني عن وجهي هذا أتذهب إلى نبي الله والمؤمنين لتدعو عليهم فلم ينزع فخلى الله سبيلها فانطلقت حتى إذا أشرفت به على جبل حسبان جعل يدعو عليهم ولا يدعو عليهم بشيء إلا صرف به لسانه إلى قومه ولا يدعو لقومه بخير إلا صرف به لسانه إلى بني إسرائيل فقال له قومه أتدري ما تصنع إنما تدعو لهم وعلينا قال فهذا مالا أملك هذا شيء قد غلب الله عليه واندلع لسانه أي خرج فوقع على صدره فقال لهم قد ذهبت الآن مني الدنيا والآخرة فلم يبق إلا المكر والحيلة فسأمكر لكم وأحتال جملوا النساء وزينوهن وأعطوهن السلع ثم أرسلوهن إلى العسكر يبعنها فيه ومروهن لا تمنع امرأة نفسها من رجل أرادها فإنه إن زنى رجل واحد منهم كفيتموهم ففعلوا فلما دخل النساء العسكر مرت امرأة من الكنعانيين برجل من عظماء بني إسرائيل فقام إليها فأخذ بيدها حين أعجبته ثم أقبل بها حتى وقف بها على موسى فقال إني لأظنك ستقول هذه حرام عليك قال أجل هي حرام عليك لا تقربها قال فوالله لا نطيعك في هذا ثم دخل بها قبته فوقع بها فأرسل الله الطاعون على بني إسرائيل في الوقت
(مرقاة المفاتيح شرح مشكوة المصابيح)
போருக்கு வந்த பனூஇஸ்ரவேலர்களை வீழ்த்துவதற்கு எதிரிகள் கடைசியாய் எடுத்த ஆயுதம் பெண்களே. பெண்களின் அழகில் விழவைத்தார்கள். விபச்சாரம் செய்தாரகள். அதன் விளைவு அல்லாஹ் காலரா நோயை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் இறக்கினான்.

ஒரு சமுதாயம் தன்னுடைய கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் , பண்பாட்டையும் புறக்கணித்துவிடுகிறபோது அவைகள் கடும்வீழ்ச்சியை சந்திக்கும் என்பதற்கு இவைகளெல்லாம் எடுத்துக்காட்டுகள். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கலாச்சாரத்தை பேணி பாதுகாப்பது அவசியத்திலும் அவசியம். எனவே தான் பெருமானார் ஸல் அவர்கள் சுதந்திரம் என்றப் பெயரில் பெண்கள் வெளியே சுற்றுவதையோ, பிறர் பார்வை படும்படி தன்னை அழகுச் சீமாட்டியாக காட்சிபடுத்திக்கொள்வதை விரும்பவில்லை. காரணம் சமுதாயத்தின் அழிவிற்கும், நாகரிக சமுதாயத்தின் அடையாளத்தை அடியோடு அது பிடிங்கிவிடும் என்பதைத் தவிர வேறேதும் இல்லை.

அத்தர் பூசி வெளியே சுற்றுபவள் வேசியாவாள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَنْ ثَابِتِ بْنِ عُمَارَةَ الْحَنَفِيِّ عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ عَيْنٍ زَانِيَةٌ وَالْمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالْمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


மற்றொரு ஹதீஸில் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَدَعُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنْ النِّسَاءِ
எனக்கு பின்னால் ஆண்களின் மீது பெண்களை விட மிக இடையூறு அளிக்கக்கூடிய பித்னாவை நான் விட்டுச் செல்லவில்லை என்று பெருமானார் ஸல் அவர்கள் பகர்ந்தார்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَاصِمٍ عَنْ مَوْلَى أَبِي رُهْمٍ وَاسْمُهُ عُبَيْدٌ أَنَّ أَبَا هُرَيْرَةَ لَقِيَ امْرَأَةً مُتَطَيِّبَةً تُرِيدُ الْمَسْجِدَ فَقَالَ يَا أَمَةَ الْجَبَّارِ أَيْنَ تُرِيدِينَ قَالَتْ الْمَسْجِدَ قَالَ وَلَهُ تَطَيَّبْتِ قَالَتْ نَعَمْ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَيُّمَا امْرَأَةٍ تَطَيَّبَتْ ثُمَّ خَرَجَتْ إِلَى الْمَسْجِدِ لَمْ تُقْبَلْ لَهَا صَلَاةٌ حَتَّى تَغْتَسِلَ



நறுமணம் பூசி ஒரு பெண் மஸ்ஜிதிற்கு வந்தபோது அபூஹுரைரா ரலி அவர்கள் வழிமறித்து கேட்டார்கள். எங்கு செல்கிறாய் ? அதற்கு அந்தப் பெண் கூறினாள் மஸஜிதிற்கு மீண்டும் கேட்டார்கள் அதற்காகத்தான் நறுமணம் பூசியுள்ளாயா அதற்கு அந்தப்பெண் ஆம் என்று பதிலளித்தால். சற்றும் தாமதிக்காமல் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள் எந்தப்பெண் நறுமனம் பூசி பிறகு மஸ்ஜிதிற்கு வருவாளோ அந்தப்பெண் குளிக்கின்ற வரை அவளின்  தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாத என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள்.

எதற்கு சொல்கிறேன் ஒரு பெண் பிறர் பார்வை படும்படி தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தால் அது சமுதாயத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவே பெருமானார் தடுத்தார்கள் அதை அபூஹுரைரா ரலி அவர்கள் கடைபிடித்தார்கள். எப்பொழுது பெண் சுதந்திரம் என்ற பெயரில் எவரோடும் பழகலாம் யாரோடும் எப்பொழுது வேண்டுமானும் இருந்து விட்டுப் போகலாம், சுத்தலாம் என்ற கீழ்தரமான, புத்திகெட்ட தீர்மானங்கள் வருமோ அன்றைக்கே நாம் அத்தீர்மானத்தை நிறைவேற்றியவனும், அதற்கு ஒத்துழைப்பவனும் மனிதர்கள் அல்ல மிருகங்கள் தான்னென்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் ஐநாவின் தீர்மானம் ஊர்மானத்தை கப்பலேற்றுகிறதே தவிர கரைசேரக்கவில்லை.




No comments: